மேலும் அறிய

Crime: மனைவியுடன் ஏற்பட்ட தகராறு.. குடும்பத்தினர் 8 பேரை கொலை செய்த இளைஞர்! என்ன நடந்தது?

இந்த சம்பவம் சிந்த்வாரா மாவட்டத்தின் மஹூல்ஜிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போடல் கச்சார் கிராமத்தில் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 8 பேரும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் சொந்த குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரை கொன்று விட்டு நபர் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவம் சிந்த்வாரா மாவட்டத்தின் மஹூல்ஜிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போடல் கச்சார் கிராமத்தில் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 8 பேரும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். கொலையாளி இளைஞருக்கு கடந்த மே 21 ஆம் தேதி விமரிசையாக திருமணம் நடந்துள்ளது. ஆனால் தம்பதியினர் இருவருக்கும் தொடர்ச்சியாக தகராறு இருந்து வந்துள்ளது. 

இதனிடையே நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவி மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார். அனைவரும் இரவு  தூங்க சென்ற நிலையில் முதலில் தனது மனைவியை கோடாரியால் வெட்டி கொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து தாய், சகோதரி, சகோதரர், மைத்துனர், அண்ணி மற்றும் 3 குழந்தைகள் என அனைவரையும் ஒருவர் பின் ஒருவராக கொடூரமான முறையில் கோடாரியால் வெட்டிக் கொலை செய்துள்ளார். 

இந்த தாக்குதலில் 10 வயது மட்டும் காயங்களுடன் வீட்டிலிருந்து தப்பித்து ஓடியுள்ளார். நேராக அக்கம் பக்கத்தில் தூங்கி கொண்டிருந்த மக்களை கூச்சலிட்டு எழுப்பியதால் இந்த சம்பவம் வெளியே தெரிந்துள்ளது. உடனடியாக பொதுமக்கள் மஹூல்ஜிரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணீஷ் காத்ரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சம்பவம் நடந்த வீட்டை திறந்து பார்த்தால் அனைவரும் ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்தனர். அனைத்து உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

இதனைத் தொடர்ந்து கொலை செய்த இளைஞரை தேடிய நிலையில் அவர் வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் ஓடும் வாய்க்கால் அருகே இருக்கும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காயங்களுடன் தப்பிய குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த8 பேரை இளைஞர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. 


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும்.  தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. தங்களுக்கு மன அழுத்தமோ அல்லது தற்கொலை எண்ணங்களோ ஏற்பட்டால் கீழ்காணும் எண்ணுக்கு அழைத்து உதவி பெறவும்.

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை,

ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

தலைப்பு செய்திகள்

துக்க நிகழ்வுக்குச் சென்று திரும்பியபோது நேரிட்ட கொடூரம்: சீர்காழி அருகே உலுக்கிய சோகம்!
துக்க நிகழ்வுக்குச் சென்று திரும்பியபோது நேரிட்ட கொடூரம்: சீர்காழி அருகே உலுக்கிய சோகம்!
சீர்காழி விபத்து எதிரொலி: நட்ட நடுரோட்டில் பேருந்துகளுக்குள் புகுந்து எஸ்பி சினேகா பிரியா அதிரடி வேட்டை!
சீர்காழி விபத்து எதிரொலி: நட்ட நடுரோட்டில் பேருந்துகளுக்குள் புகுந்து எஸ்பி சினேகா பிரியா அதிரடி வேட்டை!
பெற்ற பிள்ளையா? கள்ளக்காதலா? 3 வயது மழலையின் அழுகுரலுக்கு நேர்ந்த கொடூர முடிவு!
பெற்ற பிள்ளையா? கள்ளக்காதலா? 3 வயது மழலையின் அழுகுரலுக்கு நேர்ந்த கொடூர முடிவு!
வாடிக்கையாளர் போல் நடித்து 4 மாதமாக 50 சவரன் நகைகள் திருட்டு !! பெண் சிக்கியது எப்படி ?
வாடிக்கையாளர் போல் நடித்து 4 மாதமாக 50 சவரன் நகைகள் திருட்டு !! பெண் சிக்கியது எப்படி ?

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
Hero Xoom 110: சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
Embed widget