மேலும் அறிய

Crime: கும்பகோணம் அருகே அதிர்ச்சி சம்பவம்.. ரயில் முன் பாய்ந்து தாய் - மகள்கள் உட்பட 5 பேர் தற்கொலை

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகேயுள்ள உத்தாணி பகுதியில் ரயில்வே கேட் ஒன்று அமைந்துள்ளது. இந்த கேட் அருகே குடமுருட்டி ஆற்றுப்பாலம் உள்ளது.

கும்பகோணம் அருகே இருவேறு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகேயுள்ள உத்தாணி பகுதியில் ரயில்வே கேட் ஒன்று அமைந்துள்ளது. இந்த கேட் அருகே குடமுருட்டி ஆற்றுப்பாலம் உள்ளது. இங்கு நேற்று மாலை 3.30 மணியளவில் செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது 40 வயதுமிக்க பெண் ஒருவர் தனது 2 மகளை கட்டி அணைத்தபடி ரயில் முன் கண்ணிமைக்கும் நேரத்தில் பாய்ந்தார். இதில் தூக்கி வீசப்பட்ட 3 பேரும் உடல்கள் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதுகுறித்து ரயில் என்ஜின் டிரைவர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு ரயில்வே போலீசார் சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், மகள்களுடன் தற்கொலை செய்துக் கொண்ட பெண் கும்பகோணம் நால்ரோடு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரது மனைவி ஆர்த்தி என்பதும்,  அவருடைய மகள்கள் ஆருத்ரா, சுபத்ரா இருவரும் என்பதும் தெரிய வந்தது. 

ராஜேஷ் கோவையில் உள்ள கட்டுமானம் தொடர்பான நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில், ஆர்த்தி கும்பகோணத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் உதவி மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். மகள்கள் இருவரும் முறையே 6 மற்றும் 4 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். தோழியின் வளைகாப்பு விழாவுக்கு செல்வதாக கூறிவிட்டு தனது மகள்களுடன் சென்ற ஆர்த்தி உத்தாணி கிராமத்திற்கு சென்று ரயில்வே கேட் அருகே ரயிலில் விழுந்துள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற ரீதியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மற்றொரு சம்பவம் 

இந்த சம்பவம் நடைபெற்ற அடுத்த சில மணி நேரத்தில் மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த தாயும், மகளும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மனைவி ரேவதி மற்றும் அவரது மகள் மகேஸ்வரி என்பவரும் தான் உயிரை மாய்த்து கொண்டுள்ளனர் என போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. மகேஸ்வரி 30 வயதான நிலையில் திருமணம் நடைபெறாமல் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மன வருத்தத்தில் இருந்த இருவரும் திருவிடைமருதூர் ரயில் நிலையம் அருகே மயிலாடுதுறையில் இருந்து வந்த மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கும்பகோணம் பகுதியில் ஒரே நாளில் இரு வேறு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


தற்கொலை தீர்வாகாது:

எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.

மாநில உதவிமையம் : 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

தலைப்பு செய்திகள்

" கள்ளக் காதலை கைவிடாத தாய் " கஞ்சா போதையில் மகன் செய்த கொடூர காரியம்
போதைப்பொருள் கும்பலுக்கு பேரதிர்ச்சி! முதல்வர் அதிரடி ஆக்ஷன் – தமிழ்நாடே அதிரும் 65 சிறப்பு படைகள் அமைப்பு!
போதைப்பொருள் கும்பலுக்கு பேரதிர்ச்சி! முதல்வர் அதிரடி ஆக்ஷன் – தமிழ்நாடே அதிரும் 65 சிறப்பு படைகள் அமைப்பு!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
RBI Loan Recovery: லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
GOLD AND SILVER RATE TODAY : யப்பா..ஒரே நாளில் சவரனுக்கு ரூ 2,400 உயர்ந்தது.! நகைப்பிரியர்களுக்கு ஷாக் -இன்றைய விலை இதோ..
யப்பா..ஒரே நாளில் சவரனுக்கு ரூ 2,400 உயர்ந்தது.! நகைப்பிரியர்களுக்கு ஷாக் -இன்றைய விலை இதோ..
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget