மேலும் அறிய

Crime: கும்பகோணம் அருகே அதிர்ச்சி சம்பவம்.. ரயில் முன் பாய்ந்து தாய் - மகள்கள் உட்பட 5 பேர் தற்கொலை

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகேயுள்ள உத்தாணி பகுதியில் ரயில்வே கேட் ஒன்று அமைந்துள்ளது. இந்த கேட் அருகே குடமுருட்டி ஆற்றுப்பாலம் உள்ளது.

கும்பகோணம் அருகே இருவேறு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகேயுள்ள உத்தாணி பகுதியில் ரயில்வே கேட் ஒன்று அமைந்துள்ளது. இந்த கேட் அருகே குடமுருட்டி ஆற்றுப்பாலம் உள்ளது. இங்கு நேற்று மாலை 3.30 மணியளவில் செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது 40 வயதுமிக்க பெண் ஒருவர் தனது 2 மகளை கட்டி அணைத்தபடி ரயில் முன் கண்ணிமைக்கும் நேரத்தில் பாய்ந்தார். இதில் தூக்கி வீசப்பட்ட 3 பேரும் உடல்கள் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதுகுறித்து ரயில் என்ஜின் டிரைவர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு ரயில்வே போலீசார் சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், மகள்களுடன் தற்கொலை செய்துக் கொண்ட பெண் கும்பகோணம் நால்ரோடு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரது மனைவி ஆர்த்தி என்பதும்,  அவருடைய மகள்கள் ஆருத்ரா, சுபத்ரா இருவரும் என்பதும் தெரிய வந்தது. 

ராஜேஷ் கோவையில் உள்ள கட்டுமானம் தொடர்பான நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில், ஆர்த்தி கும்பகோணத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் உதவி மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். மகள்கள் இருவரும் முறையே 6 மற்றும் 4 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். தோழியின் வளைகாப்பு விழாவுக்கு செல்வதாக கூறிவிட்டு தனது மகள்களுடன் சென்ற ஆர்த்தி உத்தாணி கிராமத்திற்கு சென்று ரயில்வே கேட் அருகே ரயிலில் விழுந்துள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற ரீதியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மற்றொரு சம்பவம் 

இந்த சம்பவம் நடைபெற்ற அடுத்த சில மணி நேரத்தில் மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த தாயும், மகளும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மனைவி ரேவதி மற்றும் அவரது மகள் மகேஸ்வரி என்பவரும் தான் உயிரை மாய்த்து கொண்டுள்ளனர் என போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. மகேஸ்வரி 30 வயதான நிலையில் திருமணம் நடைபெறாமல் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மன வருத்தத்தில் இருந்த இருவரும் திருவிடைமருதூர் ரயில் நிலையம் அருகே மயிலாடுதுறையில் இருந்து வந்த மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கும்பகோணம் பகுதியில் ஒரே நாளில் இரு வேறு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


தற்கொலை தீர்வாகாது:

எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.

மாநில உதவிமையம் : 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK: அதிமுகவில் வெடித்தது பிரச்னை ”எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்களே இல்லை” ஈபிஎஸ்-க்கு எதிராக செங்கோட்டையன் அதிருப்தி
ADMK: அதிமுகவில் வெடித்தது பிரச்னை ”எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்களே இல்லை” ஈபிஎஸ்-க்கு எதிராக செங்கோட்டையன் அதிருப்தி
Donald Trump: பறந்துகொண்டே பெயரை மாற்றிய ட்ரம்ப்...அமெரிக்க வளைகுடா ஆனது மெக்சிகோ வளைகுடா...
பறந்துகொண்டே பெயரை மாற்றிய ட்ரம்ப்...அமெரிக்க வளைகுடா ஆனது மெக்சிகோ வளைகுடா...
Manipur Crisis: பாஜகவின் ராஜதந்திரம் - அமலாகும் குடியரசு தலைவர் ஆட்சி? மணிப்பூரின் புதிய முதலமைச்சர் யார்?
Manipur Crisis: பாஜகவின் ராஜதந்திரம் - அமலாகும் குடியரசு தலைவர் ஆட்சி? மணிப்பூரின் புதிய முதலமைச்சர் யார்?
Valentines Day:
Valentines Day: "சேரா காதல்தான்.. ஆனால் தீராக்காதல்" காலத்திற்கும் அழியா ஒரு தலைக் காதல் படங்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மணிப்பூர் CM திடீர் ராஜினாமா! காலைவாரிய பாஜக MLA-க்கள்! அமித்ஷாவுடன் மீட்டிங்ஆயிரம் ஜன்னல் வீடு! 7 தலைமுறை... 600 பேர்! ஒரே இடத்தில் கூடிய குடும்பம்”பாஜக ரொம்ப கொடூரம்” கடும் கோபத்தில் ஸ்டாலின்! அண்ணாமலை ரியாக்‌ஷன்Tirupathur: தாய்க்கு பாலியல் தொல்லை.. திமுக நிர்வாகிக்கு வெட்டு! சித்தியை கொலை செய்த இளைஞர்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: அதிமுகவில் வெடித்தது பிரச்னை ”எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்களே இல்லை” ஈபிஎஸ்-க்கு எதிராக செங்கோட்டையன் அதிருப்தி
ADMK: அதிமுகவில் வெடித்தது பிரச்னை ”எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்களே இல்லை” ஈபிஎஸ்-க்கு எதிராக செங்கோட்டையன் அதிருப்தி
Donald Trump: பறந்துகொண்டே பெயரை மாற்றிய ட்ரம்ப்...அமெரிக்க வளைகுடா ஆனது மெக்சிகோ வளைகுடா...
பறந்துகொண்டே பெயரை மாற்றிய ட்ரம்ப்...அமெரிக்க வளைகுடா ஆனது மெக்சிகோ வளைகுடா...
Manipur Crisis: பாஜகவின் ராஜதந்திரம் - அமலாகும் குடியரசு தலைவர் ஆட்சி? மணிப்பூரின் புதிய முதலமைச்சர் யார்?
Manipur Crisis: பாஜகவின் ராஜதந்திரம் - அமலாகும் குடியரசு தலைவர் ஆட்சி? மணிப்பூரின் புதிய முதலமைச்சர் யார்?
Valentines Day:
Valentines Day: "சேரா காதல்தான்.. ஆனால் தீராக்காதல்" காலத்திற்கும் அழியா ஒரு தலைக் காதல் படங்கள்!
PM Modi Foreign Visit: ஃப்ரான்ஸ் டூ அமெரிக்கா - ட்ரம்ப் உடன் டின்னர், இன்று தொடங்கும் பிரதமர் மோடியின் பயணம் - முழு விவரம்
PM Modi Foreign Visit: ஃப்ரான்ஸ் டூ அமெரிக்கா - ட்ரம்ப் உடன் டின்னர், இன்று தொடங்கும் பிரதமர் மோடியின் பயணம் - முழு விவரம்
Thaipusam 2025: நாளை தைப்பூசம்! களைகட்டும் முருகன் கோயில்கள்! லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்!
Thaipusam 2025: நாளை தைப்பூசம்! களைகட்டும் முருகன் கோயில்கள்! லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்!
Watch Video: என்னடா வாழ்க்கை இது..! துக்க வீடான திருமண வீடு, 23 வயது இளம்பெண்ணுக்கு இப்படி ஒரு மரணமா?
Watch Video: என்னடா வாழ்க்கை இது..! துக்க வீடான திருமண வீடு, 23 வயது இளம்பெண்ணுக்கு இப்படி ஒரு மரணமா?
Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Embed widget