மேலும் அறிய

Crime: படிக்கச் சொன்ன தந்தை.. தூக்கில் தொங்கிய 4 ஆம் வகுப்பு சிறுமி.. திருவள்ளூரில் சோகம்

திருவள்ளூர் மாவட்டத்தில் தந்தை படிக்கச் சொல்லி திட்டியதால் சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டத்தில் தந்தை படிக்கச் சொல்லி திட்டியதால் சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் பெரிய குப்பம் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் தனது மனைவி கற்பகம் மற்றும் மகள் பிரதிக்‌ஷாவுடன் வசித்து வந்தார். பிரதிக்‌ஷா அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்தார். மேலும் இன்ஸ்டாகிராம் செயலியில் தனக்கென அக்கவுண்ட் வைத்திருக்கும் பிரதிக்‌ஷா அதில் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வருவது வழக்கமாம். இதனால் அவரது நண்பர்கள் வட்டத்தில் இன்ஸ்டா குயின் என அவர் அழைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. 

இதனிடையே நேற்று இரவு தேர்வுக்கு படிக்காமல் அச்சிறுமி தனது பாட்டி வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்ததாகவும், அப்போது அங்கு வந்த கிருஷ்ணமூர்த்தி மகளை படிக்கச் சொல்லி திட்டியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் பெற்றோர் இருவரும் வெளியே சென்றுவிட்டனர். வீட்டின் சாவி பிரதிக்‌ஷாவிடம் இருந்த நிலையில் விளையாடி முடித்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

1 மணி நேரம் கழித்து வீட்டுக்கு திரும்பிய பெற்றோர் வீட்டின் கதவை தட்டியும் திறக்கப்படாமல் இருந்துள்ளது. பிரதிக்‌ஷாவின் பெயரை அழைத்து பார்த்தபோதும் கதவு திறக்கப்படாததால் பயந்துபோன கிருஷ்ணமூர்த்தி படுக்கை அறை ஜன்னலை உடைத்து பார்த்துள்ளார். அப்போது அங்குள்ள ஜன்னல் கம்பியில் பிரதிக்‌ஷா தூக்கிட்டு  கொண்டது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுத சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும் அங்கு திரண்டனர்.

உடனடியாக வீட்டின் மாடி வழியாக உள்ளே சென்று படுக்கை அறை கதவை உடைத்து சிறுமியை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் 1 மணி நேரமாக தீவிர சிகிச்சை அளித்தும் பிரதிக்‌ஷா உயிரை காப்பாற்ற முடியவில்லை. இதனிடையே இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக பிரதிக்‌ஷாவின் வீட்டுக்குச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் கட்டில் மெத்தையின் மேல் சிறிய சேர் போட்டு அதன் மீது ஏறிய பிரதிக்‌ஷா துண்டை ஜன்னல் கம்பியில் கட்டி தூக்கிட்டுள்ளார். ஆனால் துண்டு கழுத்தை முழுவதும் இறுக்காமல் இருந்ததால் கிருஷ்ணமூர்த்தி வந்த பார்த்தபோது உயிருக்கு போராடி கொண்டிருந்தததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில்தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

தலைப்பு செய்திகள்

மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
சீர்காழி இளைஞருக்கு ஆயுள் தண்டனை: ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
சீர்காழி இளைஞருக்கு ஆயுள் தண்டனை: ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Skoda Slavia: 8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
Embed widget