மேலும் அறிய

திருச்சியில் பெண்ணிடம் பேச்சுக்கொடுத்து ரூ.2.75 லட்சம் பறிப்பு....பணம் இரட்டிப்பு கும்பலின் கைவரிசையா..?

திருச்சியில் பெண்ணிடம் ரூ.2.75 லட்சம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பணம் இரட்டிப்பு கும்பலின் கைவரிசையாக இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் ரேணுகா (வயது 30). இவர் தனது சகோதரர் குருபரனுடன் திருச்சியில் செல்போன் உதிரிபாகங்கள் வாங்க திருச்செந்தூரில் இருந்து பேருந்தில் நேற்று முன்தினம் திருச்சி வந்தனர். திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்தில் இருந்து இறங்கிய அவர்கள் வில்லியம்ஸ் சாலையில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்தனர். பின்னர் ஏற்கனவே தாங்கள் வைத்து இருந்த பணத்துடன் சேர்த்து மொத்தமாக ரூ.2.75 லட்சத்தை ஒரு பையில் வைத்து நடந்து சென்றனர். அப்போது அங்கு வந்த 2 பேர் அவர்களிடம் பேச்சுகொடுத்து கொண்டே ரேணுகாவிடம் இருந்த பணப்பையை பறித்து காரில் ஏறி தப்பி செல்ல முயன்றனர். இதனால் ரேணுகாவும், குருபரனும் கூச்சல் போட்டனர். சத்தம் கேட்டு ஓடி வந்த ஆட்டோ டிரைவர் ராஜா மற்றும் பொதுமக்கள் அவர்களை விரட்டி பிடித்தனர். இதில் காருக்குள் அமர்ந்து இருந்த 3 பேர் பணத்துடன் தப்பி ஓடினர். 2 பேர் மட்டும் சிக்கி கொண்டனர்.


திருச்சியில் பெண்ணிடம்  பேச்சுக்கொடுத்து ரூ.2.75 லட்சம் பறிப்பு....பணம் இரட்டிப்பு கும்பலின் கைவரிசையா..?

மேலும் விசாரணையில் அவர்கள், திண்டுக்கல்லை சேர்ந்த முகமதுஅன்சாரி, மதுரையை சேர்ந்த ஜெகநாதன் என்பது தெரியவந்தது. பின்னர் பிடிபட்ட 2 பேரையும் காருடன் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் முகமது அன்சாரி மீது ஏற்கனவே வழிப்பறி வழக்கு உள்ளது. இந்த கும்பல் பல்வேறு நபர்களிடம் பணத்தை இரட்டிப்பாக்கி கொடுப்பதாக கூறி மோசடிகளில் ஈடுபட்டு வருபவர்களா? இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். மேலும், இந்த சம்பவத்திலும் பணம் இரட்டிப்பாக்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி வழிப்பறியை அரங்கேற்றினார்களா? எனவும் தெரியவில்லை. இந்த சம்பவத்தில் பணத்துடன் தப்பி ஓடிய 3 பேரை வலைவீசி தேடி வருகிறோம் என்றும், அவர்களை பிடித்தால் தான் இந்த வழிப்பறி சம்பவத்தின் உண்மையான காரணம் என்ன?, இதன் பின்புலத்தில் யாரெல்லாம் உள்ளனர் என்பது தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.


திருச்சியில் பெண்ணிடம்  பேச்சுக்கொடுத்து ரூ.2.75 லட்சம் பறிப்பு....பணம் இரட்டிப்பு கும்பலின் கைவரிசையா..?

சைபர்கிரைம் காவல்துறையினர், தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பார்சலில் வெளிநாட்டு பணம் இருப்பதால் அதை இந்திய ரூபாயாக மாற்ற வேண்டும். அதற்கான அரசின் அனுமதி பெற ரூ.60 ஆயிரம் செலவாகும் என்று கூறுவார். அதன்பிறகு மேலும் ஒரு காரணத்தை கூறி பணம் கேட்பார்கள். இப்படியே கிட்டத்தட்ட ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கறந்துவிடுவார்கள். ஆனாலும் விலையுயர்ந்த அந்த பார்சல் வீடு வந்து சேராது. இதுபோன்ற மோசடி சம்பவங்கள் அதிகமாக நடப்பதாகவும், படித்தவர்கள் கூட இந்த மோசடியில் சிக்கி பணத்தை இழந்து வருவதாகவும் சைபர்கிரைம் காவல்துறையினர் வேதனை தெரிவித்துள்ளனர். ஆன்லைன் மோசடி குறித்த புகார்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டு இருப்பதாகவும், இவ்வாறு பாதிக்கப்படும் பொதுமக்கள் சைபர் கிரைம் உதவி எண்-1930-வில் புகார் செய்யலாம் என்றும், இணையவழியில்https://cybercrime.gov.inமூலம் புகார் அளிக்கலாம் என்றும் கூறி உள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

T20 Worldcup Prize Money: டி20 உலகக்கோப்பை மகுடம்! யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை? எத்தனை கோடி தெரியுமா?
T20 Worldcup Prize Money: டி20 உலகக்கோப்பை மகுடம்! யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை? எத்தனை கோடி தெரியுமா?
T20 World Cup 2024 Final: சண்டே மட்டும்தான் கஷ்டம்... மத்தபடி கப் நமக்குத்தான்! குஷியில் இந்திய ரசிகர்கள்! வரலாறு சொல்வது என்ன?
சண்டே மட்டும்தான் கஷ்டம்... மத்தபடி கப் நமக்குத்தான்! குஷியில் இந்திய ரசிகர்கள்! வரலாறு சொல்வது என்ன?
Breaking News LIVE: படிப்படியாக மதுக்கடைகளை குறைப்பதே அரசின் எண்ணம் - அமைச்சர் முத்துசாமி
Breaking News LIVE: படிப்படியாக மதுக்கடைகளை குறைப்பதே அரசின் எண்ணம் - அமைச்சர் முத்துசாமி
CM Stalin: கொடநாடு வழக்கில் இன்டர்போல், கள்ளக்குறிச்சிக்கு எதுக்கு சிபிஐ? - 2026-லும் திமுக தான் - ஸ்டாலின் அதிரடி
CM Stalin: கொடநாடு வழக்கில் இன்டர்போல், கள்ளக்குறிச்சிக்கு எதுக்கு சிபிஐ? - 2026-லும் திமுக தான் - ஸ்டாலின் அதிரடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

T20 World Cup Final :  இறுதிப்போட்டியில் இந்தியா..வீழ்த்துமா தென்னாப்பிரிக்கா?மகுடம் சூடப்போவது யார்?Dharmapuri Gender Reveal Issue : வசமாக சிக்கிய கும்பல்..LEFT&RIGHT வாங்கிய அதிகாரிBussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
T20 Worldcup Prize Money: டி20 உலகக்கோப்பை மகுடம்! யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை? எத்தனை கோடி தெரியுமா?
T20 Worldcup Prize Money: டி20 உலகக்கோப்பை மகுடம்! யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை? எத்தனை கோடி தெரியுமா?
T20 World Cup 2024 Final: சண்டே மட்டும்தான் கஷ்டம்... மத்தபடி கப் நமக்குத்தான்! குஷியில் இந்திய ரசிகர்கள்! வரலாறு சொல்வது என்ன?
சண்டே மட்டும்தான் கஷ்டம்... மத்தபடி கப் நமக்குத்தான்! குஷியில் இந்திய ரசிகர்கள்! வரலாறு சொல்வது என்ன?
Breaking News LIVE: படிப்படியாக மதுக்கடைகளை குறைப்பதே அரசின் எண்ணம் - அமைச்சர் முத்துசாமி
Breaking News LIVE: படிப்படியாக மதுக்கடைகளை குறைப்பதே அரசின் எண்ணம் - அமைச்சர் முத்துசாமி
CM Stalin: கொடநாடு வழக்கில் இன்டர்போல், கள்ளக்குறிச்சிக்கு எதுக்கு சிபிஐ? - 2026-லும் திமுக தான் - ஸ்டாலின் அதிரடி
CM Stalin: கொடநாடு வழக்கில் இன்டர்போல், கள்ளக்குறிச்சிக்கு எதுக்கு சிபிஐ? - 2026-லும் திமுக தான் - ஸ்டாலின் அதிரடி
CM Stalin: மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா தாக்கல் - தமிழ்நாட்டில் இனி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள்தண்டனை - ஸ்டாலின்
CM Stalin: மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா தாக்கல் - தமிழ்நாட்டில் இனி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள்தண்டனை - ஸ்டாலின்
Home Loan: வீட்டுக் கடனை சீக்கிரம் அடைக்கணுமா? அப்ப இந்த 5 வழிகளை ஃபாலோ பண்ணுங்களேன்!
Home Loan: வீட்டுக் கடனை சீக்கிரம் அடைக்கணுமா? அப்ப இந்த 5 வழிகளை ஃபாலோ பண்ணுங்களேன்!
Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!
Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!
Fire Accident: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 4 பேர் உயிரிழப்பு, மீட்பு பணிகள் தீவிரம்
Fire Accident: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 4 பேர் உயிரிழப்பு, மீட்பு பணிகள் தீவிரம்
Embed widget