மேலும் அறிய

திருச்சியில் பெண்ணிடம் பேச்சுக்கொடுத்து ரூ.2.75 லட்சம் பறிப்பு....பணம் இரட்டிப்பு கும்பலின் கைவரிசையா..?

திருச்சியில் பெண்ணிடம் ரூ.2.75 லட்சம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பணம் இரட்டிப்பு கும்பலின் கைவரிசையாக இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் ரேணுகா (வயது 30). இவர் தனது சகோதரர் குருபரனுடன் திருச்சியில் செல்போன் உதிரிபாகங்கள் வாங்க திருச்செந்தூரில் இருந்து பேருந்தில் நேற்று முன்தினம் திருச்சி வந்தனர். திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்தில் இருந்து இறங்கிய அவர்கள் வில்லியம்ஸ் சாலையில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்தனர். பின்னர் ஏற்கனவே தாங்கள் வைத்து இருந்த பணத்துடன் சேர்த்து மொத்தமாக ரூ.2.75 லட்சத்தை ஒரு பையில் வைத்து நடந்து சென்றனர். அப்போது அங்கு வந்த 2 பேர் அவர்களிடம் பேச்சுகொடுத்து கொண்டே ரேணுகாவிடம் இருந்த பணப்பையை பறித்து காரில் ஏறி தப்பி செல்ல முயன்றனர். இதனால் ரேணுகாவும், குருபரனும் கூச்சல் போட்டனர். சத்தம் கேட்டு ஓடி வந்த ஆட்டோ டிரைவர் ராஜா மற்றும் பொதுமக்கள் அவர்களை விரட்டி பிடித்தனர். இதில் காருக்குள் அமர்ந்து இருந்த 3 பேர் பணத்துடன் தப்பி ஓடினர். 2 பேர் மட்டும் சிக்கி கொண்டனர்.


திருச்சியில் பெண்ணிடம் பேச்சுக்கொடுத்து ரூ.2.75 லட்சம் பறிப்பு....பணம் இரட்டிப்பு கும்பலின் கைவரிசையா..?

மேலும் விசாரணையில் அவர்கள், திண்டுக்கல்லை சேர்ந்த முகமதுஅன்சாரி, மதுரையை சேர்ந்த ஜெகநாதன் என்பது தெரியவந்தது. பின்னர் பிடிபட்ட 2 பேரையும் காருடன் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் முகமது அன்சாரி மீது ஏற்கனவே வழிப்பறி வழக்கு உள்ளது. இந்த கும்பல் பல்வேறு நபர்களிடம் பணத்தை இரட்டிப்பாக்கி கொடுப்பதாக கூறி மோசடிகளில் ஈடுபட்டு வருபவர்களா? இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். மேலும், இந்த சம்பவத்திலும் பணம் இரட்டிப்பாக்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி வழிப்பறியை அரங்கேற்றினார்களா? எனவும் தெரியவில்லை. இந்த சம்பவத்தில் பணத்துடன் தப்பி ஓடிய 3 பேரை வலைவீசி தேடி வருகிறோம் என்றும், அவர்களை பிடித்தால் தான் இந்த வழிப்பறி சம்பவத்தின் உண்மையான காரணம் என்ன?, இதன் பின்புலத்தில் யாரெல்லாம் உள்ளனர் என்பது தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.


திருச்சியில் பெண்ணிடம் பேச்சுக்கொடுத்து ரூ.2.75 லட்சம் பறிப்பு....பணம் இரட்டிப்பு கும்பலின் கைவரிசையா..?

சைபர்கிரைம் காவல்துறையினர், தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பார்சலில் வெளிநாட்டு பணம் இருப்பதால் அதை இந்திய ரூபாயாக மாற்ற வேண்டும். அதற்கான அரசின் அனுமதி பெற ரூ.60 ஆயிரம் செலவாகும் என்று கூறுவார். அதன்பிறகு மேலும் ஒரு காரணத்தை கூறி பணம் கேட்பார்கள். இப்படியே கிட்டத்தட்ட ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கறந்துவிடுவார்கள். ஆனாலும் விலையுயர்ந்த அந்த பார்சல் வீடு வந்து சேராது. இதுபோன்ற மோசடி சம்பவங்கள் அதிகமாக நடப்பதாகவும், படித்தவர்கள் கூட இந்த மோசடியில் சிக்கி பணத்தை இழந்து வருவதாகவும் சைபர்கிரைம் காவல்துறையினர் வேதனை தெரிவித்துள்ளனர். ஆன்லைன் மோசடி குறித்த புகார்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டு இருப்பதாகவும், இவ்வாறு பாதிக்கப்படும் பொதுமக்கள் சைபர் கிரைம் உதவி எண்-1930-வில் புகார் செய்யலாம் என்றும், இணையவழியில்https://cybercrime.gov.inமூலம் புகார் அளிக்கலாம் என்றும் கூறி உள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
H-1B Visa Renewal Issue: அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
Government employees Old Pension: அரசு ஊழியர்களுக்கு பொங்கலுக்கு முன் குட் நியூஸ்.! அமைச்சர்களோடு பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
அரசு ஊழியர்களுக்கு பொங்கலுக்கு முன் குட் நியூஸ்.! அமைச்சர்களோடு பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
Embed widget