மேலும் அறிய

சேலம் சிறையில் செல்போனை பறித்ததால் ஆத்திரம் - வார்டனை பல் துலக்கும் பிரஷால் தாக்கிய 2 பேர் கைது

செல்போனை பறித்ததால் 2 ரவுடிகளும், வார்டன் கார்த்திக் மீது ஆத்திரத்தில் அவரை அடிக்கடி சீண்டி வந்ததும், திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதும் தெரியவந்தது

சேலம் மத்திய சிறையில் செல்போனை பறித்த கோபத்தில் வார்டனை பல் துலக்கும் பிரசால் தாக்கிய 2 கைதிகளை அஸ்தம்பட்டி காவல் துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டம் சரவணம் பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பாபு அமர்நாத் உள்பட 10 பேர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இவர்களின் எதிர்கோஷ்டிகளை சேர்ந்தவர்களும் அங்கு அடைக்கப்பட்டிருந்தனர். 

சேலம் சிறையில் செல்போனை பறித்ததால் ஆத்திரம் - வார்டனை பல் துலக்கும் பிரஷால் தாக்கிய 2 பேர் கைது

இதனால் இரண்டு கோஷ்டிகளுக்கு மோதிக் கொள்ளும் சூழ்நிலை உருவானது. இதன் காரணமாக பாபு, அமர்நாத் உள்பட 10 பேரை கடந்த டிசம்பர் மாதம் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார் உள்ளனர். இதனிடையே இவர்கள் சேலம் மத்திய சிறையில் செல்போனை பதுக்கி வைத்திருந்து அவ்வப்போது சிலரிடம் செல்போன் பயன்படுத்தி பேசி வருவதாக சிறைதுறை அதிகாரிகள் தகவல் கிடைத்தது. அதன்பேரில் சேலம் மத்திய சிறையில் தனிப்படை அமைத்து சிறை காவலர்கள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது தனிப்படையில் இடம் பெற்றுள்ள வார்டன் கார்த்திக் என்பவர், பாபுவிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்துள்ளனர்.

இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே செல்போனை பறித்த வார்டன் கார்த்திக் மீது ஆத்திரத்தில் இருந்தனர். பல் துலக்கும் பிரசால் வார்டனை சரமாரியாக குத்தி உள்ளன. அப்போது கார்த்திக்கின் சத்தம் கேட்டு வந்த சிறை காவலர்கள் அவரை மீட்டனர். இதனிடையே பாபு கோஷ்டியை சேர்ந்த 10 பேர் அங்கு திரண்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தத் தாக்குதல் பற்றி அஸ்தம்பட்டி காவல் துறையினரிடம் அளிக்கப்பட்டது. அதன்பேரில் பாபு, அமர்நாத் மீது கொலை மிரட்டல், அரசு பணி செய்யவிடாமல் தடுத்தல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக சிறைக்கு சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர். 

சேலம் சிறையில் செல்போனை பறித்ததால் ஆத்திரம் - வார்டனை பல் துலக்கும் பிரஷால் தாக்கிய 2 பேர் கைது

இதில் செல்போனை பறித்ததால் 2 ரவுடிகளும், வார்டன் கார்த்திக் மீது ஆத்திரத்தில் அவரை அடிக்கடி சீண்டி வந்ததும், திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து இரண்டு ரவுடிகளையும் அஸ்தம்பட்டி காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் பாபு மற்றும் அவரது கோஷ்டிகளை சேர்ந்தவர்களை தனித்தனி அறைகளில் அடைக்க முடிவு செய்துள்ளனர். மேலும் அவர்களை பாளையங்கோட்டை, மதுரை, வேலூர் உள்ளிட்ட சிறைகளுக்கும் மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல் துலக்கும் பிரசால் தாக்கப்பட்ட வார்டன் கார்த்திக் சிறிய காயங்களுடன் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தலைப்பு செய்திகள்

Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget