மேலும் அறிய

புதுச்சேரி : உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.11 லட்சம் : பறக்கும் படையினர் பறிமுதல்

ஆரோவில் அருகே, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூபாய் 11 லட்சத்தை, பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்ட நிலையில் புதியதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் வார்டு மறுவரையறை காரணமாக நடத்தப்படாமல் இருந்தது இந்த நிலையில் இந்த மாவட்டங்களில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் மாநிலத் தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை அறிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

புதுச்சேரி : உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.11 லட்சம் : பறக்கும் படையினர் பறிமுதல்

இந்த நிலையில் ஆரோவில் அடுத்த பெரிய முதலியார் சாவடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சோதனைச் சாவடி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி பாலசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்த பொலிரோ கார் நிறுத்தி வாகன சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். வாகன சோதனையில் வாகனத்தில் எவ்வித ஆவணங்களும் இன்றி ரூபாய் 11 லட்சம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதை அடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி பாலசுப்ரமணியன் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே முறுக்கேறி பகுதியைச் சேர்ந்த தவமணி (வயது 32) என்பவர் இவர் விவசாய உரம் மற்றும் மருந்து விற்பனை கடையை நடத்தி வருவது தெரியவந்தது. இந்த நிலையில் ரூபாய் 11 லட்சத்தை எவ்வித ஆவணங்கள் இன்றி எடுத்து வந்ததை பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி : உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.11 லட்சம் : பறக்கும் படையினர் பறிமுதல்

 

திருக்கோவிலூர் உளுந்தூர்பேட்டை பகுதியில் பறக்கும் படை சோதனையில் ரூ 2 லட்சம் சிக்கியது:

திருக்கோவிலூர் அருகே உள்ள கண்டாச்சிபுரத்தில் தாசில்தார் ஜெயலட்சுமி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் வந்த விழுப்புரம் வண்டிமேடு பகுதியை சேர்ந்த இப்ராஹிம் (வயது 48) எந்தவித ஆவணமும் இன்றி ரூ.1 லட்சத்து 52 ஆயிரத்து 900 வைத்திருந்ததை கண்டு பிடித்த அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன் மற்றும் சாம்ராஜ் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

அதேபோல் உளுந்தூர்பேட்டை அருகே திருவெண்ணெய்நல்லூர் சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிள்ளனூர் கிராமத்தை சேர்ந்த உலகரட்சகன்(வயது 21) என்பவர் எந்தவித ஆவணமும் இன்றி ரூ.77 ஆயிரம் வைத்திருந்ததை கண்டுபிடித்த பறக்கும்படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து உளுந்தூர்பேட்டை ஒன்றிய தேர்தல் நடத்தும் அதிகாரி சீனுவாசனிடம் ஒப்படைத்தனர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget