மேலும் அறிய

தஞ்சை: கூலி தொழிலாளி கொலை வழக்கு: 10 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

தஞ்சையில் கூலி தொழிலாளியை கொலை செய்த வழக்கில் 10 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டார்.

தஞ்சையில் கூலி தொழிலாளியை கொலை செய்த வழக்கில் 10 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டார்.

தஞ்சாவூர் கீழவாசல் ஆட்டுமந்தை தெருவை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் மனோகரன் (30). கூலி தொழிலாளி. இவர் மீது கொலை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் இருந்தது. கடந்த ஜூன் மாதம் 21ம் தேதி சேவப்பநாயக்கன்வாரி பகுதியை சேர்ந்த சிலர் மனேகரனை அழைத்து சென்று, மது அருந்தினர்.

பின்னர், அவரை கொலை செய்து ஆற்றில் வீசி விட்டு சென்றனர்.  இது குறித்து மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் ஜூன் 23ம் தேதி மனேகரன் உடல் கல்லணை கால்வாய் ஆற்றில் மீட்கப்பட்டது.

தொடர்ந்து மனேகரன் கொலை சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த சேவப்பநாயக்கன்வாரியை சேர்ந்த கண்ணன் மகன் இளநீர்மணி என்ற மணிகண்டன் (35), குமார் மகன் உமாமகேஸ்வரன் (24), கண்ணன் மகன் தினேஷ் (24) ஆகிய 3 பேரும் பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 24ம் தேதி சரண் அடைந்தனர்.

மேலும் சேவப்பநாயக்கன்வாரியை சேர்ந்த தனபால் மகன் சக்தி (20), ரமேஷ்குமார் மகன் கார்த்திக் (20), அர்ஜூனன் மகன் அஜித்குமார் (24), மருத்துவக்கல்லுாரி சாலை, நடராஜபுரத்தை சேர்ந்த அமுது மகன் அந்தோணிபிச்சை (35) ஆகிய நான்கு பேரையும் மேற்கு போலீசார் கைது செய்தனர். இதை போல சேவப்பநாயக்கன்வாரி நடுக்குளம் பகுதியை சேர்ந்த துரை மகன் விஜய் (30), சேவப்பநாயக்கன்வாரி வடகரையை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் அருண்குமார் (25), சேகர் மகன் நடராஜ் (21) ஆகியோர் தஞ்சை ஜூடீசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டு 1-ல் சரண் அடைந்தனர்.

இது தொடர்பாக எஸ்.பி., ரவளிப்ரியா இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 10  பேரையும் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மேற்கண்ட 10 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து மணிகண்டன் உட்பட 10 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

 




இளம்பெண் தற்கொலை


தஞ்சை: கூலி தொழிலாளி கொலை வழக்கு: 10 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
தஞ்சை ரெட்டிபாளையம் வெங்கடேஷ்வரா நகரை சேர்ந்தவர் சுதர்சன் (32). இவருக்கும், திருவாரூர் மாவட்டம் புலிவலம் காந்திநகரை சேர்ந்த நீலவாணன் மகள் சுடர்மணி என்பவருக்கும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்தது. அடிக்கடி சண்டை நடந்து வந்ததால் மனமுடைந்த சுடர்மணி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தந்தை நீலவாணன் தன் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கள்ளப்பெரம்பர் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி மூன்று ஆண்டுகளே ஆவதால் கோட்டாட்சியர் ரஞ்சித் தனி விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Ather Rizta Record Sales: குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget