மேலும் அறிய

சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 3.12 கோடி ரூபாய் அபராதம் விதித்த செபி.. விசாரணை விவரம் என்ன?

இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் விதித்த அபராதத்தை சித்ரா ராமகிருஷ்ணா செலுத்தத் தவறியதை அடுத்து இந்த நோட்டீஸை தற்போது அந்த நிறுவனம் அனுப்பியுள்ளது.

பங்குச் சந்தையில் நிர்வாகக் குறைபாடுகள் தொடர்பான வழக்கில் ரூ.3.12 கோடி செலுத்துமாறு என்எஸ்இயின் முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு கேபிடல் மார்க்கெட் ரெகுலேட்டரான செபி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனை 15 நாட்களுக்குள் செலுத்துமாறு செபி வலியுறுத்தியுள்ளது.

இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் விதித்த அபராதத்தை சித்ரா ராமகிருஷ்ணா செலுத்தத் தவறியதை அடுத்து இந்த நோட்டீஸை தற்போது அந்த நிறுவனம் அனுப்பியுள்ளது.

முன்னதாக, தேசிய பங்குச்சந்தை பரிமாற்றம் எனப்படும் என்.எஸ்.இ.யின் சி.இ.ஓ.வாக பொறுப்பு வகித்தவர் சித்ரா ராமகிருஷ்ணன். இவர் தற்போது அந்த பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இந்த நிலையில், இவர் என்.எஸ்.இ.வின் சி.இ.ஓ.வாக பொறுப்பு வகித்தபோது இணை இருப்பிட மோசடி மற்றும் பங்குச்சந்தைகளை கையாளுதலில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கடந்த 2018ம் ஆண்டு என்.எஸ்.இ.யின் சர்வர் கட்டமைப்பை தவறாக பயன்படுத்தியதாக கூறி இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது, இந்த வழக்கின்கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சர்வரை தவறாக பயன்படுத்திய தரகர்களுக்கு சந்தைத் தரவின் முன்னுரிடைம அணுகலை வழங்க சேவையகம தவறாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

சித்ரா ராமகிருஷ்ணன் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் டெல்லி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுவை தாக்கல் செய்திருந்தார். ஆனால், டெல்லி நீதிமன்றம் அவரது முன்ஜாமீன் மனுவை ரத்து செய்தது. சித்ரா ராமகிருஷ்ணன் கடுமையான குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த வழக்கில் முழு உண்மையை வெளிக்கொணர அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று வாதிட்டதாலும் அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு சித்ரா ராமகிருஷ்ணனின் ஆலோசகராக செயல்பட்ட ஆனந்த் சுப்ரமணியத்தை போலீசார் இந்த வழக்கு விசாரணை தொடர்பாக கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சித்ரா ராமகிருஷ்ணனின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், கடந்த நான்கு ஆண்டுகளாக சி.பி.ஐ. இந்த வழக்கில் செயலற்று இருந்ததாகவும் கூறியது.

இவர் மீதான புகார்கள் என்ன?

இமயமலையில் வசிக்கும் முகம் தெரியாத ஆன்மீக சாமியார் ஒருவருடன், பங்குச் சந்தையின் நிதிக் கணிப்புகள், வணிகத் திட்டங்கள் மற்றும் போர்டு நிகழ்ச்சி நிரல் உள்ளிட்ட தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாக புகார் சித்ரா ராமகிருஷ்ணன் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. 

கடந்த 2013 முதல் 2016 இடைப்பட்ட காலத்தில் தேசிய பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குநராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்தார் சித்ரா இராமகிருஷ்ணன். தொடர்ந்து தனிப்பட்ட காரணங்களுக்காக அந்த பதவியில் இருந்து விலகினார். இமயமலையில் வசிக்கும் ஆன்மீக சாமியாரின் செல்வாக்கின் கீழ் சித்ரா ராம்கிருஷ்ணா எடுத்த முடிவுகளில், எந்த மூலதன சந்தை அனுபவமும் இல்லாத ஆனந்த் சுப்ரமணியன் என்ற நிர்வாகியை ஆலோசகராகவும், என்.எஸ்.இ-ன் இயக்க அதிகாரியாகவும் நியமித்தது தொடர்பாக இவர் மீது குற்றம் சாட்டப்பப்பட்டது. கடந்த பிப்ரவரி 17-ம் தேதி (வியாழக்கிழமை) அன்று சித்ரா ராமகிருஷ்ணன் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். இந்நிலையில், சாமியார் என்றொருவருக்கு உருவம் இல்லையென்று அது ஒரு ‘ஆன்மீக சக்தி’ என்றும் சித்ரா ராமகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Repo Rate Reduced: ரெப்போ வட்டி விகிதத்தை 0.5% குறைத்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு
Repo Rate Reduced: ரெப்போ வட்டி விகிதத்தை 0.5% குறைத்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு
Chinnaswamy stampede: 11 பேரின் உயிரை பறித்த கூட்ட நெரிசல் - ஆர்சிபி கேங்கை தூக்கிய பெங்களூரு போலீஸ், அப்ப அடுத்து?
Chinnaswamy stampede: 11 பேரின் உயிரை பறித்த கூட்ட நெரிசல் - ஆர்சிபி கேங்கை தூக்கிய பெங்களூரு போலீஸ், அப்ப அடுத்து?
Chenab Railway Bridge: 1400 கோடி பிரம்மாண்டம்.. ஈபிள் டவரை மிஞ்சிய செனாப் பாலம்.. இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
Chenab Railway Bridge: 1400 கோடி பிரம்மாண்டம்.. ஈபிள் டவரை மிஞ்சிய செனாப் பாலம்.. இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
Patuadi Trophy: ரைட்ரா, இனி பட்டோடி கோப்பை கிடையாது -  IND - ENG சீரிஸ், சச்சின் - ஆண்டர்சன் ரசிகர்கள் ஷாக்
Patuadi Trophy: ரைட்ரா, இனி பட்டோடி கோப்பை கிடையாது - IND - ENG சீரிஸ், சச்சின் - ஆண்டர்சன் ரசிகர்கள் ஷாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Senthil Balaji : ADMK PMK Alliance | Aadhav Arjuna | ”என்ன மன்னிச்சுடுங்க” இபிஎஸ் குறித்த ஒருமை பேச்சு! வருத்தம் தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!Nainar vs Annamalai |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Repo Rate Reduced: ரெப்போ வட்டி விகிதத்தை 0.5% குறைத்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு
Repo Rate Reduced: ரெப்போ வட்டி விகிதத்தை 0.5% குறைத்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு
Chinnaswamy stampede: 11 பேரின் உயிரை பறித்த கூட்ட நெரிசல் - ஆர்சிபி கேங்கை தூக்கிய பெங்களூரு போலீஸ், அப்ப அடுத்து?
Chinnaswamy stampede: 11 பேரின் உயிரை பறித்த கூட்ட நெரிசல் - ஆர்சிபி கேங்கை தூக்கிய பெங்களூரு போலீஸ், அப்ப அடுத்து?
Chenab Railway Bridge: 1400 கோடி பிரம்மாண்டம்.. ஈபிள் டவரை மிஞ்சிய செனாப் பாலம்.. இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
Chenab Railway Bridge: 1400 கோடி பிரம்மாண்டம்.. ஈபிள் டவரை மிஞ்சிய செனாப் பாலம்.. இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
Patuadi Trophy: ரைட்ரா, இனி பட்டோடி கோப்பை கிடையாது -  IND - ENG சீரிஸ், சச்சின் - ஆண்டர்சன் ரசிகர்கள் ஷாக்
Patuadi Trophy: ரைட்ரா, இனி பட்டோடி கோப்பை கிடையாது - IND - ENG சீரிஸ், சச்சின் - ஆண்டர்சன் ரசிகர்கள் ஷாக்
Elon Musk: ”நன்றி கெட்ட ட்ரம்ப், நான் இல்லைன்னா வீட்டுக்கு தான் போயிருக்கணும்” - எலான் மஸ்க் ஆவேசம்
Elon Musk: ”நன்றி கெட்ட ட்ரம்ப், நான் இல்லைன்னா வீட்டுக்கு தான் போயிருக்கணும்” - எலான் மஸ்க் ஆவேசம்
Thug Life Box Office: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - வசூலை வாரிக்குவித்ததா தக் லைஃப்? கமல்ஹாசனின் முதல் நாள் சம்பவம்
Thug Life Box Office: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - வசூலை வாரிக்குவித்ததா தக் லைஃப்? கமல்ஹாசனின் முதல் நாள் சம்பவம்
TOP 10 SUVs May: என்ன இருக்கு இந்த காரில்? மே மாதத்தில் வாங்கி குவிக்கப்பட்ட எஸ்யுவிகள் - டான்ஸ் ஆடும் டாடா
TOP 10 SUVs May: என்ன இருக்கு இந்த காரில்? மே மாதத்தில் வாங்கி குவிக்கப்பட்ட எஸ்யுவிகள் - டான்ஸ் ஆடும் டாடா
பக்கா ஸ்கெட்சுடன் மதுரை வரும் அமித் ஷா.. காய் நகர்த்தும் குருமூர்த்தி.. இனி பரபரப்புக்கு பஞ்சமிருக்காது
பக்கா ஸ்கெட்சுடன் மதுரை வரும் அமித் ஷா.. காய் நகர்த்தும் குருமூர்த்தி.. இனி பரபரப்புக்கு பஞ்சமிருக்காது
Embed widget