மேலும் அறிய

illegal PF withdrawal : இ.பி.எப் வைப்பு நிதியில் இருந்து ரூ.37 கோடி கையாடல் - விசாரணை தீவிரம்!

வெளிநாடுகளுக்கு சென்ற பி.எப் சந்தாதாரர்கள் (அல்லது) வேறு பணிக்கு மாறிய பின்பு பி.எப் கணக்கை மாற்றம் செய்யாத சந்ததார்களின் கணக்கில் இருந்து ஒரு பகுதியை பண மோசடி செய்துள்ளனர். 

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மும்பை மண்டல அலுவலகத்தில்  இருந்து முறைகேடாக ரூ. 37 கோடி ரூபாய் கையாடல் செய்திருப்பது தெரியவந்துள்ளது. 

பெரும்பாலும், நீண்ட காலம் பங்களிப்பு இல்லாத கணக்குகளில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் பணத்தை கையாடல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, வெளிநாடுகளுக்கு சென்ற பி.எப் சந்தாதாரர்கள் (அல்லது) வேறு பணிக்கு மாறிய பின்பு பி.எப் கணக்கை மாற்றம் செய்யாத சந்ததார்களின் கணக்கில் இருந்து ஒரு பகுதியை பண மோசடி செய்துள்ளனர். 

கொரோனா தொற்று சமயத்தில் இபிஎப் சந்தாதாரர்கள் சிறப்பு முன்பணம் எடுத்துக்கொள்ளும் வசதி பிரதமரின் ஏழைகள் நலன் திட்டத்தின் கீழ்(PMGKY) கடந்த 2020 மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விதிமுறையின் கீழ், 3 மாத அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படி (டி.ஏ) (அல்லது) இபிஎப் கணக்கில் உள்ள நிலுவைத் தொகையில் 75 சதவீதம் இதில் எது குறைவோ, அதை திருப்பிச்செலுத்த தேவையில்லாத முன்பணமாக (non-refundable COVID-19 advance) இபிஎப் சந்தாதாரர்கள் எடுத்துக்கொள்ளலாம். தற்போது, வரை இபிஎப்ஓ 76.31 லட்சம் கோவிட்-19 முன்பண கோரிக்கைகளை ஏற்று, உறுப்பினர்களுக்கு  மொத்தம் ரூ.18,698.15 கோடி விநியோகித்துள்ளதாக இபிஎஃப் அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. 

மேலும், கொரோனா இரண்டாவது அலையை முன்னிட்டு, இபிஎப் சந்தாதாரர்கள், தங்கள் கணக்கில் இருந்து 2-வது முறையாக முன்பணம் எடுத்துக்கொள்ள தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி கழகம் (இபிஎப்ஓ) முன்னதாக  அனுமதியளித்தது.

குறைவான தொகைக்கும், உறுப்பினர்களால் விண்ணப்பிக்க முடியும். இந்த கோவிட்-19 முன்பணம், தொற்று காலத்தில் இபிஎப் உறுப்பினர்களுக்கு குறிப்பாக ரூ.15,000-க்கும் கீழ் சம்பளம் பெறுபவர்களுக்கு மிகுந்த உதவியாக இருந்து வந்தது.  

முன்னதாக, இந்த விவகாரம் குறித்து 'தி இந்து' ஆங்கில நாளிதழிடம் பேசிய  மத்திய பிஎஃப் கமிஷனர் சுனில் பர்த்வால் ," விரிவான  உள்கட்ட  விசாரணை நடைபெற்று வருகிறது. பொய்யான கணக்குகளில் (Non-Existent Accounts) இருந்து நிலுவைத் தொகை திரும்பப் பெறப்பட்டுள்ளது. இபிஎப் சந்தாதாரர்களின் கணக்கில் எந்த மோசடியும் நடைபெற வில்லை, சந்தாதாரர்ககளின்  வைப்பு நிதி பாதுகாப்பாக உள்ளது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.    


illegal PF withdrawal : இ.பி.எப் வைப்பு நிதியில் இருந்து ரூ.37 கோடி கையாடல் - விசாரணை தீவிரம்!

"இருப்பினும், மும்பை மண்டல காண்டிவிலி அலுவலகத்தில் உள்ள சில ஊழியர்களுக்கும் தொடர்பு இருப்பது முதற்கட்ட  விசாரணையில் தெரியவந்துள்ளது" என்று தெரிவித்தார். 

இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக நான்கு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.    

ஊழியர் வருங்கால வைப்பு நிதி: 

மாத சம்பளம் வாங்கும் அனைத்து தொழிலாளர்களுக்கு அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனங்கள் இ.பி.எப். (EPF) எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை (Employee Provident fund) வழங்கி வருகிறது. பொதுவாக இது மாதம் தோறும் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு, அவரது பி.எப். கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. தொழிலாளர்கள் இந்த பணத்தினை தற்பொழுது தேவைப்படும் பொழுது pf advance ஆகவும்,  பணி ஓய்வுக்குப் பின்னர் முழுமையாக எடுக்கவும் பிஎப் அலுவலகம் அனுமதிக்கிறது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை பெற விண்ணப்பிப்பதற்கு யு.ஏ.என் (UAN) அல்லது யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் (Universal Account Number) எனப்படும் பொதுக் கணக்கு எண்ணும் அதனை ஆக்டிவேட் செய்ய பயன்படுத்திய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணும் செயல்பாட்டில் இருக்க வேண்டும். அத்துடன் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குடன் ஆதார் எண், பான் எண் போன்றவையும் இணைக்கப்பட்டிருக்கிறதா? என்பதனை உறுதி செய்துக்கொள்ளவேண்டும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
L Murugan :
L Murugan : "யாருடன் கூட்டணி? தாய் மொழிக்கு முக்கியத்துவம்” அடித்து பேசிய எல்.முருகன்..!
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
P. Chidambaram :  ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
P. Chidambaram : ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
L Murugan :
L Murugan : "யாருடன் கூட்டணி? தாய் மொழிக்கு முக்கியத்துவம்” அடித்து பேசிய எல்.முருகன்..!
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
P. Chidambaram :  ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
P. Chidambaram : ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
Disabled Astronaut: வரலாற்றில் முதல்முறை..! யார் இந்த ஜான் மெக்ஃபால்? விண்வெளிக்கு பறக்கும் மாற்றுத்திறனாளி
Disabled Astronaut: வரலாற்றில் முதல்முறை..! யார் இந்த ஜான் மெக்ஃபால்? விண்வெளிக்கு பறக்கும் மாற்றுத்திறனாளி
3-Language Policy  : “மும்மொழிக் கொள்கையை திமுக எதிர்ப்பது ஏன்” வெளியான உண்மை காரணம்..!
3-Language Policy : “மும்மொழிக் கொள்கையை திமுக எதிர்ப்பது ஏன்” வெளியான உண்மை காரணம்..!
DELHI CM: டெல்லி முதலமைச்சர்  ஆகும் பெண் எம்.எல்.ஏ.,? பிப்.18ம் தேதி பதவியேற்பு? 15 அமைச்சர்களின் லிஸ்ட்..!
DELHI CM: டெல்லி முதலமைச்சர் ஆகும் பெண் எம்.எல்.ஏ.,? பிப்.18ம் தேதி பதவியேற்பு? 15 அமைச்சர்களின் லிஸ்ட்..!
பணியிடத்தில் அலுவலக ரீதியாக ஊழியர்களை கண்டிப்பது குற்றமாகாது: உச்சநீதிமன்றம்
பணியிடத்தில் அலுவலக ரீதியாக ஊழியர்களை கண்டிப்பது குற்றமாகாது: உச்சநீதிமன்றம்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.