![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Petrol-Diesel Price, 2nd September: மாற்றமின்றி தொடரும் பெட்ரோல் டீசல் விலை..! இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையில் தொடர்கிறது
![Petrol-Diesel Price, 2nd September: மாற்றமின்றி தொடரும் பெட்ரோல் டீசல் விலை..! இன்றைய நிலவரம் என்ன? Petrol Diesel Price Today 2nd September 2021 Know Rates Fuel Price in your city Chennai Tamilnadu Petrol-Diesel Price, 2nd September: மாற்றமின்றி தொடரும் பெட்ரோல் டீசல் விலை..! இன்றைய நிலவரம் என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/19/c69f365fd729d7c4d277660a8e17ee83_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையில் தொடர்கிறது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.08க்கும், ஒரு லிட்டர் டீசல், ரூ.93.38க்கும் விற்பனையாகி வருகிறது.
இதற்கிடையே, வீட்டில் உபயோகிக்கும் சமையல் எரிவாயு (LPG Gas Cylinder) விலை நேற்று ரூ.25 அதிகரித்தது.14 கிலோ சமையல் எரிவாயுவின் விலை 25 ரூபாய் அதிகரித்து ரூ.900க்கு நேற்று முதல் விற்கப்படுகிறது.
சமையல் எரிவாயு சிலிண்டர் எந்தெந்த மாதம் எவ்வளவு உயர்வு?
மாதம் | விலை |
அக்டோபர் 1 | 610 |
நவம்பர் 1 | 610 |
டிசம்பர் 15 | 685 |
ஜனவரி 1 | 710 |
பிப்ரவரி 25 | 810 |
மார்ச் 1 | 835 |
ஏப்ரல் 1 | 825 |
மே 1 | 825 |
ஜூன் 1 | 825 |
ஜூலை 1 | 850 |
ஆகஸ்ட் 17 | 875 |
செப்டம்பர் 1 | 900 |
முன்னதாக, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதிநிலையை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, “இந்தியாவிலே தமிழ்நாட்டில்தான் இருசக்கர வாகனங்கள் அதிகம். பெட்ரோல் விலை உயர ஒன்றிய அரசுதான் காரணம் என்றாலும் மாநில அரசு வரியை குறைக்கிறது. பெட்ரோல் விலை மீதான வரி லிட்டருக்கு ரூபாய் 3 குறைக்கப்படுகிறது. இது உழைக்கும் வர்க்கத்தினருக்கும், நடுத்தர குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய நிவாரணமாக அமையும். இதனால், ஆண்டுக்கு ரூபாய் 1,160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்“ இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மீதான சுங்க வரி குறைக்கப்படாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள நிர்மலா சீதாராமன், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் வெளியிடப்பட்ட எரிபொருள் பத்திரங்களுக்கு இப்போதைய அரசு 5 ஆண்டுகளில் ரூ.70195 கோடி வட்டி செலுத்துள்ளது. 2026க்குள் மேலும் ரூ.37000 கோடி வட்டியாக செலுத்த வேண்டியுள்ளதால், எரிபொருள் விலையை குறைக்க இயலவில்லை என்றார்.
மேலும், எண்ணெய் பத்திரங்கள் காரணமாக ஏற்பட்ட கடன் சுமையால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க இயலவில்லை. மக்களின் கவலை ஏற்புடையதே. ஆனால் மத்திய மாநில அரசு விவாதித்து வழியை உருவாக்கும் வரை தீர்வு இல்லை. 1.44 லட்சம் கோடிக்கு எண்ணெய் பத்திரங்களை வெளியிட்டு காங்கிரஸ் அரசு எரிபொருள் விலையை குறைத்தது. காங்கிரஸ் அரசு வெளியிட்ட எண்ணெய் பத்திரங்களுக்கு வட்டி செலுத்துவதால் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது என்றார்.
கடந்த 2014ம் ஆண்டு முதல் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை கடுமையாக உயர்த்தி வருகிறது. 2014ம் ஆண்டு மே மாதத்தில் லிட்டருக்கு ரூபாய் 9.48 ஆக இருந்த பெட்ரோல் மீதான வரி, 2021 மே மாதத்தில் லிட்டருக்கு ரூபாய் 32.9 ஆக உயர்ந்துள்ளது. மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை 216 சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு மத்திய அரசிடம் இருந்து வரிபங்கானது மற்ற மாநிலங்களைவிட குறைவாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)