மேலும் அறிய

Fuel Shortage: இத்தனை நாளுக்கு எரிபொருள் இருக்கு.. மத்திய அரசு கொடுத்த அப்டேட்!

Fuel Shortage in India: உலகளவில் என்ன நடந்தாலும், ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குத் தேவையான சீரான விநியோகம் உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் அல்லது சமையல் எரிவாயுவுக்கு எங்கும் பற்றாக்குறை  ஏற்படவில்லை என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது, 

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “பெட்ரோல், டீசல் அல்லது எல்பிஜி தொடர்பாக பரப்பப்படும் தவறான தகவல்களும், பீதியைத் தூண்டும் கதைகளும் முற்றிலும் ஆதாரமற்றவை. பொதுமக்கள் வதந்திகளை கண்டு பீதியடைய வேண்டாம். ஒவ்வொரு குடிமகனுக்கும் தடையற்ற எரிசக்தி கிடைப்பதை உறுதி செய்வதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஹோர்முஸ் ஜலசந்தியில் நிலவும் சூழ்நிலைக்கு மத்தியிலும், முன்பு அவ்வழியாக வந்ததை விட அதிகமான கச்சா எண்ணெயை, இந்தியா இன்று உலகம் முழுவதும் உள்ள தனது 41-க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்களிடமிருந்து பெற்று வருகிறது.ஒவ்வொரு சுத்திகரிப்பு ஆலையும் 100%க்கும் அதிகமான பயன்பாட்டில் இயங்கி வருவதாகவும், அடுத்த 60 நாட்களுக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கனவே உறுதி செய்துள்ளது.  எனவே விநியோகத்தில் எந்த பற்றாக்குறையும் இல்லை. இந்தியாவிடம் 6 நாட்களுக்கு மட்டுமே கையிருப்பு உள்ளது என்ற செய்திகளில் உண்மையில்லை. மேற்காசிய போர் தொடங்கி  27வது நாளுக்குப் பிறகும் கூட, இந்தியாவில்  மொத்தம் 74 நாட்களுக்கான கையிருப்புத் திறன் இருக்கிறது. 

உலகளவில் என்ன நடந்தாலும், ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குத் தேவையான சீரான விநியோகம் உள்ளது எனவும் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் கூறியுள்ளது. பெட்ரோலியப் பொருட்களைச் சுத்திகரிப்பதில் உலகின் 4வது பெரிய நாடாகவும், 5வது பெரிய ஏற்றுமதியாளராகவும் இந்தியா திகழ்கிறது. இந்தியா உலகிற்கு நிகர ஏற்றுமதியாளராக இருப்பதால், உள்நாட்டு பெட்ரோல் மற்றும் டீசல் கிடைப்பது கட்டமைப்பு ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான சில்லறை எரிபொருள் நிலையங்கள் கட்டுபாடின்றி இயங்கி வருகிறது. 

அதேபோல் சமையல் எரிவாயு பற்றாக்குறையும் ஏற்படவில்லை. எல்பிஜி கட்டுப்பாட்டு உத்தரவைத் தொடர்ந்து உள்நாட்டு உற்பத்தி 40% அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்திக்கு மேலாக, அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளில் இருந்து 800 டிஎம்டி உறுதிசெய்யப்பட்ட உள்வரும் எல்பிஜி சரக்குகள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளன. இதனால் ஒரு மாதத்திற்குமான விநியோகம் உறுதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து வர்த்தக சிலிண்டர் ஒதுக்கீடு 50% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏற்பட்ட பீதி காரணமாக சிலிண்டர் தேவை 89 லட்சம் சிலிண்டர்களாக உயர்ந்திருந்த நிலையில் தற்போது 50 லட்சமாக குறைந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு குறித்து தவறான தகவல்களைப் பரப்புவது, பொருந்தக்கூடிய சட்டங்களின்படி ஒரு குற்றமாகும். வேண்டுமென்றே பீதியை உருவாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

விருதுநகர் இளைஞர்களே.. 25% மானியத்துடன் தொழில் கடன்: அரசு வழங்கும் பொன்னான வாய்ப்பு!
விருதுநகர் இளைஞர்களே.. 25% மானியத்துடன் தொழில் கடன்: அரசு வழங்கும் பொன்னான வாய்ப்பு!
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை.- இன்றைய விலை நிலவரம் இதோ..
நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை.- இன்றைய விலை நிலவரம் இதோ..
2000 Rupee Note: 2000 ரூபாய் நோட்ட மாத்த மிஸ் பண்ணிட்டீங்களா.? லாஸ்ட் சான்ஸ்.? RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
2000 ரூபாய் நோட்ட மாத்த மிஸ் பண்ணிட்டீங்களா.? லாஸ்ட் சான்ஸ்.? RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Embed widget