By: குலசேகரன் முனிரத்தினம் | Updated at : 09 May 2024 12:43 PM (IST)
பிஎம் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்
PMEGP scheme: 10 லட்சம் முதல் 25 லட்சம் வரையிலான கடன் வழங்கும், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) என்பது பிரதம மந்திரி ரோஜ்கர் யோஜ்னா (PMRY) மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (REGP) ஆகிய இரண்டு திட்டங்களின் இணைப்பாகும். இத்திட்டம், விவசாயம் அல்லாத துறைகளில் உள்ள குறுந்தொழில் நிறுவனங்களின் மூலம், வேலையற்ற இளைஞர்கள் மற்றும் பாரம்பரிய கைவினைஞர்களுக்கு சுயவேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. இது காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தால் (KVIC) செயல்படுத்தப்படுகிறது. இது தேசிய அளவில் இந்தத் திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு அலுவலகமாகவும் செயல்படுகிறது.
மாநில அளவில், இந்தத் திட்டம் மாநில KVIC இயக்குநரகங்கள், மாவட்ட தொழில் மையங்கள் (DICகள்), மாநில காதி மற்றும் கிராமத் தொழில் வாரியங்கள் (KVIBs) மற்றும் வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், தொழில்முனைவோர் அல்லது பயனாளிகளுக்கு நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் வழங்குவதற்காக, நியமிக்கப்பட்ட வங்கிகள் மூலம் அரசாங்க மானியத்தை KVIC வழி செய்கிறது. பயனாளி தனது விண்ணப்பம்/திட்டத்தை www.kvic.org.in / kviconline.gov.in/pmegpeportal என்ற இணையதளத்தில் ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.
18 வயதுக்கு மேல் உள்ள எந்தவொரு தனிநபரும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். ரூ.10 லட்சத்திற்கு மேல் செலவாகும் உற்பத்தித் துறையிலும், ரூ.5 லட்சத்திற்கு மேல் செலவாகும் வணிகம் அல்லது சேவைத் துறையிலும் உள்ள திட்டங்களுக்கு விண்ணப்பிக்க, குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ், புதிய திட்டங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். சுய உதவிக் குழுக்கள், சங்கங்கள் பதிவுச் சட்டம், 1860 இன் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள், உற்பத்தி சார்ந்த கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அறக்கட்டளைகளும் இந்த திட்டத்தின் மூலம் கடன் பெற தகுதியுடையவை ஆகும்.
PMRY, REGP அல்லது இந்திய அரசு அல்லது மாநில அரசின் பிற திட்டங்களின் கீழ் இருக்கும் நிறுவனங்களால் இந்த கடன் உதவியை அணுக முடியாது. இந்திய அரசு அல்லது மாநில அரசின் வேறு எந்தத் திட்டத்தின் கீழும் ஏற்கனவே அரசு மானியத்தைப் பெற்றுள்ள நிறுவனங்களும் கூட இந்த திட்டத்தை அணுக முடியாது.
உற்பத்தித் துறையில் அனுமதிக்கப்பட்ட திட்டம் அல்லது யூனிட்டிற்கு அதிகபட்சமாக 25 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. வணிகம் அல்லது சேவைத் துறையில் இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம். நகப்புறங்களைச் சேர்ந்த பொதுப்பிரிவினருக்கு 15 சதவிகிதமும், கிராமங்களைச் சேர்ந்த பொதுப்பிரிவினருக்கு 25 சதவிகிதமும் மானியம் வழங்கப்டுகிறது. அதேநேரம், நகர்ப்புறங்களை சேர்ந்த சிறப்புப் பிரிவினருக்கு 25 சதவிகிதமும், கிராமப்புறங்களைச் சேர்ந்த சிறப்பு பிரிவினருக்கு 35 சதவிகிதமும் மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு 11 முதல் 12 சதவிகிதம் வரை வட்டி விதிக்கப்படுகிறது.
Ajith Kumar: அஜித் செய்த சம்பவத்தை என்னால் மறக்கவே முடியல.. கிரிக்கெட் வீரர் நடராஜன் நெகிழ்ச்சி!
EPFO: பி.எஃப்., கணக்கில் இருந்து எப்போது, எப்படி பென்ஷன் பணத்தை பெற முடியும்? - முழு விவரங்கள் இதோ..!
Bank FD Risk: பேங்க்ல எஃப்.டி,. போட போறிங்களா? இந்த 5 ஆபத்துகளை கட்டாயம் தெரிஞ்சுக்கங்க..!
Income Tax Rate Cuts: தேர்தலில் சறுக்கல்..! பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரியை குறைக்க மோடி அரசு ஆலோசனை, யாருக்கு ஜாக்பாட்?
EPFO: பி.எஃப்., பயனாளர்களே.. திட்டச் சான்றிதழ் பற்றி தெரியுமா? பென்ஷன் வாங்க இது ரொம்ப முக்கியம்பா..!
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
Emergency Declared Day: எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?