மேலும் அறிய

4 years of GST : ஜி.எஸ்.டி.,யின் நான்காண்டுகள்! - சாதனையா? சோதனையா?

ஜி.எஸ்.டி. வழியாக ஈட்டப்படும் வருவாயில் மாநிலங்களுக்கு ஆண்டுக்கு 14% வருவாய் என மத்திய அரசால் வாக்குறுதி வழங்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு எதிர்பார்த்தது போல நிகழ்ந்ததா? இதன் முக்கிய நோக்கமான வருவாய் பெருக்கம் சாத்தியமானதா?  

2017 ஜூலை 1ம் தேதி, மதிப்புக் கூட்டு வரி, கலால் வரி மற்றும் சேவை வரி எனப் பலவரிகளில் இருந்து சுதந்திரம் பெற்று மாறாக ‘ஒரே நாடு ஒரே வரி’ என சரக்கு மற்றும் சேவை வரியை (Goods and Service Tax - GST) அறிமுகப்படுத்தியது மத்திய அரசு. நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் நள்ளிரவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இதர உறுப்பினர்கள் முன்னிலையில் இதற்கான சட்டத்தை  நிறைவேற்றினார் அப்போதைய மத்திய நிதியமைச்சராக இருந்த மறைந்த அருண் ஜெட்லி. வரிசெலுத்துபவர்களுக்கான வழிமுறைகளை எளிமையாக்குவதற்காக இந்த மறைமுகவரி (Indirect taxex) அறிமுகப்படுத்தப்பட்டது. இருந்தாலும் தனது நோக்கத்தை இந்த நான்கு ஆண்டுகளில் எட்டிவிட்டதா இந்த சரக்கு மற்றும் சேவை வரி. இந்தியாவுக்கு மறைமுக வரிகள் புதிதல்ல, ராஜீவ் காந்தி அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த வி.பி.சிங் அறிமுகப்படுத்திய மாட்வாட்(MODVAT)லிருந்து இந்த வகை வரிகளின் வரலாறு தொடங்குகிறது. 1999ல் அடல்பிகாரி வாஜ்பாயின் ஆட்சியில் ரிசர்வ் வங்கி கவர்னர்களாக இருந்த சி.ரங்கராஜன், பிமல் ஜாலன் மற்றும் ஐ.ஜி. பட்டேல் ஆகியோருடனான பொருளாதார ஆலோசகர்கள் கூட்டத்தில் இந்த சரக்கு மற்றும் சேவை வரிக்கான முதல் அடித்தளமிடப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பல அரசியல் ஏற்ற இறக்கங்களுக்குப் பிறகு 18 ஆண்டுகள் கழித்து 2017ல் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. 

ஜி.எஸ்.டி. வழியாக ஈட்டப்படும் வருவாயில் மாநிலங்களுக்கு ஆண்டுக்கு 14% வருவாய் என மத்திய அரசால் வாக்குறுதி வழங்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு எதிர்பார்த்தது போல நிகழ்ந்ததா? இதன் முக்கிய நோக்கமான வருவாய் பெருக்கம் சாத்தியமானதா?    


4 years of GST : ஜி.எஸ்.டி.,யின் நான்காண்டுகள்! - சாதனையா? சோதனையா?
 
ஜி.எஸ்.டி., வருவதற்கு முன்பு சேவை வரிகளுக்கு எதிரான மதிப்புக்கூட்டு வரி தொடர்பான உள்ளீட்டு வரிகளை (Input taxes) வரைவு செய்வதில் சிக்கல் இருந்தது. ஆனால் ஜி.எஸ்.டி. வந்த பிறகு ஒரே மறைமுகவரி என்பது நடைமுறைக்கு வந்ததால் மதிப்புடன் செலுத்தப்படும் இதர வரிகளுக்கான உள்ளீட்டு வரிக்கடன்களை (Input tax credit) எளிதாகக் கோரலாம் என்பது நடைமுறைக்கு வந்தது.


4 years of GST : ஜி.எஸ்.டி.,யின் நான்காண்டுகள்! - சாதனையா? சோதனையா?

ஆனால் இவை எல்லாம் வரிசெலுத்தவேண்டிய பெருவணிக நிறுவனங்களை நோக்கி இல்லாமல் சந்தையில் இருக்கும் சிறுகுறு வணிகங்களைத்தான் பாதித்ததாகச் சொல்கிறார் பொருளாதார வல்லுநர் பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா. அவர் கூறுகையில், ‘ஜி.எஸ்.டி அறிமுகத்துக்கு முன்பு கலால் வரியானது 1.5 கோடிகள் வரும் வரை அமலுக்கு வராது ஆனால் ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு 20 லட்ச ரூபாய்க்கே கலால் தொடங்கியது. இதனால் சிறு வணிகங்கள்தான் பாதிக்கப்பட்டன.இது கிட்டத்தட்ட அவர்கள் மீது திணிக்கப்பட்ட வன்முறை. அதன்பின்னர் பணமதிப்பு நீக்கம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் இவர்களது நிலை மேலும் வலுவிழந்து பெரும்பாலானவர்கள் தங்களது வணிகங்களை மொத்தமாக மூடினார்கள்.17 ஜூலை 2017 முதல் ஜனவரி 2020 வரையிலான காலக்கட்டத்தை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டால் அரசு எதிர்பார்த்தது போல வருவாய் ஈட்டமுடியவில்லை என்பதுதான் நமக்கு புலனாகிறது. மற்றொருபக்கம் மாநிலங்களின் வரி நிர்ணயம் தொடர்பான அதிகாரத்தை முற்றிலுமாக பாதித்தது. பெட்ரோல், டீசல் மற்றும் மதுபானத்துக்கு மட்டும் மாநிலங்கள் வரி நிர்ணயித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு சொன்னாலும் அதன் மீதான கலால் வரி மற்றும் அதன் மீதான செஸ் கட்டணம் எனக் கூடுதல் வரிகளைக் கள்ளத்தனமாக நுழைத்தது மாநில வருவாயையும் பாதித்தது. இதன்வழியாக மத்திய அரசு  மாநிலங்களைக் கிட்டத்தட்ட முனிசிபாலிட்டி போல நடத்தியது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஜி.எஸ்.டி., போன்ற பிற வரிகள் அமலில் இருந்தாலும் மாகாணங்களுக்கான தளர்வுகளை உள்ளடக்கியதாகவும் அவை இருக்கும். ஆனால் இங்கே அது மாநிலங்களை ஏமாற்றுவதாக அமைந்தது. இதுஒருபக்கம் இருக்க சானிட்டரி நாப்கின் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கெல்லாம் 18 சதவிகித சரக்கு மற்றும் சேவை வரி விதித்ததை எல்லாம் எக்காலத்துக்கும் ஏற்றுக்கொள்ளவே முடியாது’ என்கிறார். 
ஜி.எஸ்.டி.யை மறுபரிசீலனை செய்து அதன் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் மாற்றி அமைத்து வரிநிர்ணயத்தில் மாநிலங்களுக்கான கூடுதல் உரிமையை வழங்குவது மட்டுமே இதற்கான தீர்வு என்கிறார் அவர்.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget