Karthi Visit Tirupati | லட்டு சர்ச்சை விவகாரம் திருப்பதி சென்ற கார்த்தி”என் மகன் தான் காரணம்”
நடிகர் கார்த்தி தனது மகன் நலனுக்காக குடும்பட்துடன் திருப்பதி எழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
நடிகர் கார்த்தியின் மெய்யழகன் தெலுங்கு ப்ரமோஷன் நிகழ்ச்சியில் அவரிடம் சிறுத்தை படத்தில் இடம்பெற்ற லட்டு நகைச்சுவை காட்சியை காட்டி லட்டு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு நடிகர் கார்த்தி அது ஒரு சென்சிட்டிவான விவகாரம் அது. எனக்கு அது வேண்டாம். லட்டே வேண்டாம் என்றார். அவரது பேச்சுக்கு அங்கிருந்த ரசிகர்கள் ஆர்ப்பரித்து சிரித்தனர். லட்டை வைத்து காமெடி செய்ய வேண்டாம் என்று பவன் கல்யாண் காட்டமாக கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கு கார்த்தி மன்னிப்பு கோரி இருந்தார்.
இந்தநிலையில் நடிகர் கார்த்தி திருப்பதி கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். மகன் பிறந்த பிறகு கோயிலுக்கு திருப்பதி வந்து ரொம்ப வருடம் ஆயிடுச்சு அதனால தான் கோயிலுக்கு வந்து இருக்கோம் குடும்பத்தோட என்று தெரிவித்துள்ளார்.
பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்...





















