மேலும் அறிய

பான், ஆதார், ஜிஎஸ்டிக்கு இன்று முதல் புதிய விதிகள்: முழுவிவரம் அறிய இதைப் படிங்க..!

பான், ஆதார், ஜிஎஸ்டி நடைமுறையில் இன்று முதல் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன.  நாட்டில் வங்கி மற்றும் நிதித் துறையில் பல்வேறு புதிய விதிகள் புகுத்தப்பட்டுள்ளன.

பான், ஆதார், ஜிஎஸ்டி நடைமுறையில் இன்று முதல் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன.  நாட்டில் வங்கி மற்றும் நிதித் துறையில் பல்வேறு புதிய விதிகள் புகுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய விதிகள் சாமான்ய மக்களின் வாழ்க்கை மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. ஆகையால் என்னென்ன விதிகள் என்பதைத் தெரிந்து கொள்வோம்.

ஆதார் பான் எண் இணைப்பு:

ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை அரசாங்கம் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. முன்னதாக இது ஜூன் 30 என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது மேலும் 3 மாதங்களுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டு வரும் 30 ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தமுறை அடுத்த வாய்ப்பு அளிக்கப்படாது என்றும் ஆகையால் செப்டம்பர் 30க்குள் மெத்தனம் காட்டாமல் பான், ஆதார் எண்ணை இணைக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.


பான், ஆதார், ஜிஎஸ்டிக்கு இன்று முதல் புதிய விதிகள்: முழுவிவரம் அறிய இதைப் படிங்க..!

புதிய ஜிஎஸ்டி விதிகள்:

சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் (GSTN) அண்மையில் விதி எண் 59(6) ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி ஜிஎஸ்டிஆர்-1 பதிவு செய்வதற்கான தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்தப் புதிய விதியின்படி ஜிஎஸ்டி சந்தாதாரர் அவர் சப்ளை செய்யும் சரக்கு குறித்தோ அல்லது அவர் வழங்கும் சேவை குறித்தோ GSTR-1 படிவத்தில் புதிதாகத் தெரிவிக்க முடியாது. ஒருவேளை, அவர் இரண்டு மாதங்களுக்கு முன்னதாக ஃபைல் செய்த GSTR-3B படிவத்தில் ரிட்டர்ன் தொடர்பாக பதிவு செய்திருந்தால் மட்டுமே GSTR-1 படிவத்தில் சரக்கு, சேவை விவரத்தைக் குறிப்பிட முடியும்.

பிஎஃப்..பில் என்ன புதுசு?

பிஎஃப் வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 1, 2021, அதாவது இன்றைக்குள் பிஎஃப் கணக்கில் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம். அவ்வாறு இணைக்காவிட்டால் சந்தாதாரர்கள் தங்களின் இபிஎஃப் சலுகையைப் பெற இயலாது.
மேலும் பிஎஃப் கணக்குடன் ஆதார் மற்றும் யுஏஎன் எண்ணை இணைக்காவிட்டால், ஆதாரை சரிபார்க்காவிட்டால் இசிஆர் எனப்படும் எலக்ட்ரானிக் சலான் கம் ரிட்டர்ன் உங்கள் பிஎஃப் கணக்கில் பதிவு செய்யப்படாது. அப்படியென்றால் சந்தாதாரர்களின் கணக்கில் பணியமர்த்தும் நிறுவனத்தின் பிஎஃப் பங்களிப்பு வரவு வைக்கப்படாது.

கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம்:

இன்று, செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாகவே சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றம் கண்டுள்ளது. ஜூலையில் சிலிண்டரின் விலை ரூ.25.50 உயர்த்தப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 18ல் சிலிண்டர் விலை மேலும் ரூ.18 ஏற்றப்பட்டது. இந்நிலையில், இன்று முதல் சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரிக்கப்பட்டுள்ளது.


பான், ஆதார், ஜிஎஸ்டிக்கு இன்று முதல் புதிய விதிகள்: முழுவிவரம் அறிய இதைப் படிங்க..!

ரிசர்வ் வங்கியின் பாசிடிவ் பே சிஸ்டம்: 

காசோலை பரிவர்த்தனையில் புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது. காசோலை பரிவர்த்தனைகளில் நிதி மோசடிகள் அதிகமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, இதில் பாதுகாப்பு அம்சத்தைப் பலப்படுத்தும் விதமாக  ரிசர்வ் வங்கி பாசிடிவ் பே சிஸ்டத்தை அமல்படுத்தியுள்ளது. அதாவது, ரூ.50,000க்கும் மேற்பட்ட பணத்தை காசோலை மூலமாகப் பரிவர்த்தனை செய்யும் போது காசோலை வழங்கியவர் மற்றும் பரிவர்த்தனை தொடர்பான தகவல்களை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும். பயனாளியின் பெயர், பணம் செலுத்துவோரின் பெயர், எவ்வளவு தொகை, காசோலை எண், தேதி உள்ளிட்ட விவரங்களை வழங்க வேண்டும். பொதுத் துறை வங்கிகள் பல இந்த நடைமுறையை ஏற்கெனவே பின்பற்றி வருகின்றன. இந்நிலையில் ஆக்சிஸ் வங்கி இந்த நடைமுறையை இன்று முதல் பயன்படுத்துகிறது. பாசிடிவ் பே சிஸ்டத்தில் பதிவு செய்யப்பட்ட காசோலைகளை மட்டுமே ரிசர்வ் வங்கி அங்கீகரிக்கிறது.

பஞ்சாப் நேஷன் வங்கியின் புதிய விதிகள்:

பஞ்சாப் நேஷனல் வங்கி இன்று முதல் சேவிங்ஸ் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தைக் குறைக்கிறது. புதிய வரியானது ஆண்டுக்கு 2.90% என்றளவில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது ஏற்கெனவே உள்ள வாடிக்கையாளர்கள், புதிய வாடிக்கையாளர்கள் என இருவருக்குமே பொருந்தும்.

கார் இன்சூரன்ஸ் கட்டாயம்:

சென்னை உயர் நீதிமன்றம், கார்களுக்கு பம்பர் டூ பம்பர் இன்சூரன்ஸைக் கட்டாயமாக்கியுள்ளது. ஒவ்வொரு புதிய காருக்கும் ஐந்தாண்டுகள் இன்சூரன்ஸ் கட்டாயம். ஆனால், இந்த புதிய விதியால் கார்கள் விலையில் ஏற்றம் காணப்படும் என ஆட்டோமொபைல் சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பாரத் சீரிஸ் (BH-series)

போக்குவரத்து அமைச்சகமானது பாரத் சீரிஸ் (BH-series) என்ற புதிய நம்பர் ப்ளேட் விதியைக் கொண்டுள்ளது. இந்த புதிய வாகனப் பதிவு விதி மூலம், புதிதாக வாங்கப்படும் வாகனங்களுக்கு பிஹெச் பதிவு பெற்றுவிட்டால் மாநிலம் விட்டு மாநிலம் செல்லக்கூட புதிய பதிவு கட்டாயமில்லை.

மேற்கூறிய புதிய நடவடிக்கைகளை அறிந்து அவற்றை பின்பற்றினால் பல நன்மைகளை அடையலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget