மேலும் அறிய

CryptoCurrency | கிரிப்டோகரன்சி பயன்பாடும், இந்தியர்களும்.. இதைக்கேட்டா ஆச்சர்யப்பட்டு போவீங்க..!

அமெரிக்கா, ரஷியாவை விட இந்தியா இதில் முன்னிலை வகிப்பதற்கு முக்கிய காரணம் இங்குள்ள 138 கோடி மக்கள் தொகையாகும்.

உலகிலேயே அதிகளவில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தவர்களை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்து உள்ளது. இந்தியாவில் மட்டும் மொத்தம் 10 கோடிக்கும் அதிகமான மக்கள் கிரிப்டோ கரன்சியை வைத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

உலகம் முழுவதும் டிஜிட்டல்மயமாகிவிட்ட சூழலில் கடந்த சில ஆண்டுகளாக கிரிப்டோ கரன்சிகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. பிட் காயின் தொடங்கி பல கிரிப்டோ கரன்சிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்தியாவில் கிரிப்டோ கரன்சி என்பது பாதுகாப்பற்ற ஒன்றாகவே இருந்து வருகிறது. கிரிப்டோ கரன்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற குரல்களும் ஆங்காங்கே வலுத்து வருகின்றன.

ஆனால், கிரிப்டோ கரன்சியல் இந்தியர்கள் முதலீடு செய்வதற்கு இதுவரை தடைவிதிக்கப்படவில்லை. இந்த சூழலில் உலகில் வேறு எந்த நாடுகளிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் 10 கோடி பேர் கிரிப்ட்ரோ கரன்சியில் முதலீடு செய்து இருப்பதாக பிரோக்கர் டிஸ்கவரி மற்றும் பிரோக்கர் சூசர் நிறுவனங்களுடைய முடிவுகளின் ஒப்பீட்டின் மூலம் அறிய முடிகிறது.

இந்தியாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் 2 கோடியே 74 லட்சம் கிரிப்டோ கரன்சி முதலீட்டாளர்களும், ரஷியாவில் 1 கோடியே 74 லட்சம் கிரிப்டோ கரன்சி முதலீட்டாளர்களும் உள்ளனர். ஆப்பிரிக்க நாடான நைஜீயாவில் 1 கோடியே 30 லட்சம் கிரிப்டோ கரன்சி முதலீட்டாளர்கள் உள்ளார்கள். இதை வைத்து ஒருநாட்டின் பொருளாதார வளர்ச்சியை அளவிட முடியாது. அமெரிக்கா, ரஷியாவை விட இந்தியா இதில் முன்னிலை வகிப்பதற்கு முக்கிய காரணம் இங்குள்ள 138 கோடி மக்கள் தொகையாகும்.

CryptoCurrency | கிரிப்டோகரன்சி பயன்பாடும், இந்தியர்களும்.. இதைக்கேட்டா ஆச்சர்யப்பட்டு போவீங்க..!

ஒட்டுமொத்த நாட்டின் மக்கள் தொகையின் அடிப்படையில் கிரிப்ட்ரோ கரன்சியை வாங்கியவர்களின் சதவீதத்தை கணக்கிட்டால் 7.30 சதவீதத்துடன் இந்தியா 5 வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது உக்ரைன். அங்கு ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 12.73 சதவீதம் பேர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளனர். 11.91 சதவீதத்துடன் இந்த பட்டியலில் ரஷியா 2 வது இடத்திலும், 8.52 சதவீதத்துடன் கென்யா 3 வது இடத்திலும், 8.31 சதவீதத்துடன் அமெரிக்கா 4 வது இடத்திலும் உள்ளது.

இந்தியாவில் கிரிப்டோ கரன்சிகளுக்கு இன்னும் முழுமையான சட்டம் கூட வகுக்கப்படவில்லை. குறிப்பாக தனியார் கிரிப்டோ கரன்சிகளை தடை விதிக்கும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவெடுத்தது. ஆனால், அந்த மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படவில்லை. இத்தகைய நிலையற்ற தன்மை நிலவும் சூழலிலும் இந்தியாவில் 10 கோடி பேர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

ஆனால், கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையுடன் பிட் காயின் வளர்ச்சியும் ஒத்துபோகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிட் காயின் 50% வருமானத்தை கொடுத்துள்ளது. Ethereum, Ripple மற்றும் Dogecoin போன்ற தனியார் கிரிப்டோ கரன்சிகளும் நல்ல வருமானத்தை ஈட்டித் தந்துள்ளன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Governor: தமிழக அரசுக்கு எதிராக களமிறங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி - ”இந்தி எதிர்ப்பு என்ற பெயரில்..”
TN Governor: தமிழக அரசுக்கு எதிராக களமிறங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி - ”இந்தி எதிர்ப்பு என்ற பெயரில்..”
Kaliammal: என்னது..அதிமுகவில் காளியம்மாளா.? இன்னும் எத்தனை கட்சியிலதான் அவங்கள சேர்ப்பீங்க.?
என்னது..அதிமுகவில் காளியம்மாளா.? இன்னும் எத்தனை கட்சியிலதான் அவங்கள சேர்ப்பீங்க.?
CM Stalin: இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா? இன எதிரிகளே - பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா? இன எதிரிகளே - பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, தமிழகத்தில் எங்கெல்லாம் வெயில் சுட்டெரிக்கும் - இன்றைய வானிலை
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, தமிழகத்தில் எங்கெல்லாம் வெயில் சுட்டெரிக்கும் - இன்றைய வானிலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijayalakshmi Seeman Case: விஜயலட்சுமி பாலியல் வழக்கு! நேரில் ஆஜராகாத சீமான்! நெருக்கும் காவல்துறைSexual Harassment | வீட்டில் தனியாக இருந்த பெண் மர்ம நபர் பாலியல் தொல்லை வாணியம்பாடியில் பகீர் சம்பவம்Jyotika on Hindi | ”என் மகனுக்கு இந்தியே பிடிக்காது” அடித்துக்கொள்ளும் DMK, BJP ஜோதிகா கொடுத்த பேட்டிகண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor: தமிழக அரசுக்கு எதிராக களமிறங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி - ”இந்தி எதிர்ப்பு என்ற பெயரில்..”
TN Governor: தமிழக அரசுக்கு எதிராக களமிறங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி - ”இந்தி எதிர்ப்பு என்ற பெயரில்..”
Kaliammal: என்னது..அதிமுகவில் காளியம்மாளா.? இன்னும் எத்தனை கட்சியிலதான் அவங்கள சேர்ப்பீங்க.?
என்னது..அதிமுகவில் காளியம்மாளா.? இன்னும் எத்தனை கட்சியிலதான் அவங்கள சேர்ப்பீங்க.?
CM Stalin: இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா? இன எதிரிகளே - பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா? இன எதிரிகளே - பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, தமிழகத்தில் எங்கெல்லாம் வெயில் சுட்டெரிக்கும் - இன்றைய வானிலை
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, தமிழகத்தில் எங்கெல்லாம் வெயில் சுட்டெரிக்கும் - இன்றைய வானிலை
Chennai Corporation: ஆப்படித்த சென்னை மாநகராட்சி - கட்டணங்கள் கிடுகிடுவென உயர்வு, 300% ரொம்ப ஓவர் இல்லையா?
Chennai Corporation: ஆப்படித்த சென்னை மாநகராட்சி - கட்டணங்கள் கிடுகிடுவென உயர்வு, 300% ரொம்ப ஓவர் இல்லையா?
SEBI Chairman: அதானி சர்ச்சைகளில் சிக்கிய மாதபி பூரி புச் - செபி தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்
SEBI Chairman: அதானி சர்ச்சைகளில் சிக்கிய மாதபி பூரி புச் - செபி தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
"இட்லி, சாம்பார் வித்ததால் வரல" குறையும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள்.. பாஜக எம்எல்ஏ சொன்ன காரணம்!
Embed widget