மேலும் அறிய

CryptoCurrency | கிரிப்டோகரன்சி பயன்பாடும், இந்தியர்களும்.. இதைக்கேட்டா ஆச்சர்யப்பட்டு போவீங்க..!

அமெரிக்கா, ரஷியாவை விட இந்தியா இதில் முன்னிலை வகிப்பதற்கு முக்கிய காரணம் இங்குள்ள 138 கோடி மக்கள் தொகையாகும்.

உலகிலேயே அதிகளவில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தவர்களை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்து உள்ளது. இந்தியாவில் மட்டும் மொத்தம் 10 கோடிக்கும் அதிகமான மக்கள் கிரிப்டோ கரன்சியை வைத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

உலகம் முழுவதும் டிஜிட்டல்மயமாகிவிட்ட சூழலில் கடந்த சில ஆண்டுகளாக கிரிப்டோ கரன்சிகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. பிட் காயின் தொடங்கி பல கிரிப்டோ கரன்சிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்தியாவில் கிரிப்டோ கரன்சி என்பது பாதுகாப்பற்ற ஒன்றாகவே இருந்து வருகிறது. கிரிப்டோ கரன்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற குரல்களும் ஆங்காங்கே வலுத்து வருகின்றன.

ஆனால், கிரிப்டோ கரன்சியல் இந்தியர்கள் முதலீடு செய்வதற்கு இதுவரை தடைவிதிக்கப்படவில்லை. இந்த சூழலில் உலகில் வேறு எந்த நாடுகளிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் 10 கோடி பேர் கிரிப்ட்ரோ கரன்சியில் முதலீடு செய்து இருப்பதாக பிரோக்கர் டிஸ்கவரி மற்றும் பிரோக்கர் சூசர் நிறுவனங்களுடைய முடிவுகளின் ஒப்பீட்டின் மூலம் அறிய முடிகிறது.

இந்தியாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் 2 கோடியே 74 லட்சம் கிரிப்டோ கரன்சி முதலீட்டாளர்களும், ரஷியாவில் 1 கோடியே 74 லட்சம் கிரிப்டோ கரன்சி முதலீட்டாளர்களும் உள்ளனர். ஆப்பிரிக்க நாடான நைஜீயாவில் 1 கோடியே 30 லட்சம் கிரிப்டோ கரன்சி முதலீட்டாளர்கள் உள்ளார்கள். இதை வைத்து ஒருநாட்டின் பொருளாதார வளர்ச்சியை அளவிட முடியாது. அமெரிக்கா, ரஷியாவை விட இந்தியா இதில் முன்னிலை வகிப்பதற்கு முக்கிய காரணம் இங்குள்ள 138 கோடி மக்கள் தொகையாகும்.

CryptoCurrency | கிரிப்டோகரன்சி பயன்பாடும், இந்தியர்களும்.. இதைக்கேட்டா ஆச்சர்யப்பட்டு போவீங்க..!

ஒட்டுமொத்த நாட்டின் மக்கள் தொகையின் அடிப்படையில் கிரிப்ட்ரோ கரன்சியை வாங்கியவர்களின் சதவீதத்தை கணக்கிட்டால் 7.30 சதவீதத்துடன் இந்தியா 5 வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது உக்ரைன். அங்கு ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 12.73 சதவீதம் பேர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளனர். 11.91 சதவீதத்துடன் இந்த பட்டியலில் ரஷியா 2 வது இடத்திலும், 8.52 சதவீதத்துடன் கென்யா 3 வது இடத்திலும், 8.31 சதவீதத்துடன் அமெரிக்கா 4 வது இடத்திலும் உள்ளது.

இந்தியாவில் கிரிப்டோ கரன்சிகளுக்கு இன்னும் முழுமையான சட்டம் கூட வகுக்கப்படவில்லை. குறிப்பாக தனியார் கிரிப்டோ கரன்சிகளை தடை விதிக்கும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவெடுத்தது. ஆனால், அந்த மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படவில்லை. இத்தகைய நிலையற்ற தன்மை நிலவும் சூழலிலும் இந்தியாவில் 10 கோடி பேர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

ஆனால், கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையுடன் பிட் காயின் வளர்ச்சியும் ஒத்துபோகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிட் காயின் 50% வருமானத்தை கொடுத்துள்ளது. Ethereum, Ripple மற்றும் Dogecoin போன்ற தனியார் கிரிப்டோ கரன்சிகளும் நல்ல வருமானத்தை ஈட்டித் தந்துள்ளன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
Embed widget