மேலும் அறிய

India Economic Growth: தொடரும் உலகளாவிய அதிர்வுகள்...நீடித்த வளர்ச்சியில் இந்தியா பொருளாதாரம்...ரிசர்வ் வங்கி விளக்கம்

விலை நிலவரமானது ஏற்றுக்கொள்ள முடியாத அளவில் இருப்பதால், பணவீக்கம் அதிகரித்து செல்வதைத் தடுப்பதன் அவசியத்தை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு உறுப்பினர்கள் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளனர்.

இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934 இன் பிரிவு 45ZBஇன் கீழ் அமைக்கப்பட்ட நிதி கொள்கைக் குழுவின் 37ஆவது கூட்டம் ஆகஸ்ட் 3 முதல் 5 வரை நடைபெற்றது. 

 

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பேராசிரியர் ஜெயந்த் ஆர். வர்மா, இந்திய மேலாண்மை நிறுவனம், அகமதாபாத், டாக்டர். ராஜீவ் ரஞ்சன், நிர்வாக இயக்குனர், டாக்டர் மைக்கேல் தேபப்ரதா பத்ரா, நிதி கொள்கையின் பொறுப்பாளர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

விலை நிலவரமானது ஏற்றுக்கொள்ள முடியாத அளவில் இருப்பதால், பணவீக்கம் அதிகரித்து செல்வதைத் தடுப்பதன் அவசியத்தை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு உறுப்பினர்கள் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளனர்.

இதை தொடர்ந்து பேசிய சக்திகாந்த தாஸ், "பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் பணவீக்கத்தால் ஏற்பட்டு வரும் தாக்கத்தை பொறுத்து ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகள் கணக்கிடப்பட்டு எடுக்கப்படும்" என்றார். 

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "சில்லறை பணவீக்கம் ஏற்றுக்கொள்ள முடியாத அசௌகரியமான அதிகமாக நிலையில் இருக்கிறது. எனவே, ஆளுநர் மற்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து கடந்த கொள்கை மதிப்பாய்வில் ரெப்போ விகிதத்தில் 50 அடிப்படை புள்ளிகள் உயர்வை முன்மொழிந்து இருந்தனர். பெஞ்ச்மார்க் கடன் விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் 5.40 சதவீதமாக உயர்த்த முடிவு செய்துள்ளோம்.

நிதிக் கொள்கையின் நம்பகத்தன்மை மற்றும் பணவீக்க எதிர்பார்ப்புகளை கொள்கை நடவடிக்கைகள் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் வெளிப்படும் இயக்கவியலைப் பொறுத்து எங்கள் நடவடிக்கைகள் தொடர்ந்து அளவிட்டு எடுக்கப்படும்" என்றார்.

எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பேசிய நிதிக் கொள்கை குழு உறுப்பினர் அஸ்மிதா கோயல், "கடந்த மூன்று மாதங்களில், உலகளாவிய அதிர்வுகள், விகித உயர்வுகள் தொடர்ந்தாலும் இந்திய வளர்ச்சி நீடித்து வருவதை பார்க்க முடிகிறது. உண்மையில், தொற்றுநோய் மற்றும் உக்ரைன் போர் அதிர்வுகளின் கீழ் உள்ள பல நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா எதிர்பார்த்ததை விட சிறப்பாகச் செய்துள்ளது. 

பொருளாதார பன்முகத்தன்மை அதிகரித்து வருவது அதிர்வுகளை உள்வாங்க உதவுகிறது. பெரிய உள்நாட்டு தேவை உலகளாவிய மந்தநிலையை மிதப்படுத்தலாம். தொழில் வளர்ச்சி முடக்கப்பட்டாலும் விவசாயம் நன்றாக இருக்கும். சேவைகள், டிஜிட்டல் மயமாக்கல், தொலைதூர வேலை மற்றும் ஏற்றுமதி மூலம் விநியோகத்தை ஈடுசெய்ய முடிகிறது" என்றார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
TVK Vijay: ஜனநாயகன் பிரச்னை.. பிரதமர் மோடிக்கு எதிராக வீடியோ வெளியிட விஜய் முடிவு?
TVK Vijay: ஜனநாயகன் பிரச்னை.. பிரதமர் மோடிக்கு எதிராக வீடியோ வெளியிட விஜய் முடிவு?
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
TVK Vijay: ஜனநாயகன் பிரச்னை.. பிரதமர் மோடிக்கு எதிராக வீடியோ வெளியிட விஜய் முடிவு?
TVK Vijay: ஜனநாயகன் பிரச்னை.. பிரதமர் மோடிக்கு எதிராக வீடியோ வெளியிட விஜய் முடிவு?
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
"உனக்கு அழிவு ஆரம்பம்” - போகிக்கு விஜய் டி-ஷர்டை எரித்த வைஷ்ணவி.. கொந்தளித்த தவெக படை!
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
Embed widget