![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Gold, Silver Price : மீண்டும் உயர்ந்த தங்கம்... வெள்ளியும் உயர்வு! இன்றைய விலை நிலவரம் இதுதான்!
Gold, Silver Price : சென்னையில் இன்று சவரன் தங்கம் கிராமிற்கு ரூபாய் 10 அதிகரித்து ரூபாய் 4 ஆயிரத்து 767க்கு விற்கப்படுகிறது
![Gold, Silver Price : மீண்டும் உயர்ந்த தங்கம்... வெள்ளியும் உயர்வு! இன்றைய விலை நிலவரம் இதுதான்! chennai gold and silver price on 30th july 2022 Gold, Silver Price : மீண்டும் உயர்ந்த தங்கம்... வெள்ளியும் உயர்வு! இன்றைய விலை நிலவரம் இதுதான்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/30/e9eb9f21bd34d9914b85b690b5eda0ef_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னையில் ஆபரணத்தங்கம் கிராமிற்கு நேற்று ரூபாய் 4 ஆயிரத்து 805-க்கு விற்கப்பட்டது. அதேபோல், சவரன் தங்கம் ரூபாய் 38 ஆயிரத்து 440க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி சவரன் தங்கம் கிராமிற்கு ரூபாய் 10 அதிகரித்து ரூபாய் 4 ஆயிரத்து 767க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் ரூபாய் 80 அதிகரித்து ரூபாய் 38 ஆயிரத்து 520க்கு விற்கப்படுகிறது.
மேலும் படிக்க : எலி மருந்து வைத்த தக்காளியை நறுக்கி சுடச்சுட மேகி! டிவி பார்த்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
அதேபோல, 24 காரட் தங்கம் கிராமிற்கு ரூபாய் 5 ஆயிரத்து 217க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் ரூபாய் 41 ஆயிரத்து 736க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 63.70க்கு விற்கப்பட்டு, வெள்ளி கிலோவிற்கு ரூபாய் 63 ஆயிரத்து 700க்கு விற்கப்படுகிறது.
தங்க ஆபரணங்கள்:
இந்தியக் குடும்பங்களில் தங்கத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. திருமணங்களின்போது மணமகள் அணியும் தங்க ஆபரணங்களை வாங்குவதற்கு சென்னை புகழ் பெற்ற இடமாக விளங்குகிறது. அதனால் தான் மக்கள் தங்கத்தை ஆபரணமாக வாங்க விரும்புகிறார்கள். தங்கம் என்றைக்குமே ஒரு சேமிப்பாக பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க : Annavaram Temple : ஜொலிக்கும் வைரங்கள்! ஆந்திராவின் அன்னவரம் கோயிலுக்கு வைர கிரீடம் வழங்கிய பக்தர்! வைரல் போட்டோ!
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இதர முதலீடுகளைப்போல தங்கத்தில் முதலீடு செய்வதில் எந்த சட்ட சிக்கல்களும் கிடையாது. தரம் மட்டுமே முக்கியம். சுத்தமான தங்கம் என்று உங்களை நம்பவைக்கிற மாதிரி பேசி குறைந்த தங்கத்தை தலையில் கட்டிவிடுவார்கள். 24 காரட் தங்கம் என்று சொல்லி 18 காரட் தங்கத்தை தந்து ஏமாற்றி விடுவார்கள். அதனை விற்கும்போதும் அல்லது அடகு வைக்கும் போதுதான் இந்த உண்மை நிலவரம் உங்களுக்கு தெரியவரும்.
அதற்கு நம்பிக்கையான இடத்தில் தங்கத்தை வாங்குவது அவசியம். எப்போது வேண்டும் என்றாலும் வங்கிகளிலோ, நிதி நிறுவனங்களிலோ தங்கத்தை அடகு வைத்து பணம் பெறலாம். ஆக.. தங்கத்தில் செய்யப்படும் முதலீடும் ஒரு வகையில் இன்று லாபம் தரும் வணிகமாகவே கருதப்படுகிறது. தங்கம் என்றென்றும் சேமிப்புக்கானதாய் பார்க்கப்படுவதால், அதன் விலை தொடர்ச்சியாக மக்களால் கண்காணிக்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)