மேலும் அறிய

ஆகஸ்ட் முதல் ஏடிஎம்களில் பணம் எடுக்க கூடுதல் கட்டணம்; ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு!

மினி ஸ்டேட்மென்ட் அச்சிடுதல், காசோலை புத்தகத்திற்கு விண்ணப்பித்தல் போன்றவற்றிற்கும் இனி மேல் கட்டணங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து கூடுதல் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது

ஏடிஎம்களில் இலவச பரிவர்த்தனைகளைத் தாண்டி பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து கூடுதல் கட்டணம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் வசூலிக்கப்படும் என  ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஏடிஎம் கார்டு என்பது இன்று அனைத்துத் தரப்பட்ட மக்களும் பயன்படுத்தக்கூடிய அத்தியாவசியமான பொருளாக மாறிவிட்டது. முன்பு போன்று வங்கிகளில் நின்று பணம் எடுக்கும் காலங்கள் எல்லாம் மறந்து தற்போது ஏடிஎம் மையங்களைத்தான் மக்கள் அதிகளவில் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இந்நிலையில் தான் இந்திய ரிசர்வ் வங்கி வங்கி நிதி மற்றும் நிதி அல்லாத பரிவரத்தனைகளுக்கான பரிமாற்றக்கட்டணத்திற்கு  ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் என தெரிவித்துள்ளது. 

இதன் மூலம் ஏடிஎம்களில் பணம் எடுப்பது முதல் நிதி அல்லாத பரிவர்த்தனைகளான மினி ஸ்டேட்மென்ட் அச்சிடுதல்,  balance enquiry, pin change, காசோலைப் புத்தகத்திற்கு விண்ணப்பித்தல் போன்றவற்றிற்கும் இனி மேல் கட்டணங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து கூடுதல் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது. தற்போது வாடிக்கையாளர்களிடமிருந்து பண பரிவர்த்தனைக்காக வசூலிக்கப்படும் ரூ.15 பரிமாற்றக்கட்டணத்தினை மாற்று வங்கி அல்லது ஏடிஎம் ஆபரேட்டர்களுக்கு சம்பந்தப்பட்ட வங்கிகள் கொடுத்து வரும் நிலையில், இக்கட்டணம் ரூ.17 ஆக உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளது.  மேலும் நிதி சாராத ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு 5 ரூபாய் கட்டணத்திலிருந்து 6 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் முதல் ஏடிஎம்களில் பணம் எடுக்க கூடுதல் கட்டணம்; ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு!

குறிப்பாக, வாடிக்கையாளர்களின் வசதிக்காக வங்கி ஏடிஎம்களில் இலவச பண பரிவர்த்தனைகள் உள்ளன. ஆனால் வங்கி அனுமதிக்கும் இலவச வரம்பினைத்தாண்டி மற்றொரு ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான செலவினை வாடிக்கையாளர்கள்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நடைமுறையும் உள்ளது.  குறிப்பாக ஒவ்வொரு மாதமும் தங்கள் டெபிட் கார்டினைப் பயன்படுத்தி அதே வங்கி ஏடிஎம்களில் 5 முறை இலவசமாக பணத்தினை எடுத்துக்கொள்ளவும் அதற்கு மேல் செல்லும் பொழுதுதான் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

ஆகஸ்ட் முதல் ஏடிஎம்களில் பணம் எடுக்க கூடுதல் கட்டணம்; ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு!

அதே போன்று  டெபிட் கார்டின் மூலம் வேறு வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்கிறோம் என்றால் மெட்ரோ நகரங்களுக்கு 3 முறையும், மெட்ரோ அல்லாத மையங்களுக்கு 5 முறை இலவச பரிவர்த்தனை செய்யக்கூடிய வசதிகள் உள்ளன. ஆனால் நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்கு மேல் செல்லும்போது தற்போது ரூ. 20 கட்டணத்தினை வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் வசூலித்துவருகிறது. இந்நிலையில் தான்  வருகின்ற 2022 ஆம்ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான கட்டணத்தை ரூ.20 லிருந்து ரூ.21 ஆக உயர்த்த ரிசர்வ் வங்கி முடிவெடுத்திருந்தது.

இந்த உத்தரவினைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் முதல் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு மும்பை, புதுடெல்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட ஆறு மெட்ரோ இடங்களில் முதல் 3 பரிவர்த்தனைகளுக்கு இலவசமாகவும், அதற்கு மேல் இலவச வரம்பைத்தாண்டி எடுக்கும் பொழுது நிதி  பரிவர்த்தனைக்கு ரூ.20 மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைக்கு ரூ. 8.50 வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது. இதேபோல் எஸ்.பி.ஐ வங்கியும் ஏடிஎம்களில் இலவச பரிவரத்தனைத் தாண்டி பணம் எடுப்பவர்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
SUVs Launched: 2025ல் வெளியான மிரட்டலான எஸ்யுவிக்கள் - விலை, இன்ஜின் ,அம்சங்கள் - டாப் ப்ராண்ட், டக்கர் மாடல்
SUVs Launched: 2025ல் வெளியான மிரட்டலான எஸ்யுவிக்கள் - விலை, இன்ஜின் ,அம்சங்கள் - டாப் ப்ராண்ட், டக்கர் மாடல்
Tamilnadu Roundup: தவெக கூட்டம்-துப்பாக்கியுடன் வந்த நபர், பாஜக கூட்டணியில் மீண்டும் டிடிவி, ஓபிஎஸ்?, குறைந்த தங்கம் விலை - 10 மணி செய்திகள்
தவெக கூட்டம்-துப்பாக்கியுடன் வந்த நபர், பாஜக கூட்டணியில் மீண்டும் டிடிவி, ஓபிஎஸ்?, குறைந்த தங்கம் விலை - 10 மணி செய்திகள்
TVK Meeting Issue: தவெக பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர்; புதுச்சேரியில் பரபரப்பு
தவெக பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர்; புதுச்சேரியில் பரபரப்பு
Mahindra XUV 7XO: சந்தையை கலக்கவரும் சக்திவாய்ந்த SUV; மஹிந்திரா XUV 7XO லாஞ்ச் எப்போது.? விலை, அம்சங்கள் என்ன.?
சந்தையை கலக்கவரும் சக்திவாய்ந்த SUV; மஹிந்திரா XUV 7XO லாஞ்ச் எப்போது.? விலை, அம்சங்கள் என்ன.?
Embed widget