மேலும் அறிய

ஆகஸ்ட் முதல் ஏடிஎம்களில் பணம் எடுக்க கூடுதல் கட்டணம்; ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு!

மினி ஸ்டேட்மென்ட் அச்சிடுதல், காசோலை புத்தகத்திற்கு விண்ணப்பித்தல் போன்றவற்றிற்கும் இனி மேல் கட்டணங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து கூடுதல் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது

ஏடிஎம்களில் இலவச பரிவர்த்தனைகளைத் தாண்டி பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து கூடுதல் கட்டணம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் வசூலிக்கப்படும் என  ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஏடிஎம் கார்டு என்பது இன்று அனைத்துத் தரப்பட்ட மக்களும் பயன்படுத்தக்கூடிய அத்தியாவசியமான பொருளாக மாறிவிட்டது. முன்பு போன்று வங்கிகளில் நின்று பணம் எடுக்கும் காலங்கள் எல்லாம் மறந்து தற்போது ஏடிஎம் மையங்களைத்தான் மக்கள் அதிகளவில் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இந்நிலையில் தான் இந்திய ரிசர்வ் வங்கி வங்கி நிதி மற்றும் நிதி அல்லாத பரிவரத்தனைகளுக்கான பரிமாற்றக்கட்டணத்திற்கு  ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் என தெரிவித்துள்ளது. 

இதன் மூலம் ஏடிஎம்களில் பணம் எடுப்பது முதல் நிதி அல்லாத பரிவர்த்தனைகளான மினி ஸ்டேட்மென்ட் அச்சிடுதல்,  balance enquiry, pin change, காசோலைப் புத்தகத்திற்கு விண்ணப்பித்தல் போன்றவற்றிற்கும் இனி மேல் கட்டணங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து கூடுதல் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது. தற்போது வாடிக்கையாளர்களிடமிருந்து பண பரிவர்த்தனைக்காக வசூலிக்கப்படும் ரூ.15 பரிமாற்றக்கட்டணத்தினை மாற்று வங்கி அல்லது ஏடிஎம் ஆபரேட்டர்களுக்கு சம்பந்தப்பட்ட வங்கிகள் கொடுத்து வரும் நிலையில், இக்கட்டணம் ரூ.17 ஆக உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளது.  மேலும் நிதி சாராத ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு 5 ரூபாய் கட்டணத்திலிருந்து 6 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் முதல் ஏடிஎம்களில் பணம் எடுக்க கூடுதல் கட்டணம்; ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு!

குறிப்பாக, வாடிக்கையாளர்களின் வசதிக்காக வங்கி ஏடிஎம்களில் இலவச பண பரிவர்த்தனைகள் உள்ளன. ஆனால் வங்கி அனுமதிக்கும் இலவச வரம்பினைத்தாண்டி மற்றொரு ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான செலவினை வாடிக்கையாளர்கள்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நடைமுறையும் உள்ளது.  குறிப்பாக ஒவ்வொரு மாதமும் தங்கள் டெபிட் கார்டினைப் பயன்படுத்தி அதே வங்கி ஏடிஎம்களில் 5 முறை இலவசமாக பணத்தினை எடுத்துக்கொள்ளவும் அதற்கு மேல் செல்லும் பொழுதுதான் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

ஆகஸ்ட் முதல் ஏடிஎம்களில் பணம் எடுக்க கூடுதல் கட்டணம்; ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு!

அதே போன்று  டெபிட் கார்டின் மூலம் வேறு வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்கிறோம் என்றால் மெட்ரோ நகரங்களுக்கு 3 முறையும், மெட்ரோ அல்லாத மையங்களுக்கு 5 முறை இலவச பரிவர்த்தனை செய்யக்கூடிய வசதிகள் உள்ளன. ஆனால் நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்கு மேல் செல்லும்போது தற்போது ரூ. 20 கட்டணத்தினை வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் வசூலித்துவருகிறது. இந்நிலையில் தான்  வருகின்ற 2022 ஆம்ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான கட்டணத்தை ரூ.20 லிருந்து ரூ.21 ஆக உயர்த்த ரிசர்வ் வங்கி முடிவெடுத்திருந்தது.

இந்த உத்தரவினைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் முதல் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு மும்பை, புதுடெல்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட ஆறு மெட்ரோ இடங்களில் முதல் 3 பரிவர்த்தனைகளுக்கு இலவசமாகவும், அதற்கு மேல் இலவச வரம்பைத்தாண்டி எடுக்கும் பொழுது நிதி  பரிவர்த்தனைக்கு ரூ.20 மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைக்கு ரூ. 8.50 வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது. இதேபோல் எஸ்.பி.ஐ வங்கியும் ஏடிஎம்களில் இலவச பரிவரத்தனைத் தாண்டி பணம் எடுப்பவர்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

 

தலைப்பு செய்திகள்

Gold and silver rate today : வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஜாலி.! குறைந்தது தங்கம் விலை- இன்றைய விலை இதோ
வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஜாலி.! குறைந்தது தங்கம் விலை- இன்றைய விலை இதோ
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Gold rate today : ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly Debate : ’மாண்புமிகு சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி, குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
’சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
TN Assembly : 'யார் ஆட்சியில் அதிக டென்ஷன்?' பேரவையில் MRK பன்னீர்செல்வம் – அமைச்சர் ஆனந்த் இடையே ஜாலியான விவாதம்..!
யார் ஆட்சியில் அதிக டென்ஷன்? பேரவையில் ஜாலியான விவாதம்..!
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Embed widget