மேலும் அறிய

Car Safety Floods: வெள்ள காலங்களில் காரை பாதுகாப்பது எப்படி? - கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்..

Car Safety Floods: வெள்ள காலத்தில் காரை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Car Safety Floods: வெள்ள காலத்தில் காரை பாதுகாப்பது எப்படி இன்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

மழைக்காலத்தில் கார் பாதுகாப்பு:

மழைக்காலம் காட்சிக்கு இனிமையானதாகவும், விவசாயிகளுக்கு லாபம் அளிப்பதாகவும் இருந்தாலும், சில கார் உரிமையாளர்களுக்கு அது தொல்லையாக அமைந்து விடுகிறது.பல்வேறு உட்கட்டமைப்பு குறைபாடுகள் காரணமாக, கனமழை எதிர்பாராத நேரங்களில் வெள்ளத்தை ஏற்படுத்தி விடுகின்றன. இந்த சூழலில் கார் பார்க்கிங்கிற்கு என பாதுகாப்பான இடவசதி கொண்டிருப்பவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், இடவசதி இன்றி திறந்த வெளி மற்றும் தாழ்வான பகுதிகளில் வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு வெள்ள காலம் என்பது பெரும் பிரச்னையாக அமைகிறது. அவர்களுக்கு உதவும் வகையில் வெள்ள காலத்தில் காரை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

  • பேட்டரிகளை துண்டிக்கவும்: 

கார் நிறுத்தும் பகுதியில் திடீர் வெள்ளம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டால், உங்கள் காரை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற முடியாவிட்டாலும், அதன் உயிரைப் பாதுகாக்க சில நடவடிக்கைகளை எடுக்கலாம். குறிப்பாக காரின் பேட்டரியை துண்டிப்பதன் மூலம் அதில் சேமிக்கப்பட்டுள்ள மின்சாரத்தைப் பாதுகாக்கலாம். மேலும்,  ஷார்ட் சர்க்யூட் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதையும் தடுக்கலாம்.

  • உயரமான பகுதியில் பார்க் செய்யவும்:

வெள்ளம் அடிக்கடி ஏற்படும் தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள், காரை ஒரு உயரமான இடத்தில் பார்க் செய்வது அவசியம். அதற்கான இடம் உங்கள் வீட்டிலிருந்து சற்று தொலைவில் இருந்தாலும், அதைப் பயன்படுத்துவதே புத்திசாலித்தனமானது. குறிப்பாக ஹேட்ச்பேக்குகள் மற்றும் செடான்களின் உரிமையாளர்கள் இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும். காரணம் அவை SUV கார்களை விட குறைவான கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

  • வெள்ளம் நிறைந்த பகுதிகளை தவிர்க்கவும்:

நீங்கள் செல்லும் பாதை அல்லது அதன் ஒரு பகுதியில் ​​நீர் தேங்கினாலோ அல்லது வெள்ளத்தில் மூழ்கினாலோ, அவ்வழியாக  வாகனம் ஓட்டுவதைத் தவிர்ப்பதே சிறந்த முடிவாக இருக்கும். தண்ணீர் குறைவாக இருக்கும் என்பத உறுதியாக தெரிந்த பாதைகளில் மட்டும் வாகனத்தை செலுத்துங்கள். அல்லது எதேனும் ஒரு வாகனம் பாதுகாப்பாக அந்த தண்ணீர் சூழ்ந்த பாதையை கடந்து செல்லும் வரை காத்திருங்கள். காரணம்  நீர் தேங்கி நிற்கும் பகுதி பெரிய பள்ளங்கள் அல்லது திறந்த குட்டைகள் போன்ற ஆபத்துகளை மறைத்து இருக்கலாம். இது உங்கள் காரின் சக்கரத்தை எளிதில் சிக்க வைக்கும். 

  • டயரை விட நீர்மட்டம் அதிகமாக இருந்தால் வாகனத்தை நிறுத்துங்கள்:

டயரின் பாதியை விட நீர்மட்டம் உயரமாக இருப்பதைக் கண்டால், காரை அவ்வழியாக செலுத்துவதை நிறுத்துங்கள். காரணம் காரின் எக்சாஸ்ட் அமைப்பானது டயரின் பாதி உயரத்திற்கு இணையாக தான் அமைக்கப்படுகிறது. இதனால், அந்த சூழலில் காரை செலுத்தினால் எக்சாஸ்டில் தண்ணீர் பாயும் வாய்ப்பு உள்ளது. இது காரை பழுதுபார்க்க முடியாத அளவுக்கு கூட சேதத்தை ஏற்படுத்தலாம்.  இதுபோன்ற சந்தர்ப்பங்களில் சாலையின் உயரமான பகுதி வழியாக வாகனம் ஓட்டடுவது சிறந்த முடிவாக இருக்கும்.

  • காரை மெதுவாக ஓட்டவும்:

நீர் தேங்கி நிற்கும் பகுதியின் வழியாக தான் கட்டாயம் செல்ல வேண்டி இருந்தால்,  அதற்கேற்ப வாகனம் ஓட்ட வேண்டுவது அவசியம். குறைந்த கியரில் அதிக ஆர்பிஎம்களில், நிலையான வேகத்தை பராமரிப்பது எளிதானது மற்றும் கார் தண்ணீரில் நிற்க வாய்ப்பில்லை. வேகமாக வாகனம் ஓட்டுவது காரின் எஞ்சின் பே அல்லது மின் சாதனங்களில் நீர் கசியும் வாய்ப்புகளை அதிகரிக்கும்.  இது மீண்டும் ஆபத்தானது.  ஆட்டோமேடிக் அல்லது டார்க் கன்வெர்ட்டர் மற்றும் டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் கார் ஓட்டுபவர்களுக்கு இது ஒரு முக்கியமான விஷயம். இதுபோன்ற சூழ்நிலைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட கியரில் உங்கள் கார் இருப்பதை உறுதிசெய்ய, மேனுவல் பயன்முறைக்கு மாற்றவும். 

  • கார் நின்றால் ஸ்டார்ட் செய்யாதீர்கள்:

மிக மோசமான சூழ்நிலையில் உங்கள் கார் வெள்ளம் சூழ்ந்த சாலையின் நடுவில் நின்று, டயரின் பாதி உயரத்திற்கு மேல் நீர்மட்டம் இருந்தால், அதை உடனே ஸ்டார்ட் வேண்டாம்.  காரின் மெக்கானிக்கல் அல்லது எலக்ட்ரிக்கல் பாகங்களில் தண்ணீர் ஏற்கனவே ஊர்ந்து சென்றிருக்கும் அல்லது வாகனம் செயல்படுவதற்கு இக்னீசியன் அமைப்பிற்கு தேவயான காற்றை உறிஞ்ச வேண்டி இருக்கும். பம்பர் வரை நீரில் மூழ்கியிருந்தாலும், அதை ஸ்டார்ட் செய்வதைத் தவிர்க்கவும். என்ஜின் அல்லது ஏர் ஃபில்டரில் தண்ணீர் நுழைந்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Hero Xtreme 250R Vs KTM 250 Duke: ஹீரோ எக்ஸ்ட்ரீம் 250R-ஆ.? கேடிஎம் 250 ட்யூக்கா.? விலை, செயல்திறன், சிறப்பம்சங்களில் எந்த பைக் சிறந்தது.?
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 250R-ஆ.? கேடிஎம் 250 ட்யூக்கா.? விலை, செயல்திறன், சிறப்பம்சங்களில் எந்த பைக் சிறந்தது.?
Bajaj E Scooters: ஒரே சார்ஜில் 151 கி.மீட்டர் மைலேஜ்.. பஜாஜ் இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, மைலேஜ் எப்படி?
Bajaj E Scooters: ஒரே சார்ஜில் 151 கி.மீட்டர் மைலேஜ்.. பஜாஜ் இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, மைலேஜ் எப்படி?
Kia Syros EV First Look: “டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
“டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
125 சிசியா 350 சிசியா? தினசரி ஓட்டுவோருக்கு எந்த பைக் பெஸ்ட், எதில் என்ன பிளஸ்? ஓர் ஒப்பீடு
125 சிசியா 350 சிசியா? தினசரி ஓட்டுவோருக்கு எந்த பைக் பெஸ்ட், எதில் என்ன பிளஸ்? ஓர் ஒப்பீடு

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC: க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
TN Weather Update: 4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TTV Statement : விஜய் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் போலி கடிதம்.! என் புகாருக்கு என்ன நடவடிக்கை எடுத்தீங்க- சீறிய டிடிவி
விஜய் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் போலி கடிதம்.! என் புகாருக்கு என்ன நடவடிக்கை எடுத்தீங்க- சீறிய டிடிவி
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
Embed widget