மேலும் அறிய

Ford Chennai : மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பும் ஃபோர்டு .. திடீரென மனம்மாறிய ஃபோர்டு நிறுவனம்..

Maraimalai Nagar Chennai Ford : சென்னை மறைமலைநகரில் செயல்பட்டு வந்த ஃபோர்டு   நிறுவனத்தை விற்கும் முடிவை அந்த நிறுவனம் கைவிட்டுள்ளது..

கோடிக்கணக்கில் இழப்பு
 
அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு  இந்தியாவில் சுமார் 20 ஆண்டுகளாக வாகனங்களை உற்பத்தி செய்து வந்தது இந்த ஆலைகளில் வருடத்திற்கு நான்கு லட்சம் கார்கள் உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலையில் தற்போது 80 ஆயிரம் கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன . இதனால் ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து பெரும் நஷ்டத்தில் இயங்கி வந்தது. இதனால் 14,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி, போர்டு நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்தது. ஃபோர்டு  தனது கடைசி காரை தயாரித்து,  இனி  இந்தியாவில் இருந்து வெளியேறுகிறோம் என அதிகாரம் பூர்வமாக அறிவித்தது.

அதேபோன்று சென்னை தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கும்   செட்டில்மெண்ட் அறிவித்தது.  பெரும்பாலான ஊழியர்கள் செட்டில்மெண்ட் தொகையை பெற்ற நிலையில்,  சில ஊழியர்கள்   அதைப் பெற்றுக்கொள்ளாமல்  நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்  இது தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. ஃபோர்டு நிறுவனத்தின் மூடப்பட்ட குஜராத் தொழிற்சாலையை, டாடா குழுமம் 725.7 கோடி ரூபாய்க்கு ,கடந்த ஜனவரி மாதம் வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

 இறுதி செய்யப்பட்ட ஒப்பந்தம்
 

இந்தநிலையில்,  ஃபோர்டு  மோட்டார்ஸ் நிறுவனம் மறைமலைநகர்  தொழிற்சாலையை விற்க முடிவு செய்திருந்தது.  இதற்காக பல்வேறு நிறுவனங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தன. ஜே.எஸ்.டபிள். யூ நிறுவனம் ஃபோர்டு தொழிற்சாலை வாங்குவதற்கு ஆர்வம் காட்டியது. இந்தநிலையில் சென்னை ஆலையை கிட்டத்தட்ட 830  கோடி ரூபாய்க்கு விற்பதற்கான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு இருந்தது  என தகவல் வெளியாகி இருந்தது.

 பின்வாங்கிய  ஃபோர்டு   நிறுவனம்

இந்நிலையில் தன் தொழிற்சாலையை விற்க விரும்பாததால் ஃபோர்டு   நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.  சென்னை மறைமலை நகரில் சுமார் 350 ஏக்கர் பரப்பளவில், இந்த தொழிற்சாலை அமைந்துள்ளது. சென்னையில் உள்ள ஆலையை விற்பனை செய்ய ஃபோர்டு  மோட்டார்ஸ் நிறுவனம் பல்வேறு வகையில் முயற்சி செய்து வந்த நிலையில்,  தற்போது  அதிலிருந்து பின்வாங்கியுள்ளது.

பகிர்ந்துகொள்ள, வேறு எதுவும் இல்ல

இது குறித்து ஃபோர்டு   இந்தியா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர்  சார்பில் வெளியான   தகவலில்,  ”இந்தியாவில் எஞ்சியுள்ள உள்ள ஒரே தொழிற்சாலையை சமீபத்தில்  முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு, ஃபோர்டு  நிறுவனம் விற்க விரும்பவில்லை.  சென்னையில் எங்கள் நிறுவனத்தின் உற்பத்திக்கான மாற்று வழியை நாங்கள் தொடர்ந்த ஆராய்ந்து வருகிறோம். மேலும் இது குறித்து பகிர்ந்து கொள்ள, வேறு எதுவும் இல்லை என தெரிவித்ததாக தகவல் வெளியானது. இதன் மூலம் சென்னை   உற்பத்தியாலையை   விற்பதிலிருந்து போன் நிறுவனம்  பின்வாங்கி இருப்பது   உறுதி செய்யப்பட்டுள்ளது.

 மின்சார வாகனங்கள்  தயாரிக்கப்படுமா ?

தற்பொழுது இந்தியாவில் பல்வேறு நிறுவனங்கள் மின்சார கார்களை  தயாரித்து விற்பனை செய்து வருகின்றன. இந்தியாவில் மின்சார வாகனங்கள் பயன்பாட்டிற்கு வர துவங்கியுள்ளன.  குறிப்பாக பல்வேறு இடங்களில் மின்சார வாகனங்கள்  சார்ஜ் செய்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.   இதனை கருத்தில் கொண்டு போர்ட் நிறுவனம்  சென்னை   உற்பத்தி ஆலையில் மின்சார வாகனங்களை தயாரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  மின்சார வாகனங்கள் தயாரிப்பது குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகாத நிலையில்,  இதற்கான சாத்திய கூறுகளை அதிகம் இருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
Chennai Suicide: சென்னையில் பயங்கரம்..! மருத்துவர் குடும்பத்தோடு தற்கொலை, சிறுவர்கள் உட்பட 4 பேர் பலி
Chennai Suicide: சென்னையில் பயங்கரம்..! மருத்துவர் குடும்பத்தோடு தற்கொலை, சிறுவர்கள் உட்பட 4 பேர் பலி
TN Railway Projects: நிலுவையில் 17 ரயில்வே திட்டங்கள் - காத்துக்கிடக்கும் தமிழக மக்கள், ஈரோட்டிற்கு ஏமாற்றமே..!
TN Railway Projects: நிலுவையில் 17 ரயில்வே திட்டங்கள் - காத்துக்கிடக்கும் தமிழக மக்கள், ஈரோட்டிற்கு ஏமாற்றமே..!
Chennai Bus Pass: சென்னை மக்களுக்கு ஜாக்பாட்.. AC பஸ்ஸிலும் வருகிறது பஸ் பாஸ் முறை.. 
Chennai Bus Pass: சென்னை மக்களுக்கு ஜாக்பாட்.. AC பஸ்ஸிலும் வருகிறது பஸ் பாஸ் முறை.. 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!Mohammed Shami controversy | ரமலான் நோன்பு.. அவமதித்தாரா முகமது ஷமி? இஸ்லாம் சொல்வது என்ன?Mayor Issue | “பொண்ணுனா கேவலமா போச்சா” கடலூர் மேயர் Vs அதிகாரிகள் மோதல் பின்ணனி என்ன? | Cuddalore

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
Chennai Suicide: சென்னையில் பயங்கரம்..! மருத்துவர் குடும்பத்தோடு தற்கொலை, சிறுவர்கள் உட்பட 4 பேர் பலி
Chennai Suicide: சென்னையில் பயங்கரம்..! மருத்துவர் குடும்பத்தோடு தற்கொலை, சிறுவர்கள் உட்பட 4 பேர் பலி
TN Railway Projects: நிலுவையில் 17 ரயில்வே திட்டங்கள் - காத்துக்கிடக்கும் தமிழக மக்கள், ஈரோட்டிற்கு ஏமாற்றமே..!
TN Railway Projects: நிலுவையில் 17 ரயில்வே திட்டங்கள் - காத்துக்கிடக்கும் தமிழக மக்கள், ஈரோட்டிற்கு ஏமாற்றமே..!
Chennai Bus Pass: சென்னை மக்களுக்கு ஜாக்பாட்.. AC பஸ்ஸிலும் வருகிறது பஸ் பாஸ் முறை.. 
Chennai Bus Pass: சென்னை மக்களுக்கு ஜாக்பாட்.. AC பஸ்ஸிலும் வருகிறது பஸ் பாஸ் முறை.. 
Top 10 News Headlines: ரூ.65 ஆயிரத்தை நெருங்கும், 2027 உலகக் கோப்பையில் ரோகித், மாயமாகும் காயங்கள் - டாப் 10 செய்திகள்
Top 10 News Headlines: ரூ.65 ஆயிரத்தை நெருங்கும், 2027 உலகக் கோப்பையில் ரோகித், மாயமாகும் காயங்கள் - டாப் 10 செய்திகள்
Sri Brinda Theatre closed :மூடு விழா கண்ட ரஜினி  தியேட்டர்!  சோகத்தில் ரசிகர்கள்! அடுத்து என்னவாக போகுது?
Sri Brinda Theatre closed :மூடு விழா கண்ட ரஜினி தியேட்டர்! சோகத்தில் ரசிகர்கள்! அடுத்து என்னவாக போகுது?
Sheikh Hasina: ரைட்ரா..! “மீண்டும் பிரதமராகும் ஷேக் ஹசீனா, உதவிய பிரதமர் மோடிக்கு நன்றி” - தவறு யாருடையது?
Sheikh Hasina: ரைட்ரா..! “மீண்டும் பிரதமராகும் ஷேக் ஹசீனா, உதவிய பிரதமர் மோடிக்கு நன்றி” - தவறு யாருடையது?
Pakistan Train: முடிவுக்கு வந்த ரயில் கடத்தல் - உயிர் தப்பிய 340 பயணிகள் - துப்பாக்கிகளால் பறிபோன  உயிர்கள்
Pakistan Train: முடிவுக்கு வந்த ரயில் கடத்தல் - உயிர் தப்பிய 340 பயணிகள் - துப்பாக்கிகளால் பறிபோன உயிர்கள்
Embed widget