மேலும் அறிய

நாகூா் நாகநாதசுவாமி கோயிலின் பிரமோற்சவ விழா தேரோட்டம் - பக்தியுடன் தேரை வடம் பிடித்த பக்தர்கள்

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம்.

நாகூா் நாகநாதசுவாமி கோயிலின் பிரமோற்சவ விழா தேரோட்டம்  வெகு சிறப்பாக தொடங்கியது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
 
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் உள்ள திருநாகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீநாகநாத சுவாமி கோயில், மூா்த்தி, தலம், தீா்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்புப் பெற்றத் தலமாகவும், காசிக்கு இணையானதாகவும், ராகு, கேது, காலசர்ப்ப தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது. இக்கோயிலின் பிரமோற்சவ விழா கடந்த  ஜூலை 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருத்தேரோட்டம் இன்று காலை வெகு சிறப்பாக தொடங்கி நடைபெற்றுது. முன்னதாக நேற்று காட்சிக்கொடுத்த நாயனாா் வீதியுலாவும், ருத்திரசா்மா, சந்திரவா்மா்களுக்கு காட்சிக் கொடுத்தருளிய நிகழ்வும் நடைபெற்றது. பின்னர்  நேற்று காலை சுமாா் 11 மணி அளவில் ஸ்ரீதியாகராஜப் பெருமானுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.
 

நாகூா் நாகநாதசுவாமி கோயிலின் பிரமோற்சவ விழா தேரோட்டம் - பக்தியுடன் தேரை வடம் பிடித்த பக்தர்கள்
 
இரவு நிகழ்ச்சியாக, கைலாய வாகனத்தில் சுவாமி வீதியுலாவும், அதைத் தொடா்ந்து ஸ்ரீதியாகராஜப் பெருமான் தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னா், காலை 8.15 மணிக்கு நாகை மாவட்ட  ஆட்சியர்  அருண் தம்புராஜ், தமிழக  மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கௌதமன் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி  வைத்தார். விநாயகர் மற்றும் பஞ்சமூர்த்திகள் சுவாமி ஒரு தேரிலும், மற்றொரு தேரில் சுவாமி மற்றும் அம்பாளும் பிரம்மாண்ட தேரில் தியாகராஜப் பெருமானும் பக்கதர்களுக்கு காட்சியளித்தனர்.
 
 

நாகூா் நாகநாதசுவாமி கோயிலின் பிரமோற்சவ விழா தேரோட்டம் - பக்தியுடன் தேரை வடம் பிடித்த பக்தர்கள்
 
ஐதீக முறைப்படி, பாரம்பரிய வீதிகளில் வலம் வந்த தேர் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த  திரளானோர் தேரோட்டத்தில் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். நாகை மாவட்ட எஸ்பி ஜவஹர் உத்தரவின் பேரில்  டிஎஸ்பி சரவணன் தலைமையிலான சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தேரோட்டத்தையொட்டி, நாகை வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உடன் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் இராணி, செயல் அலுவலர் அசோக் ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR vs KKR: சுழலில் சிக்கிய ராஜஸ்தான்.. காப்பாற்றிய துருவ் ஜூரல்.. கொல்கத்தாவுக்கு இலக்கு என்ன?
RR vs KKR: சுழலில் சிக்கிய ராஜஸ்தான்.. காப்பாற்றிய துருவ் ஜூரல்.. கொல்கத்தாவுக்கு இலக்கு என்ன?
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR vs KKR: சுழலில் சிக்கிய ராஜஸ்தான்.. காப்பாற்றிய துருவ் ஜூரல்.. கொல்கத்தாவுக்கு இலக்கு என்ன?
RR vs KKR: சுழலில் சிக்கிய ராஜஸ்தான்.. காப்பாற்றிய துருவ் ஜூரல்.. கொல்கத்தாவுக்கு இலக்கு என்ன?
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
Embed widget