மேலும் அறிய

Madurai Adheenam: அபாய கட்டத்தில் மதுரை ஆதின அருணகிரிநாதர்: குரு முகூர்த்தத்திற்கு இடம் தேர்வு செய்த மடாதிபதிகள்!

மதுரை ஆதினம் அருகே உள்ள இடத்தில் பொக்லைன் இயந்திரங்கள் செல்வதற்கு வழியில்லை என்பதால் மாற்று இடத்தை மடாதிபதிகள் தேர்வு செய்தனர்.

மதுரை ஆதினத்தின் 292-வது குருமகா சன்னிதானம் என அழைக்கப்படும் அருணகிரி நாதர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், வெளியில் வராமல் ஆதீன மடத்திலேயே முடங்கி இருந்தார். கொரோனா பேரிடர் காலங்களில் பிறரிடம் பேசுவதை கூட அவர் தவிர்த்தார். அவரது அறிவிப்புகள் கூட அவரது உதவியாளர்கள் மூலமே வெளியாகி வந்தது. தொடர்ந்த சுவாசப்பிரச்னையால் அவதியடைந்து வந்த அவருக்கு திடீரென தீவிர உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சுவாசப்பிரச்னை காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அருணகிரிநாதர் அனுமதிக்கப்பட்டார்.


Madurai Adheenam: அபாய கட்டத்தில் மதுரை ஆதின அருணகிரிநாதர்: குரு முகூர்த்தத்திற்கு இடம் தேர்வு செய்த மடாதிபதிகள்!

தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் வயது மூப்பு காரணமாக மருத்துவர்களின் சிகிச்சை பெரிய அளவில் பயனளிக்கவில்லை. செயற்கை சுவாசக்கருவியுடன் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் அருணகிரி நாதர், அபாய கட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியானது. தமிழ்நாட்டின் முக்கிய ஆதினமான மதுரை ஆதினத்தின் உடல்நலக்குறைவு, மற்ற ஆதின மடாதிபதிகளுக்கு கவலையளித்தது. 

இதைத் தொடர்ந்து நேற்று பல்வேற ஆதின மடாதிபதிகள் மதுரை வருகை தந்தனர். சிலர் அருணகிரிநாதரை மருத்துவமனையில் நேரில் சந்தித்தனர். தருமபுர ஆதினம் தலைமையிலான மடாதிபதிகள், மதுரை ஆதின அறையை பூட்டி சீல் வைத்தனர். அது வழக்கமான நடவடிக்கை தான் என்றும், மதுரை ஆதின இளவரசர் உள்ளிட்டோர் முன்னிலை தான் முறையாக சீல் வைக்கப்பட்டதாக தருமபுர ஆதினம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 


Madurai Adheenam: அபாய கட்டத்தில் மதுரை ஆதின அருணகிரிநாதர்: குரு முகூர்த்தத்திற்கு இடம் தேர்வு செய்த மடாதிபதிகள்!

இந்நிலையில் மடாதிபதிகளின் வருகையின் போதே ஒருவேளை மதுரை ஆதினம் குரு முகூர்த்தமானால்(இறப்பு) அவருக்கான இடம் தேர்வு செய்யும் பணியும் நடந்து முடிந்தது. அதன் படி மதுரை ஆதினம் அருகே உள்ள இடத்தில் பொக்லைன் இயந்திரங்கள் செல்வதற்கு வழியில்லை என்பதால், மதுரை முனிச்சாலை பழைய தினமணி டாக்கீஸ் அருகே இடம் தேர்வு செய்து, அதற்கான பணிகளும் துவங்கியுள்ளன.


Madurai Adheenam: அபாய கட்டத்தில் மதுரை ஆதின அருணகிரிநாதர்: குரு முகூர்த்தத்திற்கு இடம் தேர்வு செய்த மடாதிபதிகள்!

 கடந்த மார்கழி மாதம் அருணகிரி நாதரை தருமபுர ஆதினம் சந்தித்த போது, தனது குரு முகூர்த்தம் குறித்து அவர் அவரிடம் பேசியதாகவும், அதன் அடிப்படையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக ஏற்கனவே தர்மபுர ஆதினம் தெரிவித்த நிலையில், அபாய கட்டத்தை அருணகிரி நாதர் எட்டியதால் எந்த பிரச்னைகளும், சொந்தரவும் இல்லாத வகையில் அவரது குரு முகூர்த்தத்தை நடத்த மடாதிபதிகள் முடிவு செய்துள்ளனர். 

மதுரை ஆதின அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது ஏன்? தருமபுர ஆதின மடாதிபதி விளக்கம்!

ஆதினம் அருணகிரிநாதர் அறைக்கு பூட்டு; எழுந்தது அடுத்த ஆதினம் யார் என்கிற பிரச்னை!

 

 

 

 

 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Embed widget