மேலும் அறிய

மதுரை ஆதின அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது ஏன்? தருமபுர ஆதின மடாதிபதி விளக்கம்!

மதுரை ஆதினம் உடல்நலம் குறித்தும், ஆதீன அறை சீல் வைக்கப்பட்டது குறித்தும் தருமபுர ஆதீன மடாதிபதி விளக்கம் அளித்துள்ளார்.

புகழ்பெற்ற மதுரை ஆதினத்தின் 292 வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் உடல் நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மதுரை ஆதினத்தின் அடுத்த மடாதிபதி யார் என்ற சர்ச்சை எழ தொடங்கி பரவலாக பேசப்பட்டு வருகிறது. நித்யானந்தா தான் தான் அடுத்த மதுரை ஆதினம் என கூறிவரும் நிலையில், மதுரை ஆதீனத்தின் 292 வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத சுவாமியை நேற்று தருமபுர ஆதின மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நேரில் சந்தித்து அவரது உடல் நிலை குறித்து விசாரித்தார்.


மதுரை ஆதின அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது ஏன்? தருமபுர ஆதின மடாதிபதி விளக்கம்!

பின்னர் மதுரை ஆதினத்திற்கு நேரில் சென்று மதுரை ஆதினத்தின் முக்கிய அறைகளை ஆதின வழக்கப்படி பூட்டி சீல் வைத்தார். மதுரை ஆதீனம் சித்தி அடைந்தால், அவருக்காக எழுப்பப்படும் குரு முகூர்த்த இடம் குறித்து, நேரில் ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்ட நிலையில், இது சம்பந்தமாக இன்று தருமபுர ஆதினத்தில் 27வது ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.


மதுரை ஆதின அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது ஏன்? தருமபுர ஆதின மடாதிபதி விளக்கம்!

அப்போது அவர் கூறும்போது மதுரை ஆதினம் உடல்நலத்துடன் இருந்த போது கடந்த மார்கழி மாதம் தான் சந்திததாகவும், அப்போது மதுரை ஆதினத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தனது குரு முகூர்த்தம் குறித்தும் தனது விருப்பத்தை என்னிடம் தெரிவித்தார். நேற்று மதுரையில் அவரை சந்தித்த பொழுது என்னைப் பார்த்து கண்ணீர் விட்டதுடன், எனது கையால் தண்ணீர் அருந்தினார். ஏற்கனவே கூறிய ஆலோசனையின்படி தற்போதைய மதுரை ஆதின இளவரசு மற்றும் வழக்கறிஞர் முன்னிலையில் ஆதினத்தின் அறைகளுக்கு சீல் வைத்ததாகவும், இது அனைத்து ஆதினங்களின் நடைமுறையில் உள்ள வழக்கம் தான் என்றும்,


மதுரை ஆதின அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது ஏன்? தருமபுர ஆதின மடாதிபதி விளக்கம்!

மதுரை ஆதீனம் அவர்கள் தருமபுர ஆதீனத்தில், ஐந்து ஆண்டுகள் தம்பிரானாக இருந்துள்ளதாகவும், தானும் ஐந்து ஆண்டுகள் மதுரை ஆதீனம் அவர்களிடம், பணிவிடையாக இருந்ததாகவும், தற்போதைய மதுரை ஆதீன இளவரசராக இருப்பவர் தருமபுர ஆதீனத்தில் கட்டளை தம்பிரான் ஆக இருந்தவர் தான், நாங்கள் மதுரை ஆதீனத்தை எந்தவித நோக்கத்துடனும் பூட்டி சீல் வைக்க வில்லை என்றும், மதுரை ஆதீனம் 292 வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள்  நோயிலிருந்து மீண்டு விரைவாக வர வேண்டும் என்பதே எங்களது எண்ணம் என்று தெரிவித்தார்.


மதுரை ஆதின அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது ஏன்? தருமபுர ஆதின மடாதிபதி விளக்கம்!

மதுரை ஆதீனத்தின் 292 வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் அடுத்த மடாதிபதி தான் தான் என கூறுவதும், தர்மபுரம் ஆதீனம் 27வது ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மதுரை ஆதினத்தின் அறையை பூட்டி சீல் வைத்ததும் என பெரும் சர்ச்சையும், பரபரப்பும் நிலவி வருகிறது.

தலைப்பு செய்திகள்

தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே 803 கிலோ கஞ்சா தீயில் அழிப்பு! ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே காக்கும் நடவடிக்கை
தஞ்சாவூர் அருகே 803 கிலோ கஞ்சா தீயில் அழிப்பு! ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே காக்கும் நடவடிக்கை
தஞ்சையின் “வியூ”வை ரசித்து பார்க்க இந்த ஸ்பாட் சூப்பர் ஹாட் ஸ்பாட் நண்பாஸ்
தஞ்சையின் “வியூ”வை ரசித்து பார்க்க இந்த ஸ்பாட் சூப்பர் ஹாட் ஸ்பாட் நண்பாஸ்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
Embed widget