மேலும் அறிய

மழையால் வெள்ளம் புகுந்த வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மீண்டும் பக்தர்களுக்கு அனுமதி

தமிழகத்தில் பெய்த தொடர் மழையால் ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு தண்ணீர் புகுந்ததால் கடந்த 10 நாட்களாக பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படாமல் இருந்தனர்

வேலூர் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது வரலாற்று சிறப்புமிக்க அகழியுடன் கூடிய வேலூர் கோட்டை. 136 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்கோட்டையினுள் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் கோட்டை அகழியின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து.


மழையால் வெள்ளம் புகுந்த வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மீண்டும் பக்தர்களுக்கு அனுமதி

அதன் காரணமாக கோட்டையின் உள்ளே அமைந்துள்ள ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தின் வளாகத்தில் தண்ணீர் புகுந்தது. நாளடைவில் வெளியேறிவிடும் என கருதப்பட்ட தண்ணீர் தொடர்ந்து அதிகரித்து வந்ததன் காரணமாக பாதுகாப்பு கருதி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கடந்த மாதம் 22 ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. கோட்டை அகழியில் நீர்மட்டம் உயர்ந்தாலும், கோவில் வளாகத்தில் இருந்து அகழிக்கு செல்லும் கால்வாயில் நீர் திரும்பி கோவிலுக்குள் வந்ததன் காரணமாகவும், கோவிலில் உள்ள கிணறு மற்றும் குளங்களில் உபரி நீர் வழிந்தோடி கோவில் வளாகத்தில் சுமார் 2 அடி வரைக்கும் தண்ணீர் தேங்கியதாக கூறப்பட்டது. 


மழையால் வெள்ளம் புகுந்த வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மீண்டும் பக்தர்களுக்கு அனுமதி

மேலும் கோட்டை அகழியில் இருந்து உபரி நீர் வெளியேறுவதற்காக அக்காலகட்டத்திலேயே அமைக்கப்பட்ட வடிநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டும், ஆக்கிரமிப்பு காரணமாகவும் மறைத்திருந்ததால் அகழி நீரை வெளியேற்றுவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது. மாவட்ட நிர்வாகம் பொதுப்பணித்துறை, மாநகராட்சி நிர்வாகம் ஆகியோர் பலமுறை முயன்றும் முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. 


மழையால் வெள்ளம் புகுந்த வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மீண்டும் பக்தர்களுக்கு அனுமதி

இதனால் ஜலகண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் தேங்கியுள்ள நீரை ராட்சத மின் மோட்டார்கள் மூலம் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கடந்த ஆறு நாட்களுக்கும் மேலாக இப்பணி தொடர்ந்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை முழுவதுமாக தண்ணீர் வெளியேறி கோவில் வளாகம் முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் மீண்டும் தண்ணீர் வளாகத்திற்குள் நுழைந்ததால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் தொடர்ந்து மின்மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியில் நேற்றுவரை ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து நேற்று இரவு முழு தண்ணீரும் வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது. இதனை அடுத்து பக்தர்கள் கோவிலுக்குள் தரிசிக்க அனுமதிக்கலாம் என கோவில் நிர்வாகம் முடிவு செய்ததை அடுத்து இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. 


மழையால் வெள்ளம் புகுந்த வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மீண்டும் பக்தர்களுக்கு அனுமதி

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஜலகண்டேஸ்வரரை தரிசிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தடை நீக்கப்பட்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். குடும்பத்தோடு வந்து ஜலகண்டேஸ்வரரை தரிசித்து செல்கின்றனர். உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்களும் தரிசித்து செல்கின்றனர். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக கவசம் அணிவது, கிருமிநாசினி தெளிப்பது உள்ளிட்டவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வேலூர் கோட்டை மற்றும் ஜலகண்டேஸ்வரர் ஆலயம் வேலூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று என்பதால் இங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

மேலும் கோட்டை அகழியில் தேங்கியுள்ள உபரி நீரை வெளியேற்றும் பணியில் வேலூர் மாநகராட்சி நிர்வாகத்தினரும் பொதுப்பணித்துறை நிர்வாகத்தினரும் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
EPS ADMK: நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
Embed widget