மேலும் அறிய

மழையால் வெள்ளம் புகுந்த வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மீண்டும் பக்தர்களுக்கு அனுமதி

தமிழகத்தில் பெய்த தொடர் மழையால் ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு தண்ணீர் புகுந்ததால் கடந்த 10 நாட்களாக பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படாமல் இருந்தனர்

வேலூர் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது வரலாற்று சிறப்புமிக்க அகழியுடன் கூடிய வேலூர் கோட்டை. 136 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்கோட்டையினுள் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் கோட்டை அகழியின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து.


மழையால் வெள்ளம் புகுந்த வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மீண்டும் பக்தர்களுக்கு அனுமதி

அதன் காரணமாக கோட்டையின் உள்ளே அமைந்துள்ள ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தின் வளாகத்தில் தண்ணீர் புகுந்தது. நாளடைவில் வெளியேறிவிடும் என கருதப்பட்ட தண்ணீர் தொடர்ந்து அதிகரித்து வந்ததன் காரணமாக பாதுகாப்பு கருதி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கடந்த மாதம் 22 ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. கோட்டை அகழியில் நீர்மட்டம் உயர்ந்தாலும், கோவில் வளாகத்தில் இருந்து அகழிக்கு செல்லும் கால்வாயில் நீர் திரும்பி கோவிலுக்குள் வந்ததன் காரணமாகவும், கோவிலில் உள்ள கிணறு மற்றும் குளங்களில் உபரி நீர் வழிந்தோடி கோவில் வளாகத்தில் சுமார் 2 அடி வரைக்கும் தண்ணீர் தேங்கியதாக கூறப்பட்டது. 


மழையால் வெள்ளம் புகுந்த வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மீண்டும் பக்தர்களுக்கு அனுமதி

மேலும் கோட்டை அகழியில் இருந்து உபரி நீர் வெளியேறுவதற்காக அக்காலகட்டத்திலேயே அமைக்கப்பட்ட வடிநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டும், ஆக்கிரமிப்பு காரணமாகவும் மறைத்திருந்ததால் அகழி நீரை வெளியேற்றுவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது. மாவட்ட நிர்வாகம் பொதுப்பணித்துறை, மாநகராட்சி நிர்வாகம் ஆகியோர் பலமுறை முயன்றும் முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. 


மழையால் வெள்ளம் புகுந்த வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மீண்டும் பக்தர்களுக்கு அனுமதி

இதனால் ஜலகண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் தேங்கியுள்ள நீரை ராட்சத மின் மோட்டார்கள் மூலம் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கடந்த ஆறு நாட்களுக்கும் மேலாக இப்பணி தொடர்ந்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை முழுவதுமாக தண்ணீர் வெளியேறி கோவில் வளாகம் முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் மீண்டும் தண்ணீர் வளாகத்திற்குள் நுழைந்ததால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் தொடர்ந்து மின்மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியில் நேற்றுவரை ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து நேற்று இரவு முழு தண்ணீரும் வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது. இதனை அடுத்து பக்தர்கள் கோவிலுக்குள் தரிசிக்க அனுமதிக்கலாம் என கோவில் நிர்வாகம் முடிவு செய்ததை அடுத்து இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. 


மழையால் வெள்ளம் புகுந்த வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மீண்டும் பக்தர்களுக்கு அனுமதி

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஜலகண்டேஸ்வரரை தரிசிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தடை நீக்கப்பட்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். குடும்பத்தோடு வந்து ஜலகண்டேஸ்வரரை தரிசித்து செல்கின்றனர். உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்களும் தரிசித்து செல்கின்றனர். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக கவசம் அணிவது, கிருமிநாசினி தெளிப்பது உள்ளிட்டவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வேலூர் கோட்டை மற்றும் ஜலகண்டேஸ்வரர் ஆலயம் வேலூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று என்பதால் இங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

மேலும் கோட்டை அகழியில் தேங்கியுள்ள உபரி நீரை வெளியேற்றும் பணியில் வேலூர் மாநகராட்சி நிர்வாகத்தினரும் பொதுப்பணித்துறை நிர்வாகத்தினரும் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

Rasi Palan Today (24-08-2026): மேஷத்துக்கு செலவு.. உங்க ராசிக்கு என்ன நடக்கும்? - இன்றைய பலன்கள் இதோ!
Rasi Palan Today (24-08-2026): மேஷத்துக்கு செலவு.. உங்க ராசிக்கு என்ன நடக்கும்? - இன்றைய பலன்கள் இதோ!
Rasi Palan Today (22-08-2026): தனுசுக்கு வெற்றி.. கும்பத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு? - இன்றைய பலன்கள்!
Rasi Palan Today (22-08-2026): தனுசுக்கு வெற்றி.. கும்பத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு? - இன்றைய பலன்கள்!
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (19-08-2026): கடகத்திற்கு புகழ்.. விருச்சிகத்திற்கு மகிழ்ச்சி.. உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ!
Rasi Palan Today (19-08-2026): கடகத்திற்கு புகழ்.. விருச்சிகத்திற்கு மகிழ்ச்சி.. உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parandur Airport: பரந்தூர் இனி கிடையாது.. அப்போ சென்னை புது ஏர்போர்ட் இந்த 3 ஏரியாவுல ஒரு இடத்துலதானா?
Parandur Airport: பரந்தூர் இனி கிடையாது.. அப்போ சென்னை புது ஏர்போர்ட் இந்த 3 ஏரியாவுல ஒரு இடத்துலதானா?
தப்பிச்சு வந்த 2 பேர்; இல்லைன்னா.. உதயநிதி, ஈபிஎஸ்ஸை மறைமுகமாக கிண்டலடித்த அமைச்சர் செங்கோட்டையன்
தப்பிச்சு வந்த 2 பேர்; இல்லைன்னா.. உதயநிதி, ஈபிஎஸ்ஸை மறைமுகமாக கிண்டலடித்த அமைச்சர் செங்கோட்டையன்
Vijayabaskar election case : 5 தொகுதிகளுக்கு தேர்தல் இல்லை.! விஜயபாஸ்கருக்கு ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்- நீதிமன்றத்தில் திடீர் ட்விஸ்ட்
5 தொகுதிகளுக்கு தேர்தல் இல்லை.! விஜயபாஸ்கருக்கு ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்- நீதிமன்றத்தில் திடீர் ட்விஸ்ட்
Iran Vs US Hormuz: “பொருளாதார போர் தொடர்ந்தா, ஒரு துளி எண்ணெய் கூட...“ அமெரிக்காவுக்கு ஈரான் பயங்கர எச்சரிக்கை
“பொருளாதார போர் தொடர்ந்தா, ஒரு துளி எண்ணெய் கூட...“ அமெரிக்காவுக்கு ஈரான் பயங்கர எச்சரிக்கை
Udhayanidhi Stalin: “அற்ப அரசியலுக்காக விமான நிலைய திட்டத்தை கைவிட்டால், அண்டை மாநிலங்களுக்கே லாபம்“ உதயநிதி ஸ்டாலின்
“அற்ப அரசியலுக்காக விமான நிலைய திட்டத்தை கைவிட்டால், அண்டை மாநிலங்களுக்கே லாபம்“ உதயநிதி ஸ்டாலின்
US Iran War: “அடக்குமுறை ஈரான் அரசுக்கு ஆதவான எல்லா பொருளாதார உயிர்நாடியும் துண்டிக்கப்படும்''-செல்றது யார் தெரியுமா.?
“அடக்குமுறை ஈரான் அரசுக்கு ஆதவான எல்லா பொருளாதார உயிர்நாடியும் துண்டிக்கப்படும்''-செல்றது யார் தெரியுமா.?
Stalin vs Vs Babu : நான் தான் வெற்றி பெற்றேன்.! வி.எஸ்.பாபுவிற்கு ஷாக் கொடுத்த ஸ்டாலின்- நீதிமன்றத்தில் திடீர் திருப்பம்
நான் தான் வெற்றி பெற்றேன்.! வி.எஸ்.பாபுவிற்கு ஷாக் கொடுத்த ஸ்டாலின்- நீதிமன்றத்தில் திடீர் திருப்பம்
பரந்தூர் ரத்து: பின்னோக்கிச் செல்லும் அபாயம்; புது விமான நிலைய இடத்தை விரைந்து கண்டறியக் கோரிக்கை!
பரந்தூர் ரத்து: பின்னோக்கிச் செல்லும் அபாயம்; புது விமான நிலைய இடத்தை விரைந்து கண்டறியக் கோரிக்கை!
Embed widget