மேலும் அறிய

மழையால் வெள்ளம் புகுந்த வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மீண்டும் பக்தர்களுக்கு அனுமதி

தமிழகத்தில் பெய்த தொடர் மழையால் ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு தண்ணீர் புகுந்ததால் கடந்த 10 நாட்களாக பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படாமல் இருந்தனர்

வேலூர் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது வரலாற்று சிறப்புமிக்க அகழியுடன் கூடிய வேலூர் கோட்டை. 136 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்கோட்டையினுள் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் கோட்டை அகழியின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து.


மழையால் வெள்ளம் புகுந்த வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மீண்டும் பக்தர்களுக்கு அனுமதி

அதன் காரணமாக கோட்டையின் உள்ளே அமைந்துள்ள ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தின் வளாகத்தில் தண்ணீர் புகுந்தது. நாளடைவில் வெளியேறிவிடும் என கருதப்பட்ட தண்ணீர் தொடர்ந்து அதிகரித்து வந்ததன் காரணமாக பாதுகாப்பு கருதி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கடந்த மாதம் 22 ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. கோட்டை அகழியில் நீர்மட்டம் உயர்ந்தாலும், கோவில் வளாகத்தில் இருந்து அகழிக்கு செல்லும் கால்வாயில் நீர் திரும்பி கோவிலுக்குள் வந்ததன் காரணமாகவும், கோவிலில் உள்ள கிணறு மற்றும் குளங்களில் உபரி நீர் வழிந்தோடி கோவில் வளாகத்தில் சுமார் 2 அடி வரைக்கும் தண்ணீர் தேங்கியதாக கூறப்பட்டது. 


மழையால் வெள்ளம் புகுந்த வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மீண்டும் பக்தர்களுக்கு அனுமதி

மேலும் கோட்டை அகழியில் இருந்து உபரி நீர் வெளியேறுவதற்காக அக்காலகட்டத்திலேயே அமைக்கப்பட்ட வடிநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டும், ஆக்கிரமிப்பு காரணமாகவும் மறைத்திருந்ததால் அகழி நீரை வெளியேற்றுவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது. மாவட்ட நிர்வாகம் பொதுப்பணித்துறை, மாநகராட்சி நிர்வாகம் ஆகியோர் பலமுறை முயன்றும் முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. 


மழையால் வெள்ளம் புகுந்த வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மீண்டும் பக்தர்களுக்கு அனுமதி

இதனால் ஜலகண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் தேங்கியுள்ள நீரை ராட்சத மின் மோட்டார்கள் மூலம் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கடந்த ஆறு நாட்களுக்கும் மேலாக இப்பணி தொடர்ந்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை முழுவதுமாக தண்ணீர் வெளியேறி கோவில் வளாகம் முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் மீண்டும் தண்ணீர் வளாகத்திற்குள் நுழைந்ததால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் தொடர்ந்து மின்மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியில் நேற்றுவரை ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து நேற்று இரவு முழு தண்ணீரும் வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது. இதனை அடுத்து பக்தர்கள் கோவிலுக்குள் தரிசிக்க அனுமதிக்கலாம் என கோவில் நிர்வாகம் முடிவு செய்ததை அடுத்து இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. 


மழையால் வெள்ளம் புகுந்த வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மீண்டும் பக்தர்களுக்கு அனுமதி

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஜலகண்டேஸ்வரரை தரிசிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தடை நீக்கப்பட்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். குடும்பத்தோடு வந்து ஜலகண்டேஸ்வரரை தரிசித்து செல்கின்றனர். உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்களும் தரிசித்து செல்கின்றனர். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக கவசம் அணிவது, கிருமிநாசினி தெளிப்பது உள்ளிட்டவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வேலூர் கோட்டை மற்றும் ஜலகண்டேஸ்வரர் ஆலயம் வேலூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று என்பதால் இங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

மேலும் கோட்டை அகழியில் தேங்கியுள்ள உபரி நீரை வெளியேற்றும் பணியில் வேலூர் மாநகராட்சி நிர்வாகத்தினரும் பொதுப்பணித்துறை நிர்வாகத்தினரும் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ukraine's Planned Attack: ட்ரக்கில் பயணித்த ட்ரோன்கள்; சீக்ரெட் ஆபரேஷன் ‘Spider's Web‘ - ரஷ்யாவுக்கே பாயசம் போட்ட உக்ரைன்
ட்ரக்கில் பயணித்த ட்ரோன்கள்; சீக்ரெட் ஆபரேஷன் ‘Spider's Web‘ - ரஷ்யாவுக்கே பாயசம் போட்ட உக்ரைன்
TVK Vijay: ஒரு பக்கம் ஜனநாயகன்.. மறுபக்கம் தவெக! பிறந்த நாளில் டபுள் ட்ரீட் தரப்போகும் விஜய்?
TVK Vijay: ஒரு பக்கம் ஜனநாயகன்.. மறுபக்கம் தவெக! பிறந்த நாளில் டபுள் ட்ரீட் தரப்போகும் விஜய்?
Poonamallee-Paranthur Metro: பூந்தமல்லி சுற்றுவட்டார மக்களுக்கு குதூகலமான செய்தி; வருது பரந்தூர் மெட்ரோ - முழு விவரம்
பூந்தமல்லி சுற்றுவட்டார மக்களுக்கு குதூகலமான செய்தி; வருது பரந்தூர் மெட்ரோ - முழு விவரம்
IPL Final RCB vs PBKS: ஐபிஎல் கோப்பை யாருக்கு? இவர்கள் கையில்தான் சாம்பியன் பட்டம் இருக்கு!
IPL Final RCB vs PBKS: ஐபிஎல் கோப்பை யாருக்கு? இவர்கள் கையில்தான் சாம்பியன் பட்டம் இருக்கு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ukraine's Planned Attack: ட்ரக்கில் பயணித்த ட்ரோன்கள்; சீக்ரெட் ஆபரேஷன் ‘Spider's Web‘ - ரஷ்யாவுக்கே பாயசம் போட்ட உக்ரைன்
ட்ரக்கில் பயணித்த ட்ரோன்கள்; சீக்ரெட் ஆபரேஷன் ‘Spider's Web‘ - ரஷ்யாவுக்கே பாயசம் போட்ட உக்ரைன்
TVK Vijay: ஒரு பக்கம் ஜனநாயகன்.. மறுபக்கம் தவெக! பிறந்த நாளில் டபுள் ட்ரீட் தரப்போகும் விஜய்?
TVK Vijay: ஒரு பக்கம் ஜனநாயகன்.. மறுபக்கம் தவெக! பிறந்த நாளில் டபுள் ட்ரீட் தரப்போகும் விஜய்?
Poonamallee-Paranthur Metro: பூந்தமல்லி சுற்றுவட்டார மக்களுக்கு குதூகலமான செய்தி; வருது பரந்தூர் மெட்ரோ - முழு விவரம்
பூந்தமல்லி சுற்றுவட்டார மக்களுக்கு குதூகலமான செய்தி; வருது பரந்தூர் மெட்ரோ - முழு விவரம்
IPL Final RCB vs PBKS: ஐபிஎல் கோப்பை யாருக்கு? இவர்கள் கையில்தான் சாம்பியன் பட்டம் இருக்கு!
IPL Final RCB vs PBKS: ஐபிஎல் கோப்பை யாருக்கு? இவர்கள் கையில்தான் சாம்பியன் பட்டம் இருக்கு!
NEET PG 2025 Exam: குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்; தள்ளிப்போன நீட் முதுகலைத் தேர்வு- எப்போது தெரியுமா?
NEET PG 2025 Exam: குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்; தள்ளிப்போன நீட் முதுகலைத் தேர்வு- எப்போது தெரியுமா?
Gold Rate 2nd June: மீண்டும் வேலையை காட்டிய தங்கம்; ஒரே நாளில் சவரனுக்கு இவ்வளவு உயர்வா.? இன்றைய நிலவரம்
மீண்டும் வேலையை காட்டிய தங்கம்; ஒரே நாளில் சவரனுக்கு இவ்வளவு உயர்வா.? இன்றைய நிலவரம்
Sellur Raju on DMK: போச்சு.! அடுத்த 10 வருஷத்துக்கு திமுக ஆட்சிக்கு வர முடியாது; செல்லூர் ராஜு சொன்ன மதுரை செண்ட்டிமென்ட்
போச்சு.! அடுத்த 10 வருஷத்துக்கு திமுக ஆட்சிக்கு வர முடியாது; செல்லூர் ராஜு சொன்ன மதுரை செண்ட்டிமென்ட்
IPL Final RCB vs PBKS: 18 ஆண்டு தவம்.. ஆர்சிபி - பஞ்சாப் இதுவரை எப்படி? ஐபிஎல் வரலாறு சொல்வது என்ன?
IPL Final RCB vs PBKS: 18 ஆண்டு தவம்.. ஆர்சிபி - பஞ்சாப் இதுவரை எப்படி? ஐபிஎல் வரலாறு சொல்வது என்ன?
Embed widget