மேலும் அறிய

பதராகி விட்டது... நிவாரணத்திலும் ஒதுக்கி விட்டார்கள்: சித்திரக்குடி விவசாயிகள் வேதனை

ரூ.35 ஆயிரம் வரை ஏக்கருக்கு செலவு செய்த பயிர்கள் பதராகி உள்ளது கண்டு விவசாயிள் பெரும் வேதனையில் உள்ளனர். சரிக்கு சரியாக அதாவது 50 சதவீதம் வரை ஏக்கருக்கு நெல்பயிர்கள் பதராகி விட்டது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் சித்திரக்குடி,கல்விராயன்பேட்டை, ராயந்தூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் தொடர் மழையால் பாதித்து பதரான நெற்பயிர்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து நிவாரணம் வழங்க வலியுறுத்தி மனு அளித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி பயிர்கள் சாகுபடி நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த மாதத்தில் பெய்த தொடர் மழையால் சாகுபடி பயிர்கள் பாதிக்கப்பட்டன. தஞ்சை மாவட்டத்தில் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கி பாதிக்கப்பட்டது. இதேபோல் இளம் தாளடி நாற்றுகளும் பாதிப்பை சந்தித்தன. இதனால் விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்தனர். இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சம்பா பயிர்கள் பூக்கும் தருணத்தில் மழை பெய்ததால் நெல்மணிகள் பதராகி விட்டது. இதனால் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் வேளாண்துறை சார்பில் கணக்கெடுப்பு எடுக்கும் பணிகளும் நடந்து வருகிறது.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, ராயந்தூர், சித்தாயல், குணமங்கலம் , வைர பெருமாள்பட்டி, அய்யாசாமிபட்டி, மருதக்குடி, திருவேங்உடையான்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பதரான நெற்பயிர்களுடன் வந்து அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-

தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையால் நெற்பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எங்கள் கிராமங்களில் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட  நெற்பயிர்களில் 50 சதவீதம் அளவுக்கு பதராகி உள்ளது. இதனால் ஒரு ஏக்கருக்கு சுமார் 8 முதல் 10 மூட்டை வரை பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. ஒரு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் செலவு செய்துள்ளோம். 

இந்த நிலையில் பூதலூர், கோவில்பத்து அதனை சார்ந்த கிராமங்களுக்கு அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. ஆனால் பூதலூர் தாலுகா பிர்காவில் உள்ள சித்திரக்குடி, ராயந்தூர், புதுகல்விராயன்பேட்டையை சார்ந்த கிராமங்களுக்கு உரிய நிவாரணம் அரசு அறிவிக்கவில்லை. எனவே எங்கள் கிராமங்களில் உரிய முறையில் கள ஆய்வு செய்து மேற்படி கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரண வழங்க வேண்டு. மேலும் உடனே தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.

இதே போல் கல்விராயன்பேட்டை ஊராட்சியில் உள்ள விவசாய நிலங்களை ஆயிரக்கணக்கான பன்றிகள் நாசப்படுத்தி உள்ளது. எனவே பன்றிகளை அப்புறப்படுத்தி பயிர்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் வரும் 6-ந்தேதி பூதலூர் பகுதியில் அனைத்து விவசாயிகளும் சேர்ந்து அறப்போராட்டம் நடத்துவோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உரிய நிவாரணம் கேட்டு பதரான நெற்பயிர்களுடன் வந்து விவசாயிகள் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூ.35 ஆயிரம் வரை ஏக்கருக்கு செலவு செய்த பயிர்கள் பதராகி உள்ளது கண்டு விவசாயிள் பெரும் வேதனையில் உள்ளனர். சரிக்கு சரியாக அதாவது 50 சதவீதம் வரை ஏக்கருக்கு நெல்பயிர்கள் பதராகி விட்டது. இதனால் எவ்வித பயனும் இல்லை. இப்படி தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் பொருளாதாரத்தில் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறோம். இம்முறை பூதலூர் பிர்காவில் உள்ள எங்களை ஒதுக்கி விட்டு பிற பகுதிகளுக்கு நிவாரணம் அளிக்க விவசாயிகளிடம் தேவையான ஆவணங்கள் பெறப்பட்டுள்ளது. நாங்களும் பாதிப்பை சந்தித்துள்ளோம். எனவே எங்கள் கோரிக்கை மீதும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget