மேலும் அறிய

கோழி பண்ணை கொட்டகையை தீ வைத்து எரித்த மர்ம நபர்கள்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தஞ்சை கலெக்டரிடம் மனு

கொட்டகையில் இருந்த இயந்திரங்கள், மின் மோட்டார்கள், தளவாடப் பொருட்கள், கோழிகளுக்கு உணவு வைக்கும் பொருட்கள் என ரூ.6 லட்சம் மதிப்பில் பொருட்கள் எரிந்து சேதம் அடைந்து விட்டது.

தஞ்சாவூர்: தனது கோழி பண்ணை கொட்டகையை தீ வைத்து எரித்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தமிழக  விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மனு அளித்தார்.

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநில தலைவர் முஹம்மது இப்ராஹிம் தலைமையில்  மாவட்ட தலைவர் உத்திராபதி, மாவட்ட பொருளாளர் அன்பழகன், ஒன்றிய தலைவர் அன்வர் அலி ஆகியோர் முன்னிலையில் மாவட்ட செயலாளர் முகமது வஹி மன்சூர் கொடுத்த மனுவில் தெரிவித்துள்ளதாவது. :

நான் தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளராக உள்ளேன். எனக்கு சொந்தமான கோழிப்பண்ணை கொட்டகை சேதுபாவாசத்திரம் சம்பைப்பட்டினத்தில் உள்ளது. கடந்த 1ம் தேதி அன்று நள்ளிரவு நேரத்தில் இந்த கோழிப்பண்ணை கொட்டகைக்கு மர்ம நபர்கள் தீவைத்து எரித்து விட்டனர்.

இதில் கொட்டகையில் இருந்த இயந்திரங்கள், மின் மோட்டார்கள், தளவாடப் பொருட்கள், கோழிகளுக்கு உணவு வைக்கும் பொருட்கள் என ரூ.6 லட்சம் மதிப்பில் பொருட்கள் எரிந்து சேதம் அடைந்து விட்டது. இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீசில் புகார் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இது குறித்து  நடவடிக்கை மேற்கொண்டு உரிய நியாயம் கிடைக்க செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம் செங்கிப்பட்டி வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட ஊராட்சி பகுதிகளில் விடுபட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத்தொகை தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

இதேபோல் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமையில், பயிர் இழப்பீடு தொகை கிடைக்காத விவசாயிகள் கலெக்டரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

பூதலூர் தாலுகா செங்கிப்பட்டி வருவாய் வட்டத்துக்குட்பட்ட செங்கிப்பட்டி, புதுக்குடி, வெண்டையம் பட்டி, முத்துவீர கண்டியன்பட்டி, காங்கேயம் பட்டி, கோட்டரப்பட்டி பகுதி விவசாயிகள் முறையாக பயிர் காப்பீடு திட்டத்தில் காப்பீட்டுத் தொகை செலுத்தி உள்ளனர். இருப்பினும் மேற்கண்ட பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீடு தொகை கிடைக்கவில்லை.

கடந்த வாரம் பூதலூரில் நடந்த உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் அப்பகுதி விவசாயிகள் மனு அளித்துள்ளனர். ஆனால்  இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை . எனவே இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீடு தொகை விரைவில் செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
CM Stalin:
"ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை நிறுத்துக” - மத்திய அரசை வலியுறுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடிVikravandi PMK Candidate | விக்கிரவாண்டியில் அன்புமணி போட்டி!பரபரக்கும் தேர்தல் களம்Modi Meloni | மீண்டும் #MELODI! மெலோனியுடன் மோடி! வைரல் PHOTOS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
CM Stalin:
"ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை நிறுத்துக” - மத்திய அரசை வலியுறுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
RahulGandhi On EVM : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க சொன்ன மஸ்க்.. ஆதரவுக்கரம் நீட்டிய ராகுல் காந்தி
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க சொன்ன மஸ்க்.. ஆதரவுக்கரம் நீட்டிய ராகுல் காந்தி
New Fee Refund Policy: கல்லூரிகள் இந்த மாணவர்களுக்கெல்லாம் முழு கட்டணத்தையும் திருப்பித்தர வேண்டும்: யுஜிசி அதிரடி!
New Fee Refund Policy: கல்லூரிகள் இந்த மாணவர்களுக்கெல்லாம் முழு கட்டணத்தையும் திருப்பித்தர வேண்டும்: யுஜிசி அதிரடி!
Fathers Day History: இன்று தந்தையர் தினமா? முதன்முறையாக எப்போது கொண்டாடப்பட்டது..? வரலாறு தெரியுமா?
இன்று தந்தையர் தினமா? முதன்முறையாக எப்போது கொண்டாடப்பட்டது..? வரலாறு தெரியுமா?
Salem Leopard: திருப்பத்தூரில் பிடிபட்டது சேலத்தில் நடமாடிய சிறுத்தையா? அதிர்ச்சி தகவல்.
திருப்பத்தூரில் பிடிபட்டது சேலத்தில் நடமாடிய சிறுத்தையா? அதிர்ச்சி தகவல்.
Embed widget