மேலும் அறிய

நெல்லின் ஈரப்பதம்: மத்திய அரசின் தாமதமான அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது - நாகை விவசாயிகள்

பருவம் தவறிய கனமழையின் காரணமாக 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி அனுப்பி இருந்தார்.

20% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யலாம் என்ற மத்திய அரசின் தாமதமான அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக நாகை கடைமடை விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பரவலாக மழை பெய்து வந்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்கதிர்கள் வயலில் மழைநீரில் மூழ்கியது. இதனைத் தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டது. 

அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நெற்பயிர்கள் 41 ஆயிரம் ஏக்கர், உளுந்து 1600 ஏக்கர் , நிலக்கடலை 1200 ஏக்கர்  மழைநீரால் சூழப்பட்டதாக வேளாண் துறையினர் எடுத்த ஆய்வில் கண்டறியப்பட்டது. இதேபோல் திருவாரூரில் நெற்பயிர்கள் 27 ஆயிரம் ஏக்கர், 18 ஆயிரம் ஏக்கர் உளுந்து , கடலை 2,170 ஏக்கர் சேதமடைந்தது தெரிய வந்தது. தொடர்ந்து நாகையில் 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள், மயிலாடுதுறையில் 35 ஆயிரம் ஏக்கர் நெர்பயிர்கள், 30 ஆயிரம் ஏக்கர் உளுந்து மழையால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது.


நெல்லின் ஈரப்பதம்: மத்திய அரசின் தாமதமான அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது - நாகை விவசாயிகள்

இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சக்கரபாணி, வேளாண் துறை செயலாளர், மூத்த அதிகாரிகள் குழு நேற்று பயிர் சேதம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பின் இந்த குழு அறிக்கை சமர்பித்ததை தொடந்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். 

தொடர்ந்து கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்து பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக, பேரிடர் மேலாண்மை விதிமுறைகளின்படி, 33 சதவிகிதம் மற்றும் அதற்குமேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள இனங்களில் எக்டேருக்கு ரூபாய் 20 ஆயிரம் வழங்கப்படும்.

நெல் அறுவடை தரிசில் விதைக்கப்பட்டு சேதமடைந்த இளம் பயறு வகை பயிர்களுக்கு இழப்பீடாக எக்டேருக்கு ரூபாய் 3 ஆயிரம் வழங்கப்படும் என பல அறிவிப்புகளை வெளியிட்டார். மேலும் மத்திய அரசுக்கு கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான ஈரப்பத அளவை 17ல் இருந்து 22 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கடிதம் எழுதினார். 

 

இதன்பின்னர் மத்திய குழுவினர் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்தனர். இந்நிலையில் நெல்லுக்கான ஈரப்பத அளவை 19%-ல் இருந்து 20% ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இந்த நிலையில், 20% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யலாம் என்ற மத்திய அரசின் தாமதமான அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக நாகை கடைமடை விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அறுவடை முடிந்த பிறகு 15 நாட்கள் தாமதமாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருப்பது வேதனை அளிப்பதாக கூறியுள்ள விவசாயிகள், எந்த பலனும் இல்லாத இந்த அறிவிப்பில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Modi in France: பிரான்ஸில் கடும் குளிரில் வரவேற்ற இந்தியர்கள்..மேக்ரானுடன் விருந்து... அசத்தும் மோடி...
பிரான்ஸில் கடும் குளிரில் வரவேற்ற இந்தியர்கள்..மேக்ரானுடன் விருந்து... அசத்தும் மோடி...
Gold Rate: அவ்ளோதான்... இனி கனவில் தான் தங்கம் வாங்கனும்.. புதிய உச்சம் தொட்ட விலை...
அவ்ளோதான்... இனி கனவில் தான் தங்கம் வாங்கனும்.. புதிய உச்சம் தொட்ட விலை...
பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணி! நடுரோட்டில் இறக்கிவிட்டனரா அரசுப் பேருந்து ஓட்டுனர், நடத்துநர்?
பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணி! நடுரோட்டில் இறக்கிவிட்டனரா அரசுப் பேருந்து ஓட்டுனர், நடத்துநர்?
Thaipusam 2025: இன்று பத்திரம் பதியப் போறீங்களா? நல்ல நேரம் இதுதான்!
Thaipusam 2025: இன்று பத்திரம் பதியப் போறீங்களா? நல்ல நேரம் இதுதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP executive cheating: இளம்பெண்களுக்கு மிரட்டல்! சிக்கிய ஆபாச வீடியோக்கள்! பாஜக நிர்வாகி கைதுTirupattur: நள்ளிரவில் வீடு புகுந்த கும்பல்.. பெண்ணை நிர்வாணப்படுத்தி வீடியோ! கள்ளக்காதலன் பகீர்!VJ Siddhu Vlogs: ”அடி.. உதை.. ஆவேசம்” சர்ச்சையில் சிக்கிய VJ சித்து! வெளியான அதிர்ச்சி வீடியோ!செங்கோட்டையனுக்கு வந்த PHONE CALL.. ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா! எடப்பாடிக்கு ஆப்பு ரெடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Modi in France: பிரான்ஸில் கடும் குளிரில் வரவேற்ற இந்தியர்கள்..மேக்ரானுடன் விருந்து... அசத்தும் மோடி...
பிரான்ஸில் கடும் குளிரில் வரவேற்ற இந்தியர்கள்..மேக்ரானுடன் விருந்து... அசத்தும் மோடி...
Gold Rate: அவ்ளோதான்... இனி கனவில் தான் தங்கம் வாங்கனும்.. புதிய உச்சம் தொட்ட விலை...
அவ்ளோதான்... இனி கனவில் தான் தங்கம் வாங்கனும்.. புதிய உச்சம் தொட்ட விலை...
பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணி! நடுரோட்டில் இறக்கிவிட்டனரா அரசுப் பேருந்து ஓட்டுனர், நடத்துநர்?
பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணி! நடுரோட்டில் இறக்கிவிட்டனரா அரசுப் பேருந்து ஓட்டுனர், நடத்துநர்?
Thaipusam 2025: இன்று பத்திரம் பதியப் போறீங்களா? நல்ல நேரம் இதுதான்!
Thaipusam 2025: இன்று பத்திரம் பதியப் போறீங்களா? நல்ல நேரம் இதுதான்!
Thaipusam 2025: கந்தனுக்கு அரோகரா! தைப்பூசம் இன்று கோலாகல கொண்டாட்டம்! லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
Thaipusam 2025: கந்தனுக்கு அரோகரா! தைப்பூசம் இன்று கோலாகல கொண்டாட்டம்! லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
Tamilnadu Rounudp: களைகட்டிய தைப்பூச கொண்டாட்டம்! விஜய்க்கு ஆலோசகராகிறாரா பிரசாந்த் கிஷோர் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Rounudp: களைகட்டிய தைப்பூச கொண்டாட்டம்! விஜய்க்கு ஆலோசகராகிறாரா பிரசாந்த் கிஷோர் - தமிழகத்தில் இதுவரை
Jasprit Bumrah: ஜஸ்ப்ரித் பும்ரா..  சாம்பியன்ஸ் டிராபியில் களமிறங்குவாரா? மாட்டாரா? பிசிசிஐ இன்று இறுதி முடிவு
Jasprit Bumrah: ஜஸ்ப்ரித் பும்ரா.. சாம்பியன்ஸ் டிராபியில் களமிறங்குவாரா? மாட்டாரா? பிசிசிஐ இன்று இறுதி முடிவு
IND Vs ENG 3rd ODI: ஹாட்ரிக் வெற்றியா? ஆறுதல் வெற்றியா? இந்தியா Vs இங்கிலாந்து, 3வது ODI, அகமதாபாத் மைதானம் எப்படி?
IND Vs ENG 3rd ODI: ஹாட்ரிக் வெற்றியா? ஆறுதல் வெற்றியா? இந்தியா Vs இங்கிலாந்து, 3வது ODI, அகமதாபாத் மைதானம் எப்படி?
Embed widget