மேலும் அறிய

பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணி! நடுரோட்டில் இறக்கிவிட்டனரா அரசுப் பேருந்து ஓட்டுனர், நடத்துநர்?

வேலூரில் பிரசவ வலியில் துடித்த நிறைமாத கர்ப்பிணியை அரசுப் பேருந்து ஓட்டுனரும், நடத்துனரும் பாதி வழியிலே இறக்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது தோணியூர். இந்த பகுதியில் அமைந்துள்ள மலைகிராமம் ஜனார்த்தான்கொல்லை கிராமம். இந்த கிராமத்தில் வசிப்பவர் சேகர். இவரது மனைவி நிர்மலா. இந்த தம்பதியினருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர்கள் தங்களது குடும்பத்தினருடன் கர்நாடகத்தில் காபி கொட்டை பறிக்கும் தொழில் செய்து வருகின்றனர். 

நிறைமாத கர்ப்பிணி:

இந்த நிலையில், மீண்டும் கர்ப்பம் தரித்த நிர்மலா பிரசவத்திற்காக தனது குடும்பத்தினருடன் சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்தார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிர்மலாவிற்கு பேருந்தில் வரும்போதே திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. 

நடுவழியில் இறக்கிவிட்டனரா ஓட்டுநர்? நடத்துனர்?

பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தபோதே நிர்மலாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டதால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அப்போது பேருந்து ஓட்டுனரும், பேருந்து நடத்துனரும் அவர்களை வாணியம்பாடடியில் உள்ள நெக்குந்தி சுங்கச்சாவடியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர். மேலும், சுங்கச்சாவடி ஊழியர்களிடம் தெரிவித்துவிட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது. 

ஆம்புலன்ஸிலே பிறந்த குழந்தை:

அப்போது, நிர்மலா பிரசவ வலியில் துடிப்பதை அறிந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அப்போது, நிர்மலாவிற்கு ஆம்புலன்சிலே பிரசவம் நடந்து அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆம்புலன்சிலே 24 வயதான நிர்மலாவிற்கு பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

இந்த விவகாரத்தில் கர்ப்பிணிப் பெண்ணை நடுவழியில் இறக்கிவிட்டதாக அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனர் மீது சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். அதேசமயம், சிலர் சுங்கச்சாவடியில் எப்போதும் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருப்பதன் காரணமாகவே அவர்கள் நிறைமாத கர்ப்பிணியை சமயோஜிதமாக சுங்கச்சாவடியில் இறக்கிவிட்டதாகவும் கூறுகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆம்புலன்சிலே குழந்தையை பெற்றெடுத்த நிர்மலாவையும், அவரது குழந்தையும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர். ஒருவேளை அரசுப்பேருந்து ஓட்டுனரும், நடத்துனரும் அலட்சியமாக பிரசவ வலியில் துடித்த நிறைமாத கர்ப்பிணியை நடுவழியில் இறக்கிவிட்டிருந்தால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget