மேலும் அறிய

முல்லை பெரியாறு அணை: 2025 பருவமழைக்குப் பின் பாதுகாப்பு உறுதி.. இரு மாநிலங்களுக்கும் சுமூக தீர்வு!

பேபி அணையில் மரம் வெட்டுவது அனுமதி தொடர்பாக மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்க உள்ளது - அனில் ஜெயின்.

2025 பருவமழைக்குப் பிறகு முல்லை பெரியாறு அணையின் நிலை குறித்து ஆய்வுசெய்தோம், முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. இரு மாநில அதிகாரிகளுடன் ஆலோசனைகளில்  பல பிரச்னைகளுக்கு சுமூகமாக தீர்வு ஏற்பட்டது- தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில் ஜெயின் பேட்டி.

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு
 
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் அனில் ஜெயின் தலைமையிலான 7 பேர் கொண்ட புதிய கண்காணிப்பு குழு மத்திய அரசால் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டது. இந்த கண்காணிப்பு குழுவானது இன்று கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேக்கடி படகு துறைக்கு சென்று  படகு மூலமாக அணையில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகளாக நீர்வளத்துறை செயலாளர் ஜெயகாந்தன், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்ரமணியனும், கேரள அரசின் பிரதிநிதிகளாக கேரள மாநில நீர்ப்பாசனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிஸ்வந்த் சின்ஹா, நீர்ப்பாசனத் துறை தலைமைப் பொறியாளர் பிரியேஷ் மற்றும் கண்காணிப்பு குழுவை சேர்ந்த உறுப்பினர்களான தேசிய பேரிடர் மேலாண்மை குழு அலுவலர் ராகேஷ் டொடேஜா, பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவன ஆய்வு அலுவலர் ஆனந்த் ராமசாமி ஆகிய 7 பேர் கொண்ட குழுவினர் இடம்பெற்றனர்.
 
அணைப்பாதுகாப்பு குழு
 
இந்த கண்காணிப்பு குழுவானது முல்லைப் பெரியாறு பிரதான அணை, பேபி அணையின் மதகுகள், சுரங்க பகுதியின் நீர்மட்டம் மற்றும் கசிவு நீர் அளவுகள் உள்ளிட்டவைகள் குறித்தும்  ஆய்வு செய்தனர். ஆய்வினை தொடர்ந்து மதுரை அழகர்கோவில் சாலையில்  உள்ள தனியார் தங்கும் விடுதியில் கண்காணிப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் அனில் ஜெயின் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகளாக நீர்வளத்துறை செயலாளர் ஜெயகாந்தன், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்ரமணியன், கேரள அரசின் பிரதிநிதிகளாக கேரள மாநில நீர்ப்பாசனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிஸ்வந்த் சின்ஹா, நீர்ப்பாசனத் துறை தலைமைப் பொறியாளர் பிரியேஷ் ஆகியோரும் அணைப்பாதுகாப்பு குழுவின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
 
பேபி அணைப்பகுதியில் மரங்களை வெட்டுவதற்கான அனுமதி
 
இந்த கூட்டத்தின் போது தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலத்தின் கருத்துகள் மற்றும் கோரிக்கைகள் கேட்கப்பட்டு அதற்கான தீர்வுகள் குறித்து ஆணைய தலைவர் முன்பாக ஆலோசிகப்பட்டது. இதில் முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு, சாலையை பயன்படுத்துவது பேபி அணைப்பகுதியில் மரங்களை வெட்டுவதற்கான அனுமதி, இரு மாநிலங்களும் உபகரணங்களை எடுத்துசெல்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இந்த நான்காவது மேற்பார்வைக் குழு கூட்டத்தை நடத்தினோம், இன்று காலை நாங்கள் அந்த அணையைப் பார்வையிட்டு ஆய்வு செய்தோம் அணையின் கருவிகள், நீர் இயந்திரங்கள், அணையின் அமைப்பை பார்வையிட்டோம், 2025 பருவமழைக்குப் பிறகு அணையின் நிலையை பார்வையிட்டோம். இதில்  இதுவரை அணைக்கு எந்த பாதிப்பும் இல்லை, அணை தற்போது நல்ல நிலையில் உள்ளது என்றார். இன்று நடைபெற்ற மேற்பார்வைக் குழுவில் இரு மாநில அதிகாரிகளையும் சந்தித்தது பல பிரச்னைகளில் சுமூகமான தீர்வு காணப்பட்டது. தமிழ்நாடு அரசு கேரள அரசுடன் சில கருவிகளைப் பகிர்ந்து கொள்ளும், மேலும் கேரள அரசு தமிழ்நாடு அரசுக்கு வனப்பகுதி வழியாக அணை தளத்திற்கு சரியான அணுகல் பாதையை அனுமதிக்க ஒப்புக்கொண்டது.
 
பேபி அணையில் மரம்வெட்டுவது அனுமதி  தொடர்பாக தமிழக அதிகாரிகள் ஏதேனும் கோரிக்கை விடுத்துள்ளார்களா? என்ற கேள்விக்கு பதிலளித்தபோது 
 
 மரங்களை வெட்டுவதற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்க உள்ளது. இப்போது இந்த அனுமதியை வழங்குவதற்கான நடைமுறையை விரைவுபடுத்த மத்திய சுற்றுச்சூழல் துறையை அணுக இரு மாநிலங்களும் ஒப்புக்கொண்டுள்ளன என்றார்.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
Embed widget