மதுரையில் எகிறிய மல்லிகைப் பூ விலை.. (06.06.2026) இன்றைய முழு விலை நிலவரம் என்ன?
அடுத்தடுத்து பெய்து வரும் மழை காரணமாக மல்லிகை விளைச்சல் குறைந்துள்ளது. நாளை முகூர்த்த நாள் என்பதாலும் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.

மதுரை மல்லிகைப் பூ விலை கிலோ ரூ.1200 முதல் ரூ.1300 வரை விற்பனை ஆகிறது. அதே பிற பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது.
மதுரை மல்லிகைப் பூ விற்பனை
மதுரை மல்லி என்பது மதுரை, விருதுநகர், தேனி, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்படும் சிறப்பு வாய்ந்த பூவாகும். மதுரை மையமாக உள்ளதால் மல்லிகைப் பூ மற்றும் பிற பூக்களுக்கு வணிகம் செய்ய ஏதுவாக உள்ளது. குறிப்பாக மல்லிகைப் பூ கி.மு 300-ஆம் ஆண்டிலிருந்து பயிரிடப்பட்டு வருகின்றன. இதற்கான குறிப்புகள் சங்க இலக்கியங்களில் மற்றும் கோயில் சிற்பங்களில் காணப்படுகின்றன. இப்பூக்கள் தங்களது தனித்துவமான மணம் மற்றும் நறுமணத்திற்காக பிரசித்தி பெற்றவை. இதனால் வெளியூர் பயணிகள் மதுரை வரும் போது மல்லிகைப் பூவை விரும்பி வாங்குகின்றனர். இதே போல் கோயில் நகரமான மதுரையில் பிற பூக்களின் விற்பனையும் எப்போது சூடுபறக்கும். இந்நிலையில் இன்று நான்கு மாதங்கள் கழித்து மல்லிகைப் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.
அடுத்தடுத்து பெய்து வரும் மழை காரணமாக மல்லிகை விளைச்சல் குறைந்துள்ளது. நாளை முகூர்த்த நாள் என்பதாலும் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக மதுரை மலர் சந்தைக்கு வரத்தும் குறைவாக உள்ளது. வரும் நாட்களில் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு உண்டு இதனால் விலையும் குறையலாம். மாட்டுத்தாவணி மொத்த பூ வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ராமச்சந்திரன்
Before You Go
Chicken Fertilizer : இறந்த கோழிகளை என்ன செய்வது ? மாத்தி யோசித்த விவசாயி… கொழிக்கும் வளங்கள்
ட்ரெண்டிங் செய்திகள்





















