மேலும் அறிய

குண்டு மல்லி பூவில் வருவாய் இல்லை, கூலி கொடுக்க முடியவில்லை - தருமபுரி விவசாயிகள் வேதனை

தருமபுரி மாவட்டத்தில் குண்டுமல்லி பூக்களின் விலை குறைவு மற்றும் பராமரிப்பு செலவு அதிகரிப்பால் சாகுபடி பரப்பு குறைவு-குடும்ப உறுப்பினர்கள் மட்டும் பராமரிக்கும் அளவிற்கு சாகுபடி செய்யும் விவசாயிகள்.

தருமபுரி மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. போதிய அளவு நீர் பாசன திட்டங்கள் இல்லாததால், வானம் பார்த்த பூமியாகவே தருமபுரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். தருமபுரி மாவட்டத்தில் மானாவரி பயிர்கள் அதிகமாக பயிரிட்டு வரும் நிலையில், பெரும்பாலான விவசாயிகள் தக்காளி, கத்திரி, முள்ளங்கி, உள்ளிட்ட காய்கறிகளும் சாகுபடி செய்து வருகின்றனர். இதில் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பென்னாகரம், தொப்பூர், நல்லம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் பூக்களை சாகுபடி செய்து வருகின்றனர். இதில் குண்டுமல்லி, சன்ன மல்லி, பட்டன் ரோஸ், அரளி, கனகாம்பரம், முல்லை, சாமந்தி, செண்டுமல்லி என பல்வேறு வகையான பூக்களை சாகுபடி செய்து, தருமபுரி மாவட்டத்தில் இருந்து சேலம், ஈரோடு, கோயமுத்தூர், ஓசூர், பெங்களூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். குறைந்த அளவு சாகுபடி செய்கின்ற சிறு விவசாயிகள் தர்மபுரி நகர பேருந்து நிலையத்தில் செயல்படும் தினசரி பூ மார்க்கெட் விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர்.


இந்நிலையில் தொப்பூர், பென்னாகரம், காரிமங்கலம், மாரண்டஅள்ளி, பாலக்கோடு, பொம்மிடி, கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பாரப்பட்டி,   உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் குண்டுமல்லி சாகுபடி செய்துள்ளனர்.


குண்டு மல்லி பூவில் வருவாய் இல்லை, கூலி கொடுக்க முடியவில்லை - தருமபுரி விவசாயிகள் வேதனை

இந்நிலையில் நன்றாக செழித்து வளர்ந்துள்ள குண்டுமல்லி செடிகளை செய்து கவாத் செய்து பராமரித்து வருகின்றனர். ஆனால் தர்மபுரி மாவட்டத்தில் குண்டுமல்லி சாகுபடி பரப்பு சற்று குறைந்துள்ளது. குண்டு மல்லி சாகுபடி குறைவுக்கு காரணம், கூலி ஆட்கள் பற்றாக்குறை, கூலி அதிகம் போன்றவை தான். மேலும் குண்டுமல்லி செடிகளை நன்றாக பராமரிக்க வேண்டும். 

ஆனால் அதற்கு போதிய வருவாய் கிடைப்பதில்லை. குண்டு மல்லி பூக்கள் பயிரிட்டு பராமரிப்பு பணி என ஏக்கருக்கு 50,000 வரை செலவாகும். ஆனால் பூக்களின் விலை 50 ரூபாய் 100 ரூபாய் என குறைந்த அளவிலே விற்பனையாகிறது. கோடை காலங்களில் விளைச்சல் நன்றாக இருக்கும் ஆனால் விலை இருக்காது. மேலும் இதனை அறுவடை செய்வதற்கு கூலி ஆட்களுக்கு கிலோவிற்கு 50 ரூபாய் கூலி தர வேண்டும். 

இந்த நிலையில் கோடை காலத்தில் விலை இல்லாததால்  நஷ்டம் ஏற்படும் என்பதால், கூலி ஆட்கள் இல்லாமல், குடும்பமாக பறிக்கும் அளவிற்கு குறைவாகவே சாகுபடி செய்து வருகின்றனர். ஆனாலும் தர்மபுரி மாவட்டத்தில் அதிக அளவில் சுமார் ஒரு டன் வரை குண்டு குண்டுமல்லி விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. கோடை காலத்தில் எல்லா பூக்களின் விலை உயர்ந்தாலும் மல்லிப் பூக்களின் விலை மட்டும்  உயராமலே இருந்து வருகிறது. இதனால் குண்டுமல்லி சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. மேலும் தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியில் மட்டும் தினசரி ஒரு டன் அளவிற்கு பூக்கள் அறுவடை செய்யப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.


 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Embed widget