மேலும் அறிய

கரூரில் 11 விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று 11 பயனாளிகளுக்கு ரூ.4,11, 070 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று 11 பயனாளிகளுக்கு ரூ.4,11, 070 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் வழங்கினார்.

கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் தலைமையில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

 


கரூரில் 11 விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

 

 

நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளிடம் பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு நேரடியாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் பதில் தெரிவித்தார்கள். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பதில் அளித்து தெரிவித்ததாவது,

புகலூர் பகுதியில் விவசாயிகள் எளிதாக சென்று வரும் வகையில் ரயில்வே பாதையினை சீரமைத்து உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர ஏற்பாடு செய்திடவும், நங்காஞ்சியாறு பகுதியில் நில எடுத்ததைதொடர்நது உரிய இழப்பீடு தொகை பெற்று தருவது குறித்தும்,கூட்டு பட்டாவை தனிபட்டாவாக மாற்றி தருவது குறித்தும், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடங்களை சீர்மைத்தல் குறித்தும்,  , பணிக்கம்பட்டி கிராமத்தில் விவசாய நிலத்திற்கு சென்று வருவதற்கு பாலம் அமைப்பது குறித்தும் நீர்வழி வாய்க்கால் அடைப்பு இருப்பதை தூர்வாரி கொடுப்பது குறித்தும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவது குறித்தும்,  குளித்தலை பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் நெல்கொள்முதல் செய்யும் குத்தகைதாரர் நிலம் உள்ள விவசாயிகளுக்கு உடனடியாக அடங்கல் வழங்க வட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தினார். தண்ணீர் பள்ளி முதல் சிவமயம் வரை சாலை குறுகளாக உள்ளது மற்றும் இடையில் மரக்கன்றுகள் நடுவதால் பேருந்து செல்வதற்கு சிரமமான நிலையும், சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதை சீரமைத்து தருவது குறித்தும், அத்திப்பாளையம் பகுதியில் கன்னி வாய்க்கால் தூர்ந்து மூடியதால் நெல் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் வராததால் வாய்க்காலை உடனடியாக தூர்வாரி கொடுப்பது குறித்தும்,

 

 


கரூரில் 11 விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

 

 

சேந்தமங்கலம் கால்நடை மருந்தகத்தில் செயல்படுத்த மருத்துவர் அவசர சிகிச்சைகள் உடனடியாக செய்து தர முன்வர வேண்டுவது ;குறித்தும், பொதுப்பணித்துறை மூலம் பஞ்சபட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுப்பது குறித்தும், தரகம்பட்டி பகுதியில் 100 நாள் வேலை மூலம் விவசாயம் பணிகளுக்கு ஆட்களை வழங்குவது குறித்தும், மாயனூர் பகுதியில் மாணவ மாணவிகளுக்கு பொழுதுபோக்கு அம்சமாக விளையாட்டு மைதானம் அமைத்து தருவது குறித்தும், புனவாசி பட்டி பகுதியில் சமுதாயக்கூடம் அமைத்து தருவது குறித்தும், அத்திப்பாளையம் பகுதிகளில் சிறுத்தை நடமாடுவதை தடுத்து பாதுகாப்பு எற்படுத்திட உரிய நடவடிக்கை ஏற்படுத்துவது குறித்தும்,  சிறுத்தை நடமாட்டத்தை மாவட் டநிர்வாகமும், வனத்துறையினரும் தொடர்ந்து கண்காணிப்பில் இருக்கிறோம் தற்பொழுது உள்ள சூழ்நிலை சிறுத்தை நடமாட்டம் இல்லை என்று வனத்துறையினர் உறுதி செய்துள்ளார்கள் ஆனால் தொடர் கண்காணிப்பில் உள்ளோம் தற்பொழுது இறந்த போன ஆடுகள் வெறிநாய்களால் கடித்து இறந்துள்ளது. என கால்நடை மருத்துவர்களால் விளக்கம் அளித்துள்ளார்கள். பொது மக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம். ஆடுகளுக்கான காப்பீட்டுகளை கால்நடைத்துறையினர்களை அணுகி உங்களுடை ஆடுகளுக்கு காப்பீடு செய்யுங்கள் நாயினால் இறந்து போன ஆடுகளுக்கு முழு இழப்பீடுத்தொகை வழங்கப்படும். மேலும், விவசாயிகள் அளிக்கப்படுகின்ற கோரிக்கை மனுக்களுக்கு  உரிய காலத்தில் அவர்களின் கோரிக்கை தீர்வு காணப்படவேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் அலுவலருக்குஅறிவுறுத்தினார்கள்
 

மேலும்,  நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகள் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் வழங்கினார்கள். அதன் அடிப்படையில் 94 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன

பின்னர் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.102900 இலட்சம் மதிப்பீட்டில் மல்பெரி நடவு மானியமும், வேளாண்மை  பொறியியல் துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு ரூ.85,000  மதிப்பீட்டில் பவர் டில்லர் இயந்திரமும்;,  SMAM திட்டத்தின் கிழ் ரூ. 2,06,920  இலட்சம் மதிப்பீட்டில் சூரிய சக்தி உலர்த்தயும்,   வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 1 பயனாளிகளுக்கு  தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் திட்டத்தில் ரூ.2,100 மதிப்பீட்டில் தார்பாலின், 1 பயனாளிகளுக்கு  கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.150 மதிப்பீட்டில் திரச உயிர் உரமும்,  தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, சார்பாக1 பயனாளிகளுக்கு  ரூ.10000 மதிப்பீட்டில்,வேளாண் இடு பொருள்களும், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 1 பயனாளிகளுக்கு  4000 மதிப்பீட்டில் சூரிய விளக்குப் பொறியும் ஆக மொத்தம் 11 பயனாளிகளுக்கு ரூ.411070 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் வழங்கினார்.

 

 


கரூரில் 11 விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் லியாகத், வேளாண் இணை இயக்குனர் சிவசுப்பிரமணியன்,  மாவட்ட வன அலுவலர் சரவணன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துறை ஆட்சியர் சைபுதீன், கோட்டாட்சியர்கள் ரூபினா (கரூர்), புஷ்பாதேவி (குளித்தலை), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொ) (வேளாண்மை) கலைசெல்வி மற்றும் அரசு அலுவலர்கள் விவசாயிகள்,விவசாய பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

வறட்சிக்கு தீர்வு: விருதுநகர் விவசாயிகளுக்கு 100% மானியத்தில் பண்ணைக்குட்டைகள்!
வறட்சிக்கு தீர்வு: விருதுநகர் விவசாயிகளுக்கு 100% மானியத்தில் பண்ணைக்குட்டைகள்!
தஞ்சாவூரின் வேளாண் பாரம்பரியம்... மண்ணையும், உணவையும், உடல்நலத்தையும் காக்கும் இயற்கை விவசாயம்!
தஞ்சாவூரின் வேளாண் பாரம்பரியம்... மண்ணையும், உணவையும், உடல்நலத்தையும் காக்கும் இயற்கை விவசாயம்!
சிவகங்கையில்
சிவகங்கையில் "செம்மண்" விதை திருவிழா: பாரம்பரிய வேளாண்மைக்கு புத்துயிர்!
காரைக்குடி: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஊத்தா மீன்பிடி திருவிழா.. மீன்கள் குவிந்ததால் மக்கள் கொண்டாட்டம்!
காரைக்குடி: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஊத்தா மீன்பிடி திருவிழா.. மீன்கள் குவிந்ததால் மக்கள் கொண்டாட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget