மேலும் அறிய

கரூரில் 11 விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று 11 பயனாளிகளுக்கு ரூ.4,11, 070 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று 11 பயனாளிகளுக்கு ரூ.4,11, 070 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் வழங்கினார்.

கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் தலைமையில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

 


கரூரில் 11 விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

 

 

நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளிடம் பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு நேரடியாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் பதில் தெரிவித்தார்கள். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பதில் அளித்து தெரிவித்ததாவது,

புகலூர் பகுதியில் விவசாயிகள் எளிதாக சென்று வரும் வகையில் ரயில்வே பாதையினை சீரமைத்து உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர ஏற்பாடு செய்திடவும், நங்காஞ்சியாறு பகுதியில் நில எடுத்ததைதொடர்நது உரிய இழப்பீடு தொகை பெற்று தருவது குறித்தும்,கூட்டு பட்டாவை தனிபட்டாவாக மாற்றி தருவது குறித்தும், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடங்களை சீர்மைத்தல் குறித்தும்,  , பணிக்கம்பட்டி கிராமத்தில் விவசாய நிலத்திற்கு சென்று வருவதற்கு பாலம் அமைப்பது குறித்தும் நீர்வழி வாய்க்கால் அடைப்பு இருப்பதை தூர்வாரி கொடுப்பது குறித்தும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவது குறித்தும்,  குளித்தலை பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் நெல்கொள்முதல் செய்யும் குத்தகைதாரர் நிலம் உள்ள விவசாயிகளுக்கு உடனடியாக அடங்கல் வழங்க வட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தினார். தண்ணீர் பள்ளி முதல் சிவமயம் வரை சாலை குறுகளாக உள்ளது மற்றும் இடையில் மரக்கன்றுகள் நடுவதால் பேருந்து செல்வதற்கு சிரமமான நிலையும், சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதை சீரமைத்து தருவது குறித்தும், அத்திப்பாளையம் பகுதியில் கன்னி வாய்க்கால் தூர்ந்து மூடியதால் நெல் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் வராததால் வாய்க்காலை உடனடியாக தூர்வாரி கொடுப்பது குறித்தும்,

 

 


கரூரில் 11 விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

 

 

சேந்தமங்கலம் கால்நடை மருந்தகத்தில் செயல்படுத்த மருத்துவர் அவசர சிகிச்சைகள் உடனடியாக செய்து தர முன்வர வேண்டுவது ;குறித்தும், பொதுப்பணித்துறை மூலம் பஞ்சபட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுப்பது குறித்தும், தரகம்பட்டி பகுதியில் 100 நாள் வேலை மூலம் விவசாயம் பணிகளுக்கு ஆட்களை வழங்குவது குறித்தும், மாயனூர் பகுதியில் மாணவ மாணவிகளுக்கு பொழுதுபோக்கு அம்சமாக விளையாட்டு மைதானம் அமைத்து தருவது குறித்தும், புனவாசி பட்டி பகுதியில் சமுதாயக்கூடம் அமைத்து தருவது குறித்தும், அத்திப்பாளையம் பகுதிகளில் சிறுத்தை நடமாடுவதை தடுத்து பாதுகாப்பு எற்படுத்திட உரிய நடவடிக்கை ஏற்படுத்துவது குறித்தும்,  சிறுத்தை நடமாட்டத்தை மாவட் டநிர்வாகமும், வனத்துறையினரும் தொடர்ந்து கண்காணிப்பில் இருக்கிறோம் தற்பொழுது உள்ள சூழ்நிலை சிறுத்தை நடமாட்டம் இல்லை என்று வனத்துறையினர் உறுதி செய்துள்ளார்கள் ஆனால் தொடர் கண்காணிப்பில் உள்ளோம் தற்பொழுது இறந்த போன ஆடுகள் வெறிநாய்களால் கடித்து இறந்துள்ளது. என கால்நடை மருத்துவர்களால் விளக்கம் அளித்துள்ளார்கள். பொது மக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம். ஆடுகளுக்கான காப்பீட்டுகளை கால்நடைத்துறையினர்களை அணுகி உங்களுடை ஆடுகளுக்கு காப்பீடு செய்யுங்கள் நாயினால் இறந்து போன ஆடுகளுக்கு முழு இழப்பீடுத்தொகை வழங்கப்படும். மேலும், விவசாயிகள் அளிக்கப்படுகின்ற கோரிக்கை மனுக்களுக்கு  உரிய காலத்தில் அவர்களின் கோரிக்கை தீர்வு காணப்படவேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் அலுவலருக்குஅறிவுறுத்தினார்கள்
 

மேலும்,  நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகள் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் வழங்கினார்கள். அதன் அடிப்படையில் 94 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன

பின்னர் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.102900 இலட்சம் மதிப்பீட்டில் மல்பெரி நடவு மானியமும், வேளாண்மை  பொறியியல் துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு ரூ.85,000  மதிப்பீட்டில் பவர் டில்லர் இயந்திரமும்;,  SMAM திட்டத்தின் கிழ் ரூ. 2,06,920  இலட்சம் மதிப்பீட்டில் சூரிய சக்தி உலர்த்தயும்,   வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 1 பயனாளிகளுக்கு  தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் திட்டத்தில் ரூ.2,100 மதிப்பீட்டில் தார்பாலின், 1 பயனாளிகளுக்கு  கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.150 மதிப்பீட்டில் திரச உயிர் உரமும்,  தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, சார்பாக1 பயனாளிகளுக்கு  ரூ.10000 மதிப்பீட்டில்,வேளாண் இடு பொருள்களும், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 1 பயனாளிகளுக்கு  4000 மதிப்பீட்டில் சூரிய விளக்குப் பொறியும் ஆக மொத்தம் 11 பயனாளிகளுக்கு ரூ.411070 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் வழங்கினார்.

 

 


கரூரில் 11 விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் லியாகத், வேளாண் இணை இயக்குனர் சிவசுப்பிரமணியன்,  மாவட்ட வன அலுவலர் சரவணன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துறை ஆட்சியர் சைபுதீன், கோட்டாட்சியர்கள் ரூபினா (கரூர்), புஷ்பாதேவி (குளித்தலை), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொ) (வேளாண்மை) கலைசெல்வி மற்றும் அரசு அலுவலர்கள் விவசாயிகள்,விவசாய பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

விருதுநகர் தேங்காய் விவசாயிகளுக்கு பொற்காலம்! இ-நாம் மூலம் நேரடி விற்பனை, அதிக லாபம்!
விருதுநகர் தேங்காய் விவசாயிகளுக்கு பொற்காலம்! இ-நாம் மூலம் நேரடி விற்பனை, அதிக லாபம்!
விவசாயிகளே உஷார்! இனி மொபைல் எண்ணை உறுதி செய்தால் மட்டுமே இடுபொருள் அனுமதி சீட்டு: புதுச்சேரி வேளாண் துறை தகவல்
விவசாயிகளே உஷார்! இனி மொபைல் எண்ணை உறுதி செய்தால் மட்டுமே இடுபொருள் அனுமதி சீட்டு: புதுச்சேரி வேளாண் துறை தகவல்
சீமைக் கருவேலம் இல்லா விருதுநகர்: பசுமைக்கு மக்கள் இயக்கத்தின் பணிகள் தீவரம் !
சீமைக் கருவேலம் இல்லா விருதுநகர்: பசுமைக்கு மக்கள் இயக்கத்தின் பணிகள் தீவரம் !
வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளின் மெகா கோரிக்கைகள்! கூடுதல் நிதி முதல் ரூ.2 லட்சம் கடன் தள்ளுபடி வரை எதிர்பார்ப்பு
வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளின் மெகா கோரிக்கைகள்! கூடுதல் நிதி முதல் ரூ.2 லட்சம் கடன் தள்ளுபடி வரை எதிர்பார்ப்பு

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் போட்ட ரகசிய திட்டம்.. பிளான் போட்டு சுக்கு நூறாக உடைத்த இபிஎஸ்.? ஆர்.பி.உதயகுமார் சொன்ன ஷாக் தகவல்
விஜய் போட்ட ரகசிய திட்டம்.. பிளான் போட்டு சுக்கு நூறாக உடைத்த இபிஎஸ்.? ஆர்.பி.உதயகுமார் சொன்ன ஷாக் தகவல்
TET 2026: ஆசிரியர் தகுதித் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு- காண்பது எப்படி? ஆட்சேபிக்க கடைசி வாய்ப்பு!
TET 2026: ஆசிரியர் தகுதித் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு- காண்பது எப்படி? ஆட்சேபிக்க கடைசி வாய்ப்பு!
Medical Admissions Reservation : மாணவர்களுக்கு குஷி.! மருத்துவ உள் இட ஒதுக்கீடு 10 % அதிகரிக்கப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மாணவர்களுக்கு குஷி.! மருத்துவ உள் இட ஒதுக்கீடு 10 % அதிகரிக்கப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
ரூ.80 ஆயிரம் தள்ளுபடி! குறையும் விலை- மாருதி பிரெஸ்ஸா புது மாடலுக்கு முன்னே குவியும் ஆஃபர்கள்
ரூ.80 ஆயிரம் தள்ளுபடி! குறையும் விலை- மாருதி பிரெஸ்ஸா புது மாடலுக்கு முன்னே குவியும் ஆஃபர்கள்
CM Vijay: லிஸ்ட் போட்ட யூட்யூபர்..! தூக்கி அடிக்கப்பட்ட IAS அதிகாரிகள் - திமுக அதிகாரிகளா? ஊழல் பேர்வழிகளா?
லிஸ்ட் போட்ட யூட்யூபர்..! தூக்கி அடிக்கப்பட்ட IAS அதிகாரிகள் - திமுக அதிகாரிகளா? ஊழல் பேர்வழிகளா?
சம்பவ இடத்திற்கு சென்ற கனிமொழி - ”சட்டசபையில பொய் சொல்லல, யாரையும் காப்பாற்ற துடிக்கல” TVK பதிலடி
சம்பவ இடத்திற்கு சென்ற கனிமொழி - ”சட்டசபையில பொய் சொல்லல, யாரையும் காப்பாற்ற துடிக்கல” TVK பதிலடி
Cheapest Strong Hybrid: நாட்டின் மலிவான, வலுவான ஹைப்ரிட் கார் - 28KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங் - EMI விவரங்கள்
நாட்டின் மலிவான, வலுவான ஹைப்ரிட் கார் - 28KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங் - EMI விவரங்கள்
CM Vijay: சொன்னதை செய்த விஜய்.. லஞ்சம் வாங்கிய தவெக நிர்வாகி அதிரடி கைது.. கட்சியில் இருந்து நீக்கம்!
CM Vijay: சொன்னதை செய்த விஜய்.. லஞ்சம் வாங்கிய தவெக நிர்வாகி அதிரடி கைது.. கட்சியில் இருந்து நீக்கம்!
Embed widget