மேலும் அறிய

தூத்துக்குடி: கோரம்பள்ளம் குளம்....வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீர்....விவசாயிகள் வைத்த கோரிக்கை

கோரம்பள்ளம் குளத்தில் இருந்து வெளியாகும் தண்ணீர் வீணாக கடலுக்கு செல்வதை தடுக்க கோரம்பள்ளம் குளத்தின் 24கண் மதகுகளை சீரமைத்துதர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை.

கோரம்பள்ளம் குளத்தில் இருந்து வெளியாகும் தண்ணீர் வீணாக கடலுக்கு செல்வதை தடுக்க கோரம்பள்ளம் குளத்தின் 24 கண் மதகுகளை சீரமைத்துதர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தூத்துக்குடி: கோரம்பள்ளம் குளம்....வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீர்....விவசாயிகள் வைத்த கோரிக்கை

தாமிரபரணி பாசனத்தில் ஸ்ரீவைகுண்டம் வடகாலின் கடைசி குளமாக உள்ளது தூத்துக்குடி அருகேயுள்ள கோரம்பள்ளம் குளம். கோரம்பள்ளம் குளத்தின் மூலம் 2262 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட கோரம்பள்ளம் குளத்தில் இருந்து வெள்ளக்காலங்களில் வெளியேறும் உபரிநீர் உப்பாற்று ஓடை வழியாக கடலை சென்றடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கோரம்பள்ளம் குளம் வடக்கு தெற்கு என 2 பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ளது.


தூத்துக்குடி: கோரம்பள்ளம் குளம்....வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீர்....விவசாயிகள் வைத்த கோரிக்கை

இதில் அத்திமரப்பட்டி முதல் பெரியநாயகிபுரம் வரை அமைந்துள்ள பாசன குளமாகவும் மற்றொருபிரிவு பெரியநாயகிபுரம் முதல் அந்தோணியார்புரம் வரை என இருப்பிரிவுகளாக கொண்டு பாசன வசதிக்காக பிரிக்கப்பட்டுள்ளது. கோரம்பள்ளம் குளத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.கோரம்பள்ளம் குளத்தில் 24 மதகுகள் உடையது. மேலும் பல கிராம பஞ்சாயத்துகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும் கோரம்பள்ளம் குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தினை நம்பி பெரியநாயகிபுரம், கோரம்பள்ளம், அத்திமரப்பட்டி, முத்தையாபுரம், வீரநாயக்கன்தட்டு, முள்ளக்காடு, சிறுபாடு, காலங்கரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயம் நடைபெற்று வருகிறது.


தூத்துக்குடி: கோரம்பள்ளம் குளம்....வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீர்....விவசாயிகள் வைத்த கோரிக்கை

ஸ்ரீவைகுண்டம் பாசனத்தில் கோரம்பள்ளம் குளம் கடைசியில் இருப்பதால் தாமிரபரணி தண்ணீர் அடிக்கடி வந்து சேருவதில்லை. இந்நிலையில், கோடை காலங்களில் தூத்துக்குடி மாவட்டத்தின் கடம்பூர், கயத்தாறு, செக்காரக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழையின் காரணமாக ஏற்படும் காட்டாற்று வெள்ளம் கொம்பாடி ஓடை வழியாக கோரம்பள்ளம் குளத்தை சென்றடைகிறது.


தூத்துக்குடி: கோரம்பள்ளம் குளம்....வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீர்....விவசாயிகள் வைத்த கோரிக்கை
        

கோரம்பள்ளம் குளத்தில் இருந்து ஆண்டுதோறும்  மழை காலங்களில் சுமார் 10 டிஎம்சி தண்ணீர் வரை வீணாக கடலுக்கு செல்லும் நிலை உள்ளதாக கூறும் விவசாயிகள், விரைவில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் கோரம்பள்ளம் குளத்தின் 24 கண்மதகுகளை சீரமைக்க வேண்டும் மேலும் முறையாக அதில் ரப்பர் சீட் பொருத்த வேண்டும்  எனக்கூறும் விவசாயிகள் குளத்தை தூர்வாரவேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றனர்.


தூத்துக்குடி: கோரம்பள்ளம் குளம்....வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீர்....விவசாயிகள் வைத்த கோரிக்கை

இதுகுறித்து விவசாயி ராஜேந்திர பூபதியிடம் கேட்டபோது,  தற்போது கோரம்பள்ளம் குளத்தில் தண்ணீர் கிடையாது. கோரம்பள்ளம் குளத்தில் உள்ள மண்மேடுகள் அகற்றப்படாததால் தண்ணீரை சேமித்து வைக்க முடிவதில்லை எனக்கூறும் விவசாயிகள், அதனை அகற்ற வேண்டும் என்கின்றனர். சமீபத்தில் பாபநாசம் அணையில் இருந்து திறந்து விட்ட தண்ணீர், கடைசி குளமான கோரம்பள்ளம் குளத்தை அடையும் முன்பே நிறுத்தப்பட்டு விட்டது. இதனால், வாழை பயிர்கள் கருக தொடங்கிவிட்டது. அணைகளில் போதுமான தண்ணீர் இருப்பதால் கோரம்பள்ளம் குளத்திற்கு உடனே தண்ணீர் தந்து மாவட்ட நிர்வாகம் உதவிட வேண்டும் என்கிறார்.

 

தலைப்பு செய்திகள்

கரூர் ரயில்வே பணி: விவசாய நில நீர் வழிக்கு உயர்நீதிமன்றம் பாதுகாப்பு உத்தரவு!
கரூர் ரயில்வே பணி: விவசாய நில நீர் வழிக்கு உயர்நீதிமன்றம் பாதுகாப்பு உத்தரவு!
விருதுநகர் இருக்கண்குடி மீன்பிடி குத்தகை: 5 ஆண்டு ஒப்பந்தப்புள்ளிக்கு அரிய வாய்ப்பு!
விருதுநகர் இருக்கண்குடி மீன்பிடி குத்தகை: 5 ஆண்டு ஒப்பந்தப்புள்ளிக்கு அரிய வாய்ப்பு!
35 ஆண்டுகளாக நிறைவேறாத கோரிக்கை... 18 மாவட்ட மக்களின் குடிநீரை காக்க புதிய கதவணைகள் எப்போது?
35 ஆண்டுகளாக நிறைவேறாத கோரிக்கை... 18 மாவட்ட மக்களின் குடிநீரை காக்க புதிய கதவணைகள் எப்போது?
எகிறுது எதிர்பார்ப்பு... தலைவாழை இலைக்கு புவிசார் குறியீடு எப்போது: திருவையாறு விவசாயிகள் கேள்வி
எகிறுது எதிர்பார்ப்பு... தலைவாழை இலைக்கு புவிசார் குறியீடு எப்போது: திருவையாறு விவசாயிகள் கேள்வி

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
Senthil Balaji: கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
Embed widget