மேலும் அறிய

நிலக்கடலையை விவசாயிகளிடம் இருந்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும் - தஞ்சை விவசாயிகள் கோரிக்கை

நெல்லுக்கு அரசே விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்கிறது. அதேபோல் நிலக்கடலையும் அரசை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு நல்ல விலை கொடுக்க வேண்டும்.

தஞ்சாவூர்: நிலக்கடலையை விவசாயிகளிடம் இருந்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி பேசினர்.

தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா தலைமை வகித்தார் ‌. இதில் விவசாயிகள் பேசியதாவது:

திருவோணம் சிவ விடுதி கடலை விவசாயி ராமசாமி: திருவோணம் பகுதி சிவ விடுதி வெட்டி விடுதி உட்பட சுற்றுப்பகுதிகளில் 100 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி செய்து வருகின்றனர். நெல் பயிருக்கு மாற்றாக நிலக்கடலை சாகுபடி மட்டுமே இப்பகுதியில் மேற்கொள்ளப்படுகிறது.

விவசாயிகள் 37 கிலோ விதையை ஒரு 5 ஆயிரம் கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. ஆனால் விவசாயிகள் விளைவிக்கும் நிலக்கடலையை தனியார் வியாபாரிகள் 42 கிலோ நிலக்கடலை ரூ.2100 முதல் ரூ.2200 வரை மட்டுமே கொள்முதல் செய்கின்றனர். ஏன் விவசாயிகள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர்.

நெல்லுக்கு மாற்றாக இப்பகுதிகளில் முழுமையாக நிலக்கடலை விவசாயம் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. நெல்லுக்கு அரசே விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்கிறது. அதேபோல் நிலக்கடலையும் அரசை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு நல்ல விலை கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கோரிக்கை விடுத்து பேசினார்.


நிலக்கடலையை விவசாயிகளிடம் இருந்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும் - தஞ்சை விவசாயிகள் கோரிக்கை

இதற்கு அதிகாரிகள் தரப்பில் பதில் அளிக்கையில், இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

வாளமர்கோட்டை இளங்கோவன்: மேகதாது அணை கட்டினால் தமிழகம் பாலைவனமாகும் நிலை ஏற்படும். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டில்லி எல்லையில் போராட்டம் நடத்துவது போல் மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி விவசாயிகள் தமிழக எல்லையில் போராட்டம் நடத்தும் நிலை உருவாகும். .

அம்மையகரம் ஏ.கே.ஆர். ரவிச்சந்தர்: அடுத்த தமிழக வேளாண் பட்ஜெட் வரை காத்திருக்காமல் நெல் குவிண்டாலுக்கு ரூ.3000, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4500 வழங்குவது தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டும்.

ஆம்பலாப்பட்டு தங்கவேல்: மழைக்காலத்தில் வயல்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. இதற்கு சரியான வடிகால் வசதி இல்லாததன் காரணம்.  எனவே பாசன கால்வாய், வடிகால் கால்வாய் ஆகியவற்றை நடப்பு பருவ காலத்திற்கு விவசாயிகள் பயன்பெறும் வகையில் தூர்வாரி செப்பனிட்டு தர வேண்டும். குறிச்சிச்சேரி சுமார் 19 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி ஆகும். இதில் நீர் தேங்கினால் சுமார் 300 ஏக்கர் பாசனம் பெறும். இந்த ஏரியில் தடுப்பணை கட்டி கொடுத்தால் மேலும் 100 ஏக்கர் பாசனம் பெறும்.

கக்கரை சாமி. மனோகரன்: ஒரத்தநாடு பேரூராட்சி கழிவுகள் வன்னிப்பட்டு வாய்க்காலில் கொட்டப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசி பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த வாய்க்காலில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate Today: குஷியோ குஷி.! தங்கம் விலை சரசரவென குறைந்தது- ஒரு சவரனுக்கு இவ்வளவா.!!!
குஷியோ குஷி.! தங்கம் விலை சரசரவென குறைந்தது- ஒரு சவரனுக்கு இவ்வளவா.!!!
EPS ADMK: திமுக கூட்டணியில் குழப்பம்.! 210 தொகுதிகளை அதிமுக கைப்பற்றும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
திமுக கூட்டணியில் குழப்பம்.! 210 தொகுதிகளை அதிமுக கைப்பற்றும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Magnus Carlsen: இந்தியரிடம் தோற்றதும் கடுப்பான மேக்னஸ் கார்ல்சன் - ஆத்திரத்தில் செய்த செயலின் வீடியோ வைரல்
Magnus Carlsen: இந்தியரிடம் தோற்றதும் கடுப்பான மேக்னஸ் கார்ல்சன் - ஆத்திரத்தில் செய்த செயலின் வீடியோ வைரல்
Chennai Metro: மீண்டுமா..! சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, ஏர்போர்ட் - கோயம்பேடு வழித்தட மக்கள் தவிப்பு
Chennai Metro: மீண்டுமா..! சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, ஏர்போர்ட் - கோயம்பேடு வழித்தட மக்கள் தவிப்பு
ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Today: குஷியோ குஷி.! தங்கம் விலை சரசரவென குறைந்தது- ஒரு சவரனுக்கு இவ்வளவா.!!!
குஷியோ குஷி.! தங்கம் விலை சரசரவென குறைந்தது- ஒரு சவரனுக்கு இவ்வளவா.!!!
EPS ADMK: திமுக கூட்டணியில் குழப்பம்.! 210 தொகுதிகளை அதிமுக கைப்பற்றும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
திமுக கூட்டணியில் குழப்பம்.! 210 தொகுதிகளை அதிமுக கைப்பற்றும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Magnus Carlsen: இந்தியரிடம் தோற்றதும் கடுப்பான மேக்னஸ் கார்ல்சன் - ஆத்திரத்தில் செய்த செயலின் வீடியோ வைரல்
Magnus Carlsen: இந்தியரிடம் தோற்றதும் கடுப்பான மேக்னஸ் கார்ல்சன் - ஆத்திரத்தில் செய்த செயலின் வீடியோ வைரல்
Chennai Metro: மீண்டுமா..! சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, ஏர்போர்ட் - கோயம்பேடு வழித்தட மக்கள் தவிப்பு
Chennai Metro: மீண்டுமா..! சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, ஏர்போர்ட் - கோயம்பேடு வழித்தட மக்கள் தவிப்பு
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Ajithkumar: சூப்பர் அப்டேட்.. அஜித்தின் அடுத்த பட ரிலீஸ் தேதி இதோ.. குழப்பத்தில் ரசிகர்கள்!
Ajithkumar: சூப்பர் அப்டேட்.. அஜித்தின் அடுத்த பட ரிலீஸ் தேதி இதோ.. குழப்பத்தில் ரசிகர்கள்!
புத்தாண்டை Skoda Slavia கார் வாங்கி கொண்டாடலமா? மைலேஜ், விலை என்ன?
புத்தாண்டை Skoda Slavia கார் வாங்கி கொண்டாடலமா? மைலேஜ், விலை என்ன?
Car Price Hike: ஆரம்பமே அதிர்ச்சியா.. உயரப்போகும் பட்ஜெட் கார்களின் விலை - எந்தெந்த கார் தெரியுமா?
Car Price Hike: ஆரம்பமே அதிர்ச்சியா.. உயரப்போகும் பட்ஜெட் கார்களின் விலை - எந்தெந்த கார் தெரியுமா?
Embed widget