Writer Vennila on John Pennycuick : வரலாற்று ஆவணத்தில் இல்லாததை சொல்லும் ஸ்டாலின்..ஆதாரங்களை அடுக்கும் எழுத்தாளர்
Writer Vennila on John Pennycuick : கடந்த 15ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓர் வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பை வெளியிட்டார். அதில் ‘தமிழ்நாடு அரசு சார்பில், முல்லை பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிகின் சிலை, அவரின் சொந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நாட்டில் நிறுவப்படும்’ என அறிவித்தார். அதோடு, ஆங்கிலேய அரசின் நிதி உதவி போதாதபோது, தனது குடும்ப சொத்துக்களை விற்று முல்லை பெரியாறு அணையை கட்டி முடித்தார் எனவும் அந்த அறிக்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இதனை எழுத்தாளரும் வரலாற்று ஆய்வாளருமான அ.வெண்ணிலா மறுத்துள்ளார். ’பென்னிகுயிக் தனது சொத்துக்களை விற்று அணையை கட்டினார் என்பது கடந்த 25 ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்ட அழகிய கற்பனை’ என தனது முகநூலில் அவர் குறிப்பிட்டுள்ளார்





















