மேலும் அறிய

மரக்கட்டையால் தாக்கப்பட்ட பட்டீஸ்வரம் பள்ளி மாணவர் உயிரிழப்பு: பதற்றமான சூழ்நிலையால் பரபரப்பு

போலீசார் மாணவர்களின் நலன் கருதி இருதரப்பினரின் பெற்றோரை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பிலும் மாணவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்துள்ளனர். 

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் மாணவர்கள் மத்தியில் நடந்த மோதல் சம்பவத்தில் படுகாயமடைந்த மாணவர் இன்று அதிகாலை உயிரிழந்தார். இந்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பகுதியில் அறிஞர் அண்ணா மாதிரி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கும்பகோணம், பட்டீஸ்வரம், உடையாளூர், பம்பப்படையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் இனாம்கிளியூர் பகுதியை சேர்ந்த கவியரசன் (17) இந்த பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும், அதே பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் 18-ம் தேதி திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் 11-ம் வகுப்பு மாணவரின் மூக்கில் காயம் அடைந்து கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். மேலும் இது தொடர்பாக 11-ம் வகுப்பு மாணவரின் பெற்றோர் பட்டீஸ்வரம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் மாணவர்களின் நலன் கருதி இருதரப்பினரின் பெற்றோரை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பிலும் மாணவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்துள்ளனர். 

இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி மாணவன் கவிரயரசன் தனது நண்பர்களுடன் மதிய உணவு இடைவெளியில் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது 11-ம் வகுப்பு மாணவர் தரப்பினருடன் ஒருவர் மீது ஒருவர் இடித்துக் கொண்டதில் தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக முன்விரோதமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 4-ந் தேதி மாலை சிறப்பு வகுப்பை முடித்துவிட்டு பள்ளியில் இருந்து வீட்டிற்கு கவியரசன் புறப்பட்டார். அப்போது பட்டீஸ்வரம் கோவில் அருகே தனது நண்பர்களுடன் கவியரசன் சென்ற போது 11-ம் வகுப்பு மாணவர்கள் 12-ம் வகுப்பு மாணவர்களை தாக்கியுள்ளனர். அப்போது இரு தரப்பினருடன் ஏற்பட்ட மோதலில் கவியரசனை 11-ம் வகுப்பு மாணவர்கள் மரக்கட்டையால் தலையில் அடித்துள்ளனர். இதில் ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்த கவியரசனை அவருடன் வந்த நண்பர்கள் மற்றும் அக்கம்பத்தினர் பட்டீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்து முதல் உதவி சிகிச்சை செய்துள்ளனர். பின்னர் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு டாக்டர்கள் கவியரசனுக்கு சிகிச்சை செய்த போது தலையில் ரத்தக்கசிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னா் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் தனியார் ஆஸ்பத்திரியில் கவியரசன் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித் சிங் நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும் பட்டீஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

இந்நிலையில் கவியரசனை தாக்கிய 11ம் வகுப்பு மாணவர்கள் 15 பேரை பட்டீஸ்வரம் போலீசார் கைது செய்து தஞ்சை இளஞ்சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். இதற்கிடையில் மாணவன் கவியரசன் உடல்நிலை கவலைக்கிடம் ஆனதால் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெற்றோர் சேர்த்துள்ளனர். தொடர்ந்து  நேற்று மதியம் மாணவன் கவியரசன் மூளைச்சாவு அடைந்ததாக தகவல்கள் பரவியது. பின்னர் மேல்சிகிச்சை அளிப்பதற்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கவியரசன் மாற்றப்பட்டார். அங்கு 5 பேர் கொண்டு மருத்துவர் குழுவினர், அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். 

இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் கவியரசன் உயிரிழந்தார். அப்போது அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பிரேத பரிசோதனைக்கு உடலை எடுத்து செல்ல அனுமதிக்காமல் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். இருப்பினும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

மாணவன் கவியரசன் உயிரிழந்தததால் விபரீதங்கள் ஏற்படாதவாறு அந்த மாணவனின் வீடு, பள்ளி மற்றும் பட்டீஸ்வரம் பகுதிகளில் போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Tamilnadu Roundup: இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
Ramadoss Statement: அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Tamilnadu Roundup: இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
Ramadoss Statement: அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
இளைஞர்களுக்கு ஜாக்பாட்.!  56,768 புதிய வேலைவாய்ப்பு... ரூ.36,860.36 கோடி முதலீடு- அசத்தும் தமிழக அரசு
இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! 56,768 புதிய வேலைவாய்ப்பு... ரூ.36,860.36 கோடி முதலீடு- அசத்தும் தமிழக அரசு
Gautam Gambhir: கப் வேணும்னா கோலி, ரோகித் இருக்கணும்.. பேட்டிங்கில் சொன்ன சேதி, கம்பீர் சொல்வது என்ன?
Gautam Gambhir: கப் வேணும்னா கோலி, ரோகித் இருக்கணும்.. பேட்டிங்கில் சொன்ன சேதி, கம்பீர் சொல்வது என்ன?
Embed widget