Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
கடலூர் அருகே இந்து - முஸ்லிம் ஒன்று சேர்ந்து சந்தனக்கூடு நிகழ்ச்சி நடத்தினர். மேலும் சில பெண்கள் தர்காவில் சாமி வந்து ஆடிய வீடியோ தற்போது #இதாண்டாதமிழ்நாடு என்ற ஹேஷ்டேக் உடன் சமூக வலைதலங்களில் வைரலாக பரவி வருகிறது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பெரியப்பட்டு கிராமத்தில் உள்ள ஆலோடி சாப் தர்காவில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் இறுதியில் சந்தனக்கூடு விழா நடப்பது வழக்கம்.
இந்த ஆண்டு சந்தனக்கூடு விழாவிற்கான கொடியேற்று நிகழ்வு கடந்த நவம்பர் 21 ஆம் தேதி தொடங்கியது. இந்தநிலையில் நவம்பர் 27 அதாவது நேற்று இரவு உலக நன்மை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. அதேபோல அதிகாலை உரூஸ் எனும் சந்தனம் பூசும் சந்தனக்கூடு விழாவும் நடைபெற்றது.
இந்தவிழாவில் பெரியப்பட்டு கிராமத்தைச் சார்ந்த இந்து- முஸ்லிம் என இரு மதத்தினரும் கலந்து கொண்டு சந்தனக்கூடு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர். மேலும் சில பெண்கள் தர்காவில் சாமி வந்து ஆடியது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் #இதாண்டாதமிழ்நாடு என்ற ஹேஷ்டேக் உடன் வைரலாக பரவி வருகிறது. இந்த விழாவில் இந்து- முஸ்லிம் என இரு மதத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.






















