Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
திண்டிவனத்தில் அ.தி.மு.க ஆலோசனை கூட்டம் .வி. சண்முகம் ஆதரவாளர்களுக்கும் மாவட்ட செயலாளர் தரப்ப் ஆதரவாளருக்கும் இடையே சம்பவம் அ.தி.மு.கவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டிவனத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், அ.தி.மு.க விழுப்புரம் மாவட்ட செயலாளர் பசுபதி தலைமையில் நகர செயல்வீரர்கள் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வரும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது, த.வெ.க மற்றும் தி.மு.க அரசுகளுக்கு எதிரான தேர்தல் வியூகங்களை வகுப்பது தொடர்பாக இந்த கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த முக்கிய ஆலோசனை கூட்டத்திற்கு திண்டிவனம் நகர நிர்வாகிகள் மற்றும் அ.தி.மு.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்களுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. தங்களை திட்டமிட்டு புறக்கணித்ததாகக் கூறி, சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்களும், திண்டிவனம் நகர அ.தி.மு.க நிர்வாகிகளும் திருமண மண்டபத்தின் எதிரே பெருமளவில் திரண்டனர்.
மண்டபத்திற்குள் சென்று கூட்டத்தில் பங்கேற்க சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் முற்பட்டபோது, அங்கிருந்த அ.தி.மு.கவின் மற்றொரு தரப்பினர் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதனால் ஆத்திரமடைந்த சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் போலீசாரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். "நாங்களும் அ.தி.மு.கவில்தான் இருக்கிறோம். திண்டிவனம் நகரத்தில் பல்வேறு பொறுப்புகளில் முறைப்படி பதவியில் நீடித்து வருகிறோம். கட்சி கூட்டத்திற்குள் செல்ல எங்களை எப்படி தடுக்கலாம்? எங்களையும் மண்டபத்திற்குள் அனுமதிக்க வேண்டும்" என்று முழக்கமிட்டு போலீசாருடன் மல்லுக்கட்டினர்.
அனுமதி மறுக்கப்பட்ட நிர்வாகிகளின் திடீர் போராட்டத்தாலும், போலீசாருடன் ஏற்பட்ட மோதல் போக்காலும் திருமண மண்டப வளாகமே போர்க்களம் போல காட்சியளித்தது. மாவட்ட செயலாளர் பசுபதி தரப்புக்கும், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தரப்புக்கும் இடையே நீண்ட நாட்களாக புகைந்து கொண்டிருந்த கோஷ்டி பூசல் இதன் மூலம் பொதுவெளியில் அம்பலமாகியுள்ளது.
தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால், எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுக்க சம்பவ இடத்தில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் திண்டிவனம் கொண்டு வரப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.கவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















