Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ஜெய்ஸ்வால் பரிதாபமான முறையில் ரன் அவுட்டானார்.

இந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று இலங்கையின் காலே மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்து வருகிறது.
கீழே விழுந்த ஜெய்ஸ்வால்:
பேட்டிங்கிற்கு சாதகமான இந்த மைதானத்தில் இந்திய அணிக்காக கே.எல்.ராகுல் - ஜெய்ஸ்வால் ஆட்டத்தை தொடங்கினர். பந்துவீச்சு ஒன்றும் பெரியளவில் எடுபடாத இந்த மைதானத்தில் இருவரும் சிறப்பாகவே ஆடினார்கள். குறிப்பாக, ஜெய்ஸ்வால் ஒருநாள் போட்டி போல ஆடிக்கொண்டிருந்தார்.
அப்போது, கேஷரா நுவந்தா 11வது ஓவரை வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தில் கே.எல்.ராகுல் பந்தை ஒரு ரன்னுக்குத் தட்டிவிட்டு ஓட, பந்துவீச்சாளர் நுவந்தா பந்தைப் பிடிக்க முயற்சித்தபோது ஜெய்ஸ்வால் மீது மோதிவிட்டார். இதில் நிலைதடுமாறிய ஜெய்ஸ்வால் அங்கேயே கீழே விழுந்துவிட்டார்.
ரன் அவுட் பரிதாபம்:
Insecurity of rahul at peaks it costs inform jaiswal wicket
— saii___17 (@_RISHABHPANT_17) August 15, 2026
look here once pic.twitter.com/fjyjX2u35T
அப்போது, ரன் எடுக்க பாதி வரை வந்த கே.எல்.ராகுல் மீண்டும் தனது ஸ்ட்ரைக்கிற்குச் செல்ல முயற்சித்தார். ஆனால், அதற்குள் ஃபீல்டர் பிரபாத் ஜெயசூர்யா பந்தை பிடித்து விக்கெட் கீப்பர் டிக்வெல்லாவிற்கு வீசினார். கீழே விழுந்து எழுந்து தடுமாறிய ஜெய்ஸ்வால் ரன் எடுக்க மறுமுனைக்குச் செல்ல முடியாமல் தனது கிரீசுக்கே திரும்பிவிட்டார்.
ஒரு நிமிடம் குழப்பத்தில் யோசித்த இலங்கை விக்கெட் கீப்பர் டிக்வெல்லா ரன் அவுட் செய்து அம்பயரிடம் அப்பீல் செய்தார். கே.எல்.ராகுல் ஜெய்ஸ்வாலுக்கு முன்பே கிரிசீல் பேட்டை வைத்துவிட்டதால் ஜெய்ஸ்வால் அவுட்டானார். அவர் 37 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 32 ரன்கள் எடுத்து பரிதாபமாக வெளியேறினார். அப்போது கே.எல்.ராகுல் 28 பந்துகளில் 14 ரன்களுடன் ஆடிக்கொண்டிருந்தார்.
துரதிஷ்டவசமாக ரன் அவுட்டாகிய ஜெய்ஸ்வால் மிகுந்த விரக்தியுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார். மழை பெய்ததால் அவுட்ஃபீல்ட் மோசமாக இருப்பதால் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய அணி 27 ஓவர்களில் 101 ரன்களுடன் ஆடி வருகிறது. கே.எல்.ராகுல் 37 ரன்களுடனும், படிக்கல் 35 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.
இமாலய ரன்களை குவிக்குமா இந்தியா?
இலங்கை அணிக்காக பெர்னாண்டோ, லஹிரு குமாரா, நுவந்தா, பிரபாத் ஜெயசூர்யா, கேப்டன் டி சில்வா பந்துவீசியுள்ளனர். மைதானம் பேட்டிங்கிற்கு ஒத்துழைக்கும் மைதானம் என்பதால் இந்திய அணி இமாலய ரன்களை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்



















