மேலும் அறிய

Narayanan : முதல்வர் அழைத்த அனுபவசாலி... யார் இந்த நாராயண்?

“தமிழகத்தில் அரசியல் சித்தாந்தம் அரசின் கொள்கையாகவும், திட்டங்களாகவும் மாற்றப்பட்டதால் மக்கள் பயன்பெற்றார்கள். அப்படிப்பட்ட மாற்றம் இந்தியாவில் வேறு எங்கும் நிகழவில்லை” இந்த வார்த்தைகள் மத்திய அரசின் முன்னாள் நிதித்துறை செயலாளர் எஸ்.நாராயண் எழுதிய தி திரவிடியன் இயர்ஸ் - பாலிடிக்ஸ் அண்ட் வெல்ஃபேர் இன் தமிழ்நாடு’என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது. இந்த வார்த்தைகளின் மூலம் தமிழ்நாட்டின் மீது எஸ்.நாராயண்னுக்கு இருக்கும் ஆழமான அரசியல், சமூக, பொருளாதார புரிதல்களை நம்மால் அறிய இயலும்.

சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் எம்.எஸ்.சி பட்டம் பெற்ற நாராயண், தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் பல்கலைக்கழகத்தில் நிதி மேலாண்மையும், லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் எம்பில் பட்டமும் பெற்றவர். டெல்லியில் தனது முனைவர் பட்டத்தை முடித்த நாராயண். 1965ஆம் ஆண்டில் தமிழ்நாடு பிரிவில் இருந்து ஐ.ஏ.எஸ் பணிக்கு தேர்வானவர்.

நாராயண் ஐஏஎஸ் அதிகாரியாக சேர்ந்த 1965ஆம் ஆண்டில் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டமும் அதற்கு பிறகு நடந்த ஆட்சி மாற்றத்தால் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு எவ்வாறு வேறுபட்டு நிற்கிறது என்பதை தி திரவிடியன் இயர்ஸ் புத்தகம் பேசுகிறது. கடந்த 2004ஆம் ஆண்டில் பிரதமரின் பொருளாதார ஆலோசகர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றவர் நாராயண்,

பிரதமரின் பொருளாதார ஆலோசகராக இருந்து பொருளாதார கொள்கைகள் அமல்படுத்துதல், நிதி, வர்த்தகம், தொழில், பெட்ரோலியம், வேளாண்மை, கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட 30 துறைகளில் பொருளாதார கொள்கைகளை அமல்படுத்த உறுதுணையாக இருந்தவர். இதற்கு முன்னாள் மத்திய அரசின் நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளராகவும், வருவாய், பெட்ரோலியம், தொழில்துறை மேம்பாடு மற்றும் நிலக்கரி துறைகளுக்கான செயலாளராகவும் பதவி வகித்த அனுபவம் கொண்ட எஸ்.நாராயண், 2000ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் மத்திய அரசின் பட்ஜெட்டை வகுப்பதில் முக்கிய பங்காற்றிய அவர். மேக்ரோ பொருளாதார கொள்கைகளை உருவாக்குவதிலும் நாராயண் முக்கிய பங்கு வகித்தார்.

1989 முதல் 1995ஆம் ஆண்டு வரை தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக நாராயண் இருந்தபோது, குறு கடன்களை வழங்கும் குழுக்களை அமைத்தார். தற்போது இந்த குழுக்கள் 3 லட்சம் பேரை கொண்ட குழுவாக வளர்ந்துள்ளது. சமூகவியல், நீர்மேலாண்மை, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு சுயவேலை வாய்ப்பு திட்டம் உள்ளிட்ட நிலையான திட்டங்களை செயல்படுத்த காரணமாக இருந்தவர். தற்போது இந்தியாவில் உள்ள மிக முக்கிய தனியார் நிறுவனங்களான அப்போலோ டயர்ஸ், கோத்ரேஜ், சேஷாயி காகித நிறுவனம், அவிவா லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களில் இயக்குநராக பணியாற்றி வருகிறார்.

தமிழக அரசின் கடன் சுமை 5.6 லட்சம் கோடியாக உள்ள நிலையில் அதனை சரி செய்ய எஸ்.நாராயணின் பொருளாதார அனுபவமும் நிதிமேலாண்மை திறனும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அதிகம் கைக்கொடுக்கும் என நம்பலாம்

அரசியல் வீடியோக்கள்

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
MTC எடுத்த அதிரடி முடிவு! – சென்னை மின்சாரப் பேருந்து சேவையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் என்ன?
MTC எடுத்த அதிரடி முடிவு! – சென்னை மின்சாரப் பேருந்து சேவையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் என்ன?
முதல்முறையாக முதல்வர் விஜய்யை பாராட்டி நன்றி சொன்ன சீமான் - எதற்காக தெரியுமா?
முதல்முறையாக முதல்வர் விஜய்யை பாராட்டி நன்றி சொன்ன சீமான் - எதற்காக தெரியுமா?
Independence day 2026: 80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
Embed widget