மேலும் அறிய

டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?

மாணவர் தலைவர் தேவேந்திர நாத் மட்டோ, ஞாயிற்றுக்கிழமை ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில் உள்ள போராட்டத் தளத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.

போட்டித் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து டெல்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்தியதன் சுவடு மறைவதற்குள், தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்திலும் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தீவிரப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வாணையம் (JSSC) மற்றும் ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (JPSC) நடத்திய தேர்வுகளில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, தலைநகர் ராஞ்சியில் உள்ள மோராபாடி மைதானத்தில் அமைந்துள்ள பாபு வாடிகா முன்பு மாணவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவர் தலைவர் தேவேந்திர நாத் மட்டோ, ஞாயிற்றுக்கிழமை ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில் உள்ள போராட்டத் தளத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். கடந்த 6 நாட்களாகத் தொடர்ந்து நடைபெறும் இந்தப் போராட்டத்தால் ராஞ்சியில் பரபரப்பு நிலவி வருகிறது.

மாணவர்களின் முக்கியக் கோரிக்கைகள் என்ன?

  1. சிபிஐ விசாரணை: சமீபத்தில் செப்டம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெற்ற JSSC CGL (ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை) தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் பல முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே, இந்த முறைகேடுகள் குறித்து மாநில அரசு உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

  2. தேர்வு ரத்து: முறைகேடுகள் நடந்ததற்கான ஆதாரங்கள் உள்ளதால், நடந்து முடிந்த JSSC CGL தேர்வை உடனடியாக ரத்து செய்துவிட்டு, புதிய தேதியை அறிவிக்க வேண்டும்.

  3. கடுமையான நடவடிக்கை: வினாத்தாள் கசிவுக்குக் காரணமான இடைத்தரகர்கள், அதிகாரிகள் மற்றும் தேர்வு முகமைகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பனி மற்றும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் 6 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருவதால் பலரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஆதரவாகச் சில அரசியல் கட்சித் தலைவர்களும் போராட்டக் களத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தீவிரமடையும் போராட்டம்

போராட்டக் களத்தில் எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாமல் இருக்க ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து ஜார்க்கண்ட் மாநில அரசு இதுவரை எந்த உறுதியான முடிவும் எடுக்காததால், போராட்டம் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
தவெக வாக்குறுதி என்னாச்சு? கண்ணீர் விடும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள்- பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை!
தவெக வாக்குறுதி என்னாச்சு? கண்ணீர் விடும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள்- பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை!
டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது: விண்ணப்பிக்க மேலும் அவகாசம்! ஆசிரியர்களுக்கு வாய்ப்பு!
டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது: விண்ணப்பிக்க மேலும் அவகாசம்! ஆசிரியர்களுக்கு வாய்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Embed widget