மேலும் அறிய

Thanjavur Museum: விட போறாங்க லீவு... புறப்படலாமா டூரு... காத்திருக்குது உங்களுக்காக தஞ்சாவூரு!!!

இந்தோ- சராசனிக் கட்டடக் கலை பாணியை சார்ந்த இந்த கட்டடத்தில், 120 ஆண்டுகளாக, தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வந்தது.

தஞ்சாவூர்: கோடை காலம் ஆரம்பிக்க போகுது. பள்ளிகளுக்கும் விடுமுறை விட்டாச்சுன்னா வீட்டில குழந்தைகள் சுற்றுலா போகணும் என்று கேட்க ஆரம்பித்து விடுவார்கள். சுற்றுலாவாகவும் இருக்கணும். குழந்தைகளுக்கும் அப்படியே என்டர்டெயிமென்டா இருக்கணும். அறிவும் வளரும்னு நினைக்கிறீங்களா. அப்போ எங்கே போறதுன்னு கேட்கிறீர்களா? நம்ம தஞ்சாவூருல இருக்கிற அருங்காட்சியகத்துக்கு வாங்க.

தஞ்சாவூர் பழைய கலெக்டர் அலுவலகம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டு அருங்காட்சியகமாக மாறி அனைவரையும் கவர்ந்து இழுத்து வருகிறது. இங்கு 7டி திரையரங்கம், அரியவகை வெளிநாட்டு பறவைகள் பூங்கா, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய சிலைகள் என்று தாராளமாக ஏராளமாக பார்க்க பல உள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடம், பிரிட்டிஷ் கட்டட வல்லுனர் ராபர்ட் சிஷோலம் என்பவரால், 1896 முதல் 1900ம் ஆண்டு காலத்தில் கட்டப்பட்டது. இந்தோ- சராசனிக் கட்டடக் கலை பாணியை சார்ந்த இந்த கட்டடத்தில், 120 ஆண்டுகளாக, தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வந்தது.

மக்கள் தொகை பெருக்கம்,  போக்குவரத்து அதிகரிப்பு போன்ற காரணங்களால் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக கட்டப்பட்டு கடந்த 2015-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து, பழைய கலெக்டர் அலுவலகத்தை அதன் பழமை மாறாமல் பாதுகாத்து, அருங்காட்சியகமாக மாற்ற நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், ரூ. 8.4 கோடி மதிப்பீட்டில், அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது.


Thanjavur Museum: விட போறாங்க லீவு... புறப்படலாமா டூரு... காத்திருக்குது உங்களுக்காக தஞ்சாவூரு!!!


இந்த அருங்காட்சியகத்தில் வேளாண் துறை சார்பில் பழமையான வேளாண் கருவிகள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை உட்பட புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் மற்றும் தலைக்காவிரி முதல் பூம்புகார் வரை காவிரி ஆறும், அதன் கிளை ஆறுகளின் செயல்பாடுகள் குறித்த தத்ரூபமான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. நம் பாரம்பரிய கலைகள், நம் முன்னோர்கள் விவசாயத்திற்கு பயண்படுத்திய கருவிகள் என பார்த்து , பார்த்து வியந்து போகக்கூடிய வகையில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் பெருமுயற்சியால் பழைய மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இங்கு அழகிய கற்சிலைகள், செப்புத் திருமேனிகள், இசைக்கருவிகள், விவசாயப் பொருட்கள், நில அளவை சாதனங்கள், காவிரி நதியின் டெல்டா காட்சியுடன் கல்லணைக் காட்சி போன்ற பல அரும் பொருட்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

10-11ம் நூற்றாண்டைச் சார்ந்த சோழர் கால அரிய புத்தர் சிலை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அமர்ந்த கோலத்தில் தியான நிலையில் அமைந்துள்ள இந்த புத்தர் சிலை உடையாமல் முழுமையாக இருக்கிறது. அதேபோல் 10-11 ஆம் நூற்றாண்டை சார்ந்த சோழர், 13ம் நூற்றாண்டை சார்ந்த பைரவர், பைரவி, 15-16 ஆம் நூற்றாண்டை சார்ந்த விஷ்ணு தேவி, பெண் தெய்வங்கள், மகாவிஷ்ணு, 15ம் நூற்றாண்டை சேர்ந்த படி அணைப்பு யாழி, 16-17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பைரவி, 18ம் நூற்றாண்டை சேர்ந்த சூரியன், ரதி தேவதை, ராகு கேது ஆகிய சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.


Thanjavur Museum: விட போறாங்க லீவு... புறப்படலாமா டூரு... காத்திருக்குது உங்களுக்காக தஞ்சாவூரு!!!

இதனை தஞ்சைக்கு வரும் சுற்றுலா பயணிகள் காண வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் மொத்தமாக 15-க்கும் மேற்பட்ட சிலைகள் இடம் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த அருங்காட்சியகம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்த்து வருகிறது. ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு விதமான பொக்கிஷங்களை பார்ப்பது போல் உள்ளது. 7டி திரையரங்கம் தஞ்சையில் முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. பறவைகள் பூங்காவும் மனதை லயக்க செய்கிறது. இந்த அருங்காட்சியகத்தில் நவதானியங்கள், ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்ட பெரிய கோவில் மாதிரிகள் உள்ளன. பல மாவட்டங்களில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால உலோக சிற்ப காட்சியகம், கற்சிற்ப காட்சியகம், சரஸ்வதி மஹால் நுாலக காட்சியகம், '7டி' திரையரங்கம் உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டுள்ளது.

தஞ்சையில் நிறைய சுற்றுலா தலங்கள் இருந்தாலும் இது மேலும் சிறப்பாக இருக்கிறது. வாங்க ஒரு விசிட்டை அடியுங்கள். குழந்தைகளுக்கும் சிறந்த சுற்றுலாவாக இது அமையும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சாதி பார்ப்பவர்கள் சனாதனவாதி அல்ல" அடித்து சொல்லும் தமிழ்நாடு ஆளுநர் ரவி!
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்
TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLANArun IPS Transfer Order : 24 INSPECTOR-கள் TRANSFER..ஒரே நேரத்தில் பறந்த ஆர்டர்! அருண் IPS வார்னிங்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சாதி பார்ப்பவர்கள் சனாதனவாதி அல்ல" அடித்து சொல்லும் தமிழ்நாடு ஆளுநர் ரவி!
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்
TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்
"ஈரான் அணு ஆயுதங்கள் மீது தாக்குதல் நடத்துங்க" ஐடியா கொடுத்த டிரம்ப்.. பேரழிவை நோக்கி இஸ்ரேல்?
இசிஆரில் கொடூரம்.... தோழி உயிரை காவு வாங்கிய பேருந்து... பயத்தில் இளைஞர் தற்கொலை
இசிஆரில் கொடூரம்.... தோழி உயிரை காவு வாங்கிய பேருந்து... பயத்தில் இளைஞர் தற்கொலை
சாம்சங் தொழிலாளர்களுக்காக களத்தில் குதித்த கம்யூனிஸ்டுகள்.. கைது செய்த காவல்துறை!
சாம்சங் தொழிலாளர்களுக்காக களத்தில் குதித்த கம்யூனிஸ்டுகள்.. கைது செய்த காவல்துறை!
இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும் - மருத்துவர் ராமதாஸ்
இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும் - மருத்துவர் ராமதாஸ்
Embed widget