மேலும் அறிய

எதிர்ப்பு காட்டும் ட்விட்டர்... தடை செய்ய இந்தியா முடிவு?

இந்தியாவில் ட்விட்டர் நிறுவனத்தின் எதிர்காலம் தொடர்பாக மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 25ஆம் தேதி முதல் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் அமலுக்கு வந்தன. இதை முதலில் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் ஏற்க மறுத்தன. பின்னர் ஃபேஸ்புக் நிறுவனம் புதிய விதிகளை ஏற்று கொள்வதாக கூறி மத்திய அரசிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. எனினும் ட்விட்டர் நிறுவனம் மட்டும் புதிய விதிகளை இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை. 

இந்நிலையில் இந்தியாவில் ட்விட்டர் நிறுவனத்தின் எதிர்காலம் குறித்து மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஏபிபி ஆங்கில தளத்திற்கு அவர் பேட்டியளித்துள்ளார். அதில், "ஒரு நாட்டில் நீங்கள் தொழில் செய்ய வேண்டும் என்றால் அந்த நாட்டில் உள்ள அரசியலமைப்பு சட்டங்கள் மற்றும் பிற சட்டங்களையும் ஏற்று நடக்க வேண்டும். அப்படி மதிக்கவில்லை என்றால் நாட்டில் தொழில் செய்ய கூடாது. இந்தப் புதிய விதிகள் தொடர்பாக பல விமர்சனங்கள் வருகிறது. அதை நாங்கள் தற்போது கேட்க தயாராக இல்லை.


எதிர்ப்பு காட்டும் ட்விட்டர்... தடை செய்ய இந்தியா முடிவு?

புதிய விதிகளை ஏற்க முடியாது; ட்விட்டர் அறிவிப்பு

ட்விட்டர் நிறுவனம் இந்தியாவில் 9 கோடி வாடிக்கையாளர்களுக்கு மேல் வைத்துள்ளது. ஆகவே இந்த நிறுவனம் இந்தியாவில் செயல்பட மத்திய அரசின் விதிகளை ஏற்று நடக்க வேண்டும். இந்திய அரசு தனிநபரின் தகவல்கள் எப்போதும் கேட்காது. ஆனால் தீவிரவாதம், பெண்களுக்கு எதிரான குற்றம் ஆகியவற்றை செய்பவர்களின் செய்திகளை மற்றும் தகவல்களை தான் படிக்கும். ஒரு ஜனநாயக நாட்டில் இருப்பதால் நீங்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்ய முடியாது. ஜனநாயக நாட்டிலும் ஒரு சில விதிகளுக்கு கட்டுப்பட்டு தான் நடக்க வேண்டும். அமெரிக்காவில் எப்படி விதிகளை பின்பற்றி தொழில் செய்கிறார்களோ அதேபோன்று தான் இந்தியாவிலும் விதிகளை ஏற்று தொழில் செய்ய வேண்டும்.

ட்விட்டர் நிறுவனம் புதிய விதிகளுக்கு ஏற்ப ஒரு வழக்கறிஞரை நியமித்துள்ளது. ஆனால் இது விதிகளுக்கு எதிரானது. ஏனென்றால் புதிய விதிகளின்படி நிறுவனத்தில் பணியாற்றுபவர் தான் பிரதிநிதியாக இருக்க முடியும். அதை ட்விட்டர் நிர்வாகம் சரியாக செய்யவில்லை. மேலும் கடந்த வாரம் டெல்லியில் உள்ள ட்விட்டர் அலுவலகத்திற்கு காவல்துறையினர் நோட்டீஸ் கொடுக்க தான் சென்றனர். ஆனால் அவர்களிடம் இந்த நோட்டீஸை பெறாமல் இவற்றை அமெரிக்க அலுவலகம் தான் பார்த்து கொள்ளும் என்று ட்விட்டர் தெரிவித்துள்ளது. ட்விட்டர் நிறுவனம் நம் நாட்டின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை ஏற்கவில்லை என்றால் அந்த விவகாரம் தொடர்பாக அரசு ஆலோசித்து ஒரு முடிவை எடுக்கும். அப்போது அரசு எடுக்கும் முடிவை ட்விட்டர் நிறுவனம் ஏற்று தான் ஆகவேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். 

வாட்ஸ் அப் - மத்திய அரசு போட்டா போட்டி: குழப்பத்தில் சிக்கித்தவிக்கும் பயனாளர்கள்!

தலைப்பு செய்திகள்

US Iran Deal: “ஒப்பந்தம் போட நானா தீவிரமா இருந்தேன்.? உனக்கு ஒரு பைசா கூட கிடையாது“: மொஜ்தபாவை விளாசிய ட்ரம்ப்
“ஒப்பந்தம் போட நானா தீவிரமா இருந்தேன்.? உனக்கு ஒரு பைசா கூட கிடையாது“: மொஜ்தபாவை விளாசிய ட்ரம்ப்
TN Rain: சென்னையில் இன்று மழை பெய்யுமா? 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை; மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை
சென்னையில் இன்று மழை பெய்யுமா? 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை; மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை
கோயில் நிதி மூலம் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ரத்து.. ரூ.246 கோடியை மிச்சப்படுத்திய தவெக.. குவியும் பாராட்டு!
கோயில் நிதி மூலம் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ரத்து.. ரூ.246 கோடியை மிச்சப்படுத்திய தவெக.. குவியும் பாராட்டு!
தனக்கு வேண்டியவர்களுக்கு போஸ்டிங்.. தொடரும் அடுத்த சர்ச்சை.. முதல்வர் விஜய் மீது குற்றச்சாட்டு!
தனக்கு வேண்டியவர்களுக்கு போஸ்டிங்.. தொடரும் அடுத்த சர்ச்சை.. முதல்வர் விஜய் மீது குற்றச்சாட்டு!

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran Deal: “ஒப்பந்தம் போட நானா தீவிரமா இருந்தேன்.? உனக்கு ஒரு பைசா கூட கிடையாது“: மொஜ்தபாவை விளாசிய ட்ரம்ப்
“ஒப்பந்தம் போட நானா தீவிரமா இருந்தேன்.? உனக்கு ஒரு பைசா கூட கிடையாது“: மொஜ்தபாவை விளாசிய ட்ரம்ப்
TN Rain: சென்னையில் இன்று மழை பெய்யுமா? 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை; மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை
சென்னையில் இன்று மழை பெய்யுமா? 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை; மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை
கோயில் நிதி மூலம் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ரத்து.. ரூ.246 கோடியை மிச்சப்படுத்திய தவெக.. குவியும் பாராட்டு!
கோயில் நிதி மூலம் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ரத்து.. ரூ.246 கோடியை மிச்சப்படுத்திய தவெக.. குவியும் பாராட்டு!
தனக்கு வேண்டியவர்களுக்கு போஸ்டிங்.. தொடரும் அடுத்த சர்ச்சை.. முதல்வர் விஜய் மீது குற்றச்சாட்டு!
தனக்கு வேண்டியவர்களுக்கு போஸ்டிங்.. தொடரும் அடுத்த சர்ச்சை.. முதல்வர் விஜய் மீது குற்றச்சாட்டு!
Udhayanidhi Stalin: தவெக அரசு இதை கண்டிப்பா பண்ணுங்க.. விஜய்க்கு பறந்த வேண்டுகோள்.. உதயநிதி சொல்வது என்ன?
Udhayanidhi Stalin: தவெக அரசு இதை கண்டிப்பா பண்ணுங்க.. விஜய்க்கு பறந்த வேண்டுகோள்.. உதயநிதி சொல்வது என்ன?
Mekedatu Dam: உங்க பார்வை தான் சரியில்ல.. மேகதாது விவாகரத்தில் வானதி - மாணிக்கம் தாகூர் மோதல்!
Mekedatu Dam: உங்க பார்வை தான் சரியில்ல.. மேகதாது விவாகரத்தில் வானதி - மாணிக்கம் தாகூர் மோதல்!
சென்னை ; வாடகை வீட்டில் இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் - பெண் கைது
சென்னை ; வாடகை வீட்டில் இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் - பெண் கைது
தொடரும் சோகம்; சேலத்தில் நீட் மறுதேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை- விடிவு எப்போது?
தொடரும் சோகம்; சேலத்தில் நீட் மறுதேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை- விடிவு எப்போது?
Embed widget