மேலும் அறிய

5G: ஆப்பிள் வாடிக்கையாளரா நீங்க ? அப்போ ஒரு குட் நியூஸ் உங்களுக்கு.. நிறுவனம் வெளியிட்ட தகவல்

இந்தியாவில் 5G நெட்வொர்க்கிற்கான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மென்பொருள் மேம்படுத்தல்களை (software update) ஆப்பிள் தனது பயனர்களுக்கு அடுத்த வாரம் முதல் வெளியிடும்.

இந்தியாவில் 5G நெட்வொர்க்கிற்கான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மென்பொருள் மேம்படுத்தல்களை (software update) ஆப்பிள் தனது பயனர்களுக்கு அடுத்த வாரம் முதல் வெளியிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆப்பிள் அதன் iOS 16 பீட்டா மென்பொருள் புதுப்பிப்பை வெளியிடும் போது இந்த சேவை கிடைக்கும். ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் iPhone 14, iPhone 13, iPhone 12 மற்றும் iPhone SE (3வது தலைமுறை) மாடல்களில் ஆப்பிளின் பீட்டா மென்பொருள் திட்டத்தைப் பயன்படுத்தி 5G சேவையை பெற முடியும்.

ஆப்பிள் பீட்டா மென்பொருள் திட்டமானது  தகுந்த  ஆப்பிள் ஐடியைக் கொண்டவர்கள்,  ஆப்பிள் பீட்டா மென்பொருள் பயன்படுத்தலாம். ஆப்பிள் பீட்டா மென்பொருள் திட்ட பயனர்கள் அந்த மென்பொருள் அதிகாரபூர்வமாக வெளிவரும் முன்னே அதில் இருக்கும் சிறப்பு அம்சங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். Apple features பயன்பாட்டை கண்டறிய அந்த நிறுவனம் பயனாளர்களை அழைத்து நிறை குறைகளை  கேட்டறிந்து அதற்கேற்றவாறு வடிவமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Apple Beta மென்பொருள் நிரலை அணுக, iPhone பயனர்கள் Airtel மற்றும் Jioவில் இருக்கும்  பொது பீட்டாக்களையும், அடுத்த வாரம் கிடைக்கும் 5G பீட்டா உள்ளிட்ட அடுத்தடுத்த updates கொடுத்து பெறலாம்.  ஆப்பிள் பீட்டா மென்பொருள் திட்டத்தின் உறுப்பினராக இருந்தால்  iPhone, iPad, Mac, Apple TV, HomePod mini அல்லது Apple Watchல் பதிவுசெய்து, அணுக முடியும். ஐபோன் பயனர்களுக்கு நிரல் மற்றும் மென்பொருள் (program and software) இரண்டும் இலவசம் என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது. இந்த திட்டம் தன்னார்வமானது மற்றும் பங்கேற்பதற்கு எந்த கட்டணமும் இல்லை. 

இந்தியாவில் அக்டோபர் 1ஆம் தேதி 5ஜி சேவையை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக அக்டோபரில், ஆப்பிள் நிறுவன அறிக்கையில், "நெட்வொர்க் சரிபார்ப்பு மற்றும் தரம் மற்றும் செயல்திறனுக்கான சோதனை முடிந்தவுடன், ஐபோன் பயனர்களுக்கு சிறந்த 5G அனுபவத்தை வழங்க, இந்தியாவில் உள்ள எங்கள் பங்குதாரர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். 5G மென்பொருள் டிசம்பரில் ஐபோன் பயனர்களுக்கு பயண்பாட்டிற்க்கு வெளிவரத் தொடங்கும் " என்று கூறியிருந்தது.

 ஐபோன் தயாரிப்பாளரின் இந்த நடவடிக்கையானது தொலைத்தொடர்புத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மொபைல் போன் தயாரிப்பாளர்கள் மற்றும் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களை 5G தொடர்பான மென்பொருளைப் புதுப்பிப்பதற்கும், தேவையான உள்கட்டமைப்பை விரைவாக வெளியிடுவதற்கும் அறிவித்த  பின்னர் வந்துள்ளது.  அக்டோபர் 1ம் தேதி டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற 6வது இந்திய மொபைல் கூட்டமைப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவையை தொடங்கி வைத்தார். 

2 ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் 5ஜி சேவையை வழங்க மத்திய அரசு உத்தேசித்துள்ளது என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்தார். ஆகஸ்ட் மாதத்தில் அரசாங்கம் தொலைத்தொடர்பு சேவை வழங்குபவர்களுக்கு  அலைக்கற்றை ஒதுக்கீடு வழங்கியது. அக்டோபரில், பார்தி ஏர்டெல் நிறுவனம் டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், சிலிகுரி, நாக்பூர் மற்றும் வாரணாசி ஆகிய எட்டு நகரங்களில் "ஏர்டெல் 5ஜி பிளஸ்" சேவையை அறிமுகப்படுத்தியதாகவும், 2023 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதையும் உள்ளடக்கும் என்றும் கூறியிருந்தது. 

சந்தை ஆராய்ச்சி நிறுவனமான IDC இன் கூற்றுப்படி, 2020 முதல் 2022 முதல் பாதி வரை 5.1 கோடி 5G ஸ்மார்ட்போன்கள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும் அவை 2023 ஆம் ஆண்டில் 50 சதவீத சந்தைப் பங்கைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை போன்ற பல முக்கிய நகரங்களில் இந்த ஆண்டு தீபாவளிக்குள் அதிவேக 5G தொலைத்தொடர்பு சேவைகளை அறிமுகப்படுத்துவதாக ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு நகரங்கள், தாலுகாக்களில் 5G நெட்வொர்க்கை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

 "Samsung... 5Gயில் 27 மாடல்கள் இருப்பதாகவும். 16 மாடல்கள் ஏற்கனவே தயாராக உள்ளன மற்றும் இயக்கப்பட்டுள்ளன. மீதம் நவம்பர் 10-12க்குள் தயார்செய்யப்படும். OnePlus அனைத்து 17 மாடல்களும், Vivo அனைத்து 34 மாடல்களும், Realme அனைத்து 34 மாடல்களும் எங்கள் நெட்வொர்க்கில் வேலை செய்யும். Xiaomiயின் அனைத்து 33 மாடல்களும், Oppo அனைத்து 14 மாடல்களும் வேலை செய்யும். ஆப்பிள் நிறுவனத்திடம் 13 மாடல்கள் உள்ளன. நவம்பர் முதல் வாரத்தில் (மென்பொருள் புதுப்பிப்பு) வெளியிடப்படும், டிசம்பர் நடுப்பகுதியில் அவை அனைத்தும் தயாராக இருக்க வேண்டும்" என்று பாரதி ஏர்டெல் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான கோபால் விட்டல் தெரிவித்தார். 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
TATA Sierra Bookings: மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
Embed widget