மேலும் அறிய

TENNIS: கொரோனா தடுப்பூசி விவகாரம்: கொள்கையில் விடாப்பிடியாக இருந்த ஜோகோவிச்.. இறங்கி வந்த ஆஸ்திரேலியா?

உலகின் முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான ஜோகோவிச் மீண்டும் தங்கள் நாட்டிற்கு வர ஆஸ்திரேலியா அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச் 21 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று, உலகின் முன்னணி நட்சத்திர வீரராக வலம் வருகிறார்.  ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் 9 முறை சாம்பியன் பட்டம் வென்ற அவர், இளம் வீரர்கள் பலருக்கும் ரோல் மாடலாக திகழ்கிறார். இந்நிலையில், நடப்பாண்டு ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் பங்கேற்பதற்காக அந்நாட்டிற்கு சென்ற ஜோகோவிச்சிற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

விளையாட்டு உலகில் பெரும் சர்ச்சையை கிளப்பிய இந்த சம்பவத்திற்கு காரணம், ஜோகோவிச் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுத்ததே ஆகும். தனக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள விருப்பமில்லை என விடாப்பிடியாக கூற, ஆஸ்திரேலிய அரசோ தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிட்டால் தொடரில் பங்கேற்க முடியாது என திட்டவட்டமாக கூறி விட்டது. கொரோனாவால் ஆஸ்திரேலிய மக்கள் பல இழப்புகளை சந்தித்த நிலையில், தடுப்பூசி செலுத்தாமல் ஜோகோவிச்சை அனுமதித்து, ஆபத்தை எதிர்கொள்ள முடியாது என கூறி, அவர் தனிமைப்படுத்தப்பட்டார். பல்வேறு சட்டப்போராட்டங்களுக்கு பிறகும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாமா, வேண்டாமா என்பது தனது தனிப்பட்ட விருப்பம் என்ற முடிவில் ஜோகோவிச் நிலையாக இருந்தார்.

இதையடுத்து தங்கள் நாட்டு மக்களின் நலன் கருதி ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், ஜோகோவிச் விளையாட அனுமதிக்க முடியாது என கூறி, அவரை அந்நாட்டை விட்டே ஆஸ்திரேலிய அரசு வெளியேற்றியது. மேலும், 2025ம் ஆண்டு வரையில் ஜோகோவிச் ஆஸ்திரேலியாவிற்குள் வரவும் தடை விதிக்கப்பட்டது. இதனால், நடப்பாண்டு ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச் பங்கேற்க முடியாமல் போனதால்,  அவரது ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.

 

இந்நிலையில், கொரோனா தொற்று அடங்கி ஆஸ்திரேலியாவில் இயல்புநிலை திரும்பியுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டு அரசும் கொரோனா கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் கட்டாய தடுப்பூசி விவகாரத்தில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக, ஜோகோவிச்சும் சமீபத்தில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தகக்து.

இந்நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 16ம் தேதி தொடங்கி, 29ம் தேதி வரையில் நடைபெற உள்ள ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க, ஜோகோவிச்சிற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2025ம் ஆண்டு வரையில் அவர் ஆஸ்திரேலியாவிற்குள் வர விதிக்கப்பட்டு இருந்த தடையும், திரும்பப் பெறப்பட்டுள்ளதாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச் பங்கேற்பார் என அவரது ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

இதனிடையே, சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற பாரீஸ் மாஸ்டர்ஸ் 1000 ஏடிபி டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில், ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வியடைந்தார். அவர் எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டென்மார்க்கை சேர்ந்த holger rune என்ற 19 வயது வீரரிடம் 3-6,6-3,7-5 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் தோல்வியை தழுவினார்.

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah: வங்கக் கடலில் உருவானது ‘டிட்வா‘ புயல்; தமிழகத்தை நோக்கி நகரும் என வானிலை மையம் அறிவிப்பு
வங்கக் கடலில் உருவானது ‘டிட்வா‘ புயல்; தமிழகத்தை நோக்கி நகரும் என வானிலை மையம் அறிவிப்பு
TN RED ALERT: ரெட் அலர்ட்... உடனே இந்த 12 மாவட்டங்களுக்கு செல்லுங்க- ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
ரெட் அலர்ட்... உடனே இந்த 12 மாவட்டங்களுக்கு செல்லுங்க- ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
Sengottaiyan: தவெகவில் இணைந்ததற்கு இது தான் காரணம்.! இளவல் விஜய் தலைமையில் ஆட்சி- செங்கோட்டையன் அதிரடி
தவெகவில் இணைந்ததற்கு இது தான் காரணம்.! இளவல் விஜய் தலைமையில் ஆட்சி- செங்கோட்டையன் அதிரடி
Karthigai Deepam: ரேவதியை காப்பாற்றிய கெளசல்யா.. கார்த்தியை மிரட்டும் காளியம்மாள் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதியை காப்பாற்றிய கெளசல்யா.. கார்த்தியை மிரட்டும் காளியம்மாள் - கார்த்திகை தீபத்தில் இன்று
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva
ஒரே நொடியில் பறிபோன உயிர் இந்திய வீரர் உயிரிழப்பு பரபரப்பு CCTV காட்சி | Volley Ball Player Hardik Death
தவெகவில் செங்கோட்டையன் பாஜகவின் SLEEPER CELL விஜய்யை காலி செய்ய திட்டமா? | Sengottaiyan Vs TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah: வங்கக் கடலில் உருவானது ‘டிட்வா‘ புயல்; தமிழகத்தை நோக்கி நகரும் என வானிலை மையம் அறிவிப்பு
வங்கக் கடலில் உருவானது ‘டிட்வா‘ புயல்; தமிழகத்தை நோக்கி நகரும் என வானிலை மையம் அறிவிப்பு
TN RED ALERT: ரெட் அலர்ட்... உடனே இந்த 12 மாவட்டங்களுக்கு செல்லுங்க- ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
ரெட் அலர்ட்... உடனே இந்த 12 மாவட்டங்களுக்கு செல்லுங்க- ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
Sengottaiyan: தவெகவில் இணைந்ததற்கு இது தான் காரணம்.! இளவல் விஜய் தலைமையில் ஆட்சி- செங்கோட்டையன் அதிரடி
தவெகவில் இணைந்ததற்கு இது தான் காரணம்.! இளவல் விஜய் தலைமையில் ஆட்சி- செங்கோட்டையன் அதிரடி
Karthigai Deepam: ரேவதியை காப்பாற்றிய கெளசல்யா.. கார்த்தியை மிரட்டும் காளியம்மாள் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதியை காப்பாற்றிய கெளசல்யா.. கார்த்தியை மிரட்டும் காளியம்மாள் - கார்த்திகை தீபத்தில் இன்று
Sengottaiyan joined TVK: ஜெ. படத்தை தூக்கி போட்ட செங்கோட்டையன்.? பாக்கெட்டில் ஜொலிக்கும் விஜய் படம்
ஜெ. படத்தை தூக்கி போட்ட செங்கோட்டையன்.? பாக்கெட்டில் ஜொலிக்கும் விஜய் படம்
Parijatham: இசையைத் தீர்த்துக்கட்ட ஸ்ரீஜா தந்தை திட்டமா? பாரிஜாதத்தில் இன்று
Parijatham: இசையைத் தீர்த்துக்கட்ட ஸ்ரீஜா தந்தை திட்டமா? பாரிஜாதத்தில் இன்று
தஞ்சாவூரில் ஆசிரியை படுகொலை!  தமிழ்நாட்டில் யாருடைய உயிருக்கும் உத்தரவாதம் இல்லை;அன்புமணி ராமதாஸ் கண்டனம்
தஞ்சாவூரில் ஆசிரியை படுகொலை! தமிழ்நாட்டில் யாருடைய உயிருக்கும் உத்தரவாதம் இல்லை;அன்புமணி ராமதாஸ் கண்டனம்
Sengottaiyan: விஜய் கட்சியில் ஜெயலலிதாவின் தளபதி செங்கோட்டையன்... கொங்கு மண்டலத்தில் கெத்து காட்டும் தவெக
விஜய் கட்சியில் ஜெயலலிதாவின் தளபதி செங்கோட்டையன்... கொங்கு மண்டலத்தில் கெத்து காட்டும் தவெக
Embed widget