மேலும் அறிய

Ind vs Eng 4th Test: கோலாகலப்படுத்திய கோலி படை....இங்கி., படுதோல்வி... 50 ஆண்டுகளுக்கு பின் இந்தியா இமாலய வெற்றி!

இதுவரை, ஓவல் மைதானத்தில் ஒரே ஒரு போட்டியில் மட்டும்தான் வெற்றி பெற்றுள்ளது. 1971-ம் ஆண்டுக்குப் பிறகு, கோலி தலைமையிலான இந்திய அணி போட்டியை வென்று அசத்தியுள்ளது. 

ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், 157 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி போட்டியை வென்றுள்ளது. இதுவரை, ஓவல் மைதானத்தில் இந்திய அணி விளையாடியுள்ள 13 டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டும்தான் வெற்றி பெற்றுள்ளது. 1971-ம் ஆண்டுக்குப் பிறகு, சரியாக 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஓவல் மைதானத்தில் கோலி தலைமையிலான இந்திய அணி போட்டியை வென்று அசத்தியுள்ளது. இதனால், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. 

நான்கு நாள் ஆட்டம், சுருக்கமாக:

இந்தியா விளையாடிய இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில், இங்கிலாந்து அணிக்கு 368 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. முதல் இன்னிங்ஸில் 99 ரன்கள் பின்தங்கிய இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 466 ரன்கள் குவித்தது. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி இருந்த இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பு ஏதுமின்றி 77 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி நாளான இன்று, வெற்றி பெற இங்கிலாந்து அணிக்கு 291 ரன்கள் தேவைப்பட்டது. 

இந்திய பந்துவீச்சாளர்களின் பர்ஃபாமென்ஸ்

இந்நிலையில், ஐந்தாவது நாள் ஆட்டம் தொடக்கத்தில் இருந்து இங்கிலாந்து ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் பர்ன்ஸ் மற்றும் ஹசீப் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இங்கிலாந்து அணி 100 ரன்களை எடுத்தபோது, பர்ன்ஸ் ஷர்துல் தாகூரின் பந்துவீச்சில் அவுட்டானார். அரை சதம் கடதிருந்த அவர் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவரைத் தொடர்ந்து ஹசீப்பும் அரை சதம் கடந்தார். ஒன் - டவுன் களமிறங்கிய மாலன் ரன் - அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.

ஜடேஜா பந்துவீச்சில் ஹசீப் வெளியேற, பும்ரா பந்துவீச்சில் அடுத்தடுத்து போப் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோர் ஆட்டமிழந்தனர். வந்த வேகத்தில் மொயின் அலியும் டக் -அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இங்கிலாந்து அணி 100 ரன்கள் எடுத்த பிறகு அடுத்த 50 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது. ரூட், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் களத்தில் இருந்தபோது, தாகூரின் பர்ஃபெக்ட் பந்துவீச்சால் ரூட் வெளியேறினார். இங்கிலாந்தின் நம்பிக்கை பேட்ஸ்மேனான ரூட் வெளியேறியவுடன் இங்கிலாந்து வெற்றி பெறும் என்ற நம்பிக்கை தவிடுபொடியானது. ஆட்டம் ஸ்லோவானது.

இந்திய அணி பெளலர்களைப் பொருத்தவரை, ஷிஃப்ட் எடுத்து வந்து விக்கெட்டுகளை வீழ்த்திச் சென்றனர். டெயில் எண்டர்களுக்கு சவாலான டெலிவரிகளை வீசினார் உமேஷ் யாதவ். விளைவு, வோக்ஸ் மற்றும் ஓவர்டன் ஆகியோரது விக்கெட்டுகள் சிக்கின. அவரைத் தொடர்ந்து கடைசியாக களமிறங்கிய ஆண்டர்சனின் விக்கெட்டையும் எடுத்த உமேஷ், இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம், 157 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி போட்டியை வென்றுள்ளது.

வரலாறு படைத்த இந்திய அணி

ஓவல் மைதானத்தில் நான்காவது இன்னிங்சில் இலக்கை துரத்திச்சென்ற அணிகளில் அதிக ரன்களை எடுத்துள்ள அணி என்ற சாதனையை இந்திய அணி தன்வசம் வைத்துள்ளது. 1979-ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு இங்கிலாந்து அணி 438 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்திய அணி தோற்றுவிடும் என்றே அனைவரும் நினைத்த நிலையில், சுனில் கவாஸ்கரின் அற்புதமான இரட்டை சதத்தினாலும், சேட்டன் சவுகான், திலீப் வெங்கர்சகர் ஆகியோரின் அரைசதங்களின் உதவியால் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 429 ரன்களை குவித்தது. கவாஸ்கரின் 221 ரன்களால் இந்த போட்டி டிராவில் முடிந்தது.

முன்னதாக, 1971-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடியது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளும் டிராவாகவே, மூன்றாவது போட்டியை வென்று இந்தியா இங்கிலாந்துக்கு எதிரான தனது முதல் தொடரை கைப்பற்றி அசத்தியது. அப்போதைய இந்திய அணி கேப்டன் அஜித் வடேக்கர் தலைமையிலான இந்திய அணி செய்த சாதனையை இப்போது கோலி படை செய்து முடித்துள்ளது.

தலைப்பு செய்திகள்

Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
Embed widget