மேலும் அறிய

Maharashtra Police | ”அம்பேத்கரையே மதிக்கல என் வேலை போனாலும் பரவால” பாஜக அமைச்சர் vs பெண் POLICE

`அதெப்படி அம்பேத்கர் பெயரைத் தவிர்க்கலாம். என்னை சஸ்பெண்ட் செஞ்சாலும் பரவால்ல, அமைச்சர் தன்னோட தப்ப ஒத்துக்கணும்'. மகாராஷ்டிராவில் குடியரசு தின நிகழ்ச்சியில் அம்பேத்கர் பெயரை உச்சரிக்காமல் தவிர்த்த அமைச்சருக்கெதிராக பெண் போலீஸ் கோபமகாப் பேசும் வீடியோ வைரல்.

இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரான டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் தலைமையிலான வரைவு குழுவால் உருவாக்கப்பட்ட `அரசியலமைப்புச் சட்டம்' 1950 ஜனவரி 26-ம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளே ஆண்டுதோறும் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி, 77-வது குடியரசு தினம் நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது.

அதில், மகாராஷ்டிராவில் நாசிக் போலீஸ் அணிவகுப்பு மைதானத்தில் குடியரசு தின நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக-வைச் சேர்ந்த மாநில நீர்வளத்துறை அமைச்சர் கிரிஷ் மஹாஜன் தனது உரையின்போது, அரசியலமைப்பின் தந்தை அம்பேத்கரின் பெயரைக் குறிப்பிடாமல் வேறு சிலரின் குறிப்பிட்டார்.

அப்போது அங்கிருந்த வனத்துறை அதிகாரி மாதவி ஜாதவ், குடியரசு தினத்துக்கு தொடர்பில்லாதவர்களின் பெயரைக் கூறும் அமைச்சர் ஏன் அம்பேத்கர் பெயரைக் கூறவில்லை என அமைச்சருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், அந்த இடத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டதால் உடனடியாக பிற போலீஸ் அதிகாரிகள் மாதவி ஜாதவை அமைதிப்படுத்தி அவரை அங்கிருந்து நகர்த்தினர்.

இந்த நிலையில், மாதவி ஜாதவ் அமைச்சரின் செயல் குறித்து தனது சக அதிகாரிகளிடம் கோபமாகப் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த அவீடியோவில் மாதவி ஜாதவ், ``அரசியலமைப்பை உருவாக்கியவரையே அவர்கள் நீக்க முயல்கிறார்கள். ஜனநாயகத்துக்கும், அரசியலமைப்புச் சட்டத்துக்கும் சம்பந்தமில்லாதவர்களின் பெயர்கள் தொடர்ச்சியாகக் குறிப்பிட்டார். ஆனால், அரசியலமைப்பை உருவாக்கியவரை ஏன் குறிப்பிடவில்லை. அம்பேத்கர் பெயரை அமைச்சர் குறிப்பிடாதது மிகப்பெரிய தவறு. தன்னுடைய தவறை அவர் ஒப்புக்கொள்ள வேண்டும். என்னை சஸ்பெண்ட் செய்தாலும் பரவாயில்லை. ஆனால், அம்பேத்கரின் அடையாளத்தை அழிக்க விடமாட்டேன்" என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து அமைச்சருக்கு எதிராக பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து செய்தியாளர்களிடம் அமைச்சர் விளக்கமளித்தார். அப்போது, `` `பாரத் மாதா கி ஜே, 'வந்தே மாதரம்', 'சத்ரபதி சிவாஜி மகாராஜ் கி ஜே' போன்ற முழக்கங்களை நான் முழங்கினேன். அம்பேத்கரின் பெயரை வேண்டுமென்றே நான் தவிர்க்கவில்லை. இது தற்செயலாக நடந்திருக்கலாம். இதில் எனக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. இருப்பினும் அம்பேத்கர் பெயர் விடுபட்டதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று அமைச்சர் தெரிவித்தார்.

செய்திகள் வீடியோக்கள்

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கோடை வெப்பத்திற்கு ஆன்மீகத் தீர்வு! சீர்காழி ஆலஞ்சேரி அகத்தீஸ்வரர் கோயிலில் நடந்த அதிசயம்!
கோடை வெப்பத்திற்கு ஆன்மீகத் தீர்வு! சீர்காழி ஆலஞ்சேரி அகத்தீஸ்வரர் கோயிலில் நடந்த அதிசயம்!
ரயில் பயணிகளே உஷார்! திருச்சி கோட்டத்தில் அதிரடி ரயில் ரத்து மற்றும் வழிமாற்றம்!
ரயில் பயணிகளே உஷார்! திருச்சி கோட்டத்தில் அதிரடி ரயில் ரத்து மற்றும் வழிமாற்றம்!
கரூர் கூட்ட நெரிசல்: முதல்வர் வழங்கும் அரசு வேலை தற்காலிகம் - உயர் நீதிமன்றம் உத்தரவு!
கரூர் கூட்ட நெரிசல்: முதல்வர் வழங்கும் அரசு வேலை தற்காலிகம் - உயர் நீதிமன்றம் உத்தரவு!
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Udhayachandran IAS : ‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரனிடமிருந்து தொல்லியல் துறை பறிப்பு..!
‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரன் மாற்றம்..!
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
Keerthana:
Keerthana: "லஞ்சம் கொடுக்க வேண்டாம்... இதுதான் நல்லாட்சி.." முதலமைச்சர் விஜய்யைப் பாராட்டிய அமைச்சர் கீர்த்தனா
CM Vijay Speech: 5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
Embed widget