மேலும் அறிய

Pele and Indians :இந்தியர்களும் பீலேவும்; ஈடன் கார்டனில் நிகழ்ந்த அந்த ஒரு போட்டி… ட்விஸ்ட் ஆன முடிவு!

"பீலேவின் கால்பந்து ஒரு மோனாலிசாவாகவும், பீத்தோவனின் ஒன்பதாவது சிம்பொனியாகவும் திகழுமொரு பேரானந்தம்", என்று ஹிந்துஸ்தான் ஸ்டாண்டர்ட் எழுதியது.

"மிஸ்டர் பீலே என்று நீங்கள் அழைக்கப்படுவதை விரும்புகிறீர்களா?" என்று கொல்கத்தாவில் ஒரு நிருபர் தனது மூன்று நாள் பயணத்தின் போது கால்பந்து ஜாம்பவானிடம் கேட்டார், அப்போது அவர் 45 ஆண்டுகளுக்கு முன்பு தனது நட்சத்திர அணியான நியூயார்க் காஸ்மோஸ் அணியுடன் ஒரு கண்காட்சி விளையாட்டை விளையாடுவதற்காக வந்திருந்தார். அந்த கேள்விக்கு 37 வயதான பிரேசிலிய நட்சத்திரம் பீலே, "நிராயுதபாணியான புன்னகையுடன் வெடித்துச் சிரித்தார்" என்று தி ஹிந்துஸ்தான் ஸ்டாண்டர்ட் செய்தித்தாள், செப்டம்பர் 24, 1977 அன்று எழுதியது.

இந்தியாவில் பீலே

இந்தியாவில் கால்பந்து ரசிகர்கள் நிறைந்த ஈடன் கார்டன் மைதானத்தில் 60,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்களுடன் பீலே இந்தியாவில் ஆடும் முதல் ஆட்டத்தை காண நகரம் உற்சாகமாக இருந்தது. மோஹுன் பாகன், பீலே மற்றும் கவர்ச்சியான அமெரிக்க கிளப்பை நகரத்தில் விளையாடுவதற்கு கிட்டத்தட்ட 1.7 மில்லியன் ரூபாய்களை [தற்போதைய மதிப்பின்படி சுமார் $20,000] செலவிட்டதாக அந்த பத்திரிகைகள் தெரிவித்தன. அதாவது 17 லட்ச ரூபாய் வரை இருக்கும். ரசிகர்களின் ஆர்பரிப்பை கட்டுப்படுத்த 35,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். டிக்கெட்டுகளின் விலை ஐந்து முதல் 60 ரூபாய் வரை இருந்தது. பத்திரிகைகள் அவரை "கிங் பீலே" மற்றும் "தி எம்பெரர் (பேரரசர்)" என்று பலவிதமாக அழைத்தன. ஹிந்துஸ்தான் ஸ்டாண்டர்ட் இவ்வாறு எழுதியது: "பீலேவை வரலாற்றில் காலம் கடந்த ஜாம்பவான்களான லியோனார்டோ டா வின்சி மற்றும் பீத்தோவன் போன்றவர்களுடன் ஒப்பிடலாம். கால்பந்து ஆர்வலர்களுக்கு, பீலேவின் கால்பந்து ஒரு மோனாலிசாவாகவும், பீத்தோவனின் ஒன்பதாவது சிம்பொனியாகவும் திகழுமொரு பேரானந்தம்", என்று எழுதியது.

Pele and Indians :இந்தியர்களும் பீலேவும்; ஈடன் கார்டனில் நிகழ்ந்த அந்த ஒரு போட்டி… ட்விஸ்ட் ஆன முடிவு!

களைகட்டிய மைதானம்

ஆட்டம் நடைபெறும் மைதானத்திற்கு வெளியே, "லாட்டரி கூப்பன்களை" வாங்க ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பாம்புகள்வைத்து வித்தைகள் காட்டுவார்கள். ஒரு ஜோதிடர் ஸ்பாய்ஸ்போர்ட் விளையாடி, ஆட்டத்தை கணித்தார். அதில் அவர், 'பீலே காயப்படுவார், மேலும் அவர் முழு விளையாட்டிலும் விளையாட மாட்டார்' என்று கணித்தார். அவர் விமானத்தில் இருந்து இறங்குவதை பார்க்கவே ஒரு கூட்டம் கூடியதாக செய்தித்தாள்கள் எழுதின. விமான நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ரசிகர்கள் அலைந்துகொண்டிருந்தனர்.

பீலே வாழ்க என்ற கோஷம் கேட்டுக்கொண்டே இருந்தது. "விமான நிலையத்திற்கு வெளியே இந்த நேரத்தில் இவ்வளவு கூட்டத்தை நான் பார்த்ததில்லை. நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ரசிகர்கள் வந்துள்ளனர்" என்று ஆனந்த பஜார் பத்ரிகா என்ற பெங்காலி செய்தித்தாளின் நிருபர் எழுதினார். பாதுகாப்பு வளையத்தை உடைத்துக்கொண்டு போயிங் 707 விமானத்தை நோக்கி ரசிகர்கள் செல்ல, பீலே விமானத்தை விட்டு வெளியேறி ரசிகர்களுக்கு கை காட்ட கண்கொள்ளா காட்சியாக இருந்ததாக எழுதியது. காவல்துறை கூட்டத்தைக் கலைத்த பிறகுதான், பீலே மனைவி ரோஸ்மெரியுடன் வெளியேறினார். 

தொடர்புடைய செய்திகள்: Vegetables Price: மக்களே இதை கவனிங்க.. காய்கறி வரத்தில் மாற்றம்.. காய்கறி விலையிலும் மாற்றமா? இன்றைய காய்கறி விலை நிலவரம்..

குவிந்த ரசிகர்கள்

அவர் சென்ற பின்னும் கலவரம் தொடர்ந்தது, விமான நிலையத்திற்குள், பீலேவைக் காண முடியாமல் கண்ணாடிப் பலகைகளை அடித்து நொறுக்கி, காலணிகளை வீசிய ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். வெளியே, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கார் நிறுத்துமிடத்தில் சுற்றித் திரிந்தனர். கொல்கத்தாவின் மையத்தில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலுக்கு அழைத்துச் செல்ல பீலே மற்றும் காஸ்மோஸ் வீரர்களை போலீசார் பஸ்சில் ஏற்றினர். ஹோட்டல் லாபியிலும் ரசிகர்கள் குவிந்தனர். அவர் அமெரிக்க தூதரகம் மற்றும் மோஹுன் பாகன் வழங்கிய இரண்டு வரவேற்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ரோஸ்மேரி ஒரு செய்தியாளரிடம் கூறுகையில், "இந்த அன்பு கோட்டையில் நாங்கள் சிக்கிக்கொண்டோம்", என்றார். பீலே, ஈரமான மற்றும் சேறும் சகதியுமான மைதானமாக இருந்தபோதும், மோசமான வானிலை முன்னறிவிப்புகள் இருந்தபோதும், 90 நிமிடங்கள் முழுவதும் விளையாடுவதாக உறுதியளித்தார். ஆனால் நோவி கபாடியா என்னும் ஒரு கால்பந்து எழுத்தாளர், தனது புத்தகமான Barefoot to Boots: The Many Lives of Indian Football இல் வேறு மாதிரி எழுதினார், "வழுக்கும் சூழ்நிலை காரணமாக பீலே விளையாட மறுத்துவிட்டார்... போலீஸ் அதிகாரிகள் பீலேவிடம் கெஞ்சினார்கள், அவர் விளையாடாவிட்டால் நிலையை கட்டுப்படுத்த முடியாது என்று கூறினார். அதன் பிறகே பீலே இறுதியாக மனம் திரும்பி விளையாடினார், ஆனால் போட்டி முழுவதும் கவனமாகவே இருந்தார்", என்று எழுதினார்.

Pele and Indians :இந்தியர்களும் பீலேவும்; ஈடன் கார்டனில் நிகழ்ந்த அந்த ஒரு போட்டி… ட்விஸ்ட் ஆன முடிவு!

ஒரே ஆட்டத்தில் சரிந்த பிம்பம் 

மழையால் மைதானம் சேறாக இருந்ததால் ஆட்டம் அந்த அளவுக்கு ஸ்வாரஸ்யமாக போகவில்லை, பீலே-உம் முழு செயல்பாட்டை காட்டவில்லை. ஆட்டம் 2-2 என்று சமனில் முடிந்தது. பீலே மைதானத்தை விட்டு வெளியேறியதும் அங்கு அமைதி நிலவியதாக அந்த ஆவணங்கள் தெரிவித்தன. பீலே மீதான கொல்கத்தாவின் வெறித்தனமான காதல் குறையத் துவங்கியதாக ஒரு செய்தியின் தலைப்பு கூறியது, "பீலே வயதாகிவிட்டார் என்பது தெளிவாகிறது" என்று எழுதினர்.

பீலே மீதான வெறி விரைவாக ஆவியாகிவிட்டது. அவரது ஹோட்டலுக்கு வெளியே கூட்டம் குறைந்தது. ரசிகர் ஒருவர் ஆளும் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் அமைச்சரிடம் "போலி பீலே கல்கத்தாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளார்" என்று கூறினார். ஒரு கம்யூனிஸ்ட் எம்.பி அதே அமைச்சரிடம், "விளையாட்டுக்கான டிக்கெட் பணத்தை நீங்கள் திருப்பித் தர வேண்டும்", என்றார். அந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பீலே நியூயார்க்கிற்குப் புறப்பட்டபோது, விமான நிலையத்தில் கூட்டம் இல்லை. "தி கிங்ஸ் டிப்ரஸ்ஸிங் டிபார்ச்சர்" என்ற தலைப்பில் ஒரு செய்தித்தாளில் செய்தி வந்தது. ரசிகர்களின் உற்சாகம் குறைந்துவிட்டது. சந்தோஷ் குமார் கோஷ் என்ற ஒரு மூத்த பத்திரிகையாளர், பீலே மற்றும் காஸ்மோஸுக்கு செலவழித்த பணத்தின் ஒரு பகுதியை கொண்டு "நகரத்தின் பல சாலைகளை அழகுபடுத்தியிருக்கலாம்" என்றார். "காஸ்மோஸ் வீரர்கள் தங்கள் திறனில் 25% கூட வழங்கவில்லை மற்றும் நேரத்தை கடத்துவதிலேயே திருப்தி அடைந்தனர்," என்று ஒரு செய்தித்தாள் எழுதியது. "அவர்களின் நோக்கம் நிறைவேறியது. ஏழை இந்தியர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் அவர்கள் வாழ்ந்துவிட்டனர்", என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

FasTag Rules: இன்று முதல் ஆப்பு, இரட்டிப்பு அபராதம் - அமலுக்கு வந்த ஃபாஸ்டேக் விதிமுறைகள், செய்யக்கூடாதவை..!
FasTag Rules: இன்று முதல் ஆப்பு, இரட்டிப்பு அபராதம் - அமலுக்கு வந்த ஃபாஸ்டேக் விதிமுறைகள், செய்யக்கூடாதவை..!
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
"திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி இருக்கே" கொதித்த வானதி சீனிவாசன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
FasTag Rules: இன்று முதல் ஆப்பு, இரட்டிப்பு அபராதம் - அமலுக்கு வந்த ஃபாஸ்டேக் விதிமுறைகள், செய்யக்கூடாதவை..!
FasTag Rules: இன்று முதல் ஆப்பு, இரட்டிப்பு அபராதம் - அமலுக்கு வந்த ஃபாஸ்டேக் விதிமுறைகள், செய்யக்கூடாதவை..!
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
"திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி இருக்கே" கொதித்த வானதி சீனிவாசன்!
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
இந்திய அணிக்குள் மோதல்! கம்பீர் - அகர்கர் இடையே கட்டப்பஞ்சாயத்து - காரணம் என்ன?
இந்திய அணிக்குள் மோதல்! கம்பீர் - அகர்கர் இடையே கட்டப்பஞ்சாயத்து - காரணம் என்ன?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.