மேலும் அறிய

FIFA World Cup: திடீரென விலகிய ஆஸ்திரேலியா.. 2034 உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தபோகும் சவுதி அரேபியா!

2034ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் உரிமையானது சவுதி அரேபியாவுக்கு கிடைத்தது. 

2033 பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியை அவுதி அரேபியா நடத்தும் என்று பிஃபா தலைவர் கியானி இன்ஃபாண்டினோ அறிவித்துள்ளார். 

வருகின்ற 2034ம் ஆண்டுக்காக உலகக் கோப்பையை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா நாடுகள் ஆர்வம் காட்டின. இந்தநிலையில், போட்டிக்கான உரிமத்தை பெறும் நடவடிக்கையில் இருந்து ஆஸ்திரேலியா நேற்று விலகியது. இதன் காரணமாக, 2034ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் உரிமையானது சவுதி அரேபியாவுக்கு கிடைத்தது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gianni Infantino - FIFA President (@gianni_infantino)

உலகக் கோப்பையின் அடுத்த பதிப்பு வருகின்ற 2026 ம் ஆண்டு வட அமெரிக்க நாடுகளான கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் நடைபெறும். 2030 ம் ஆண்டு ஆப்பிரிக்கா (மொராக்கோ) மற்றும் ஐரோப்பா (போர்ச்சுகல், ஸ்பெயின்) உலகக் கோப்பையை நடத்தும். இதன் ஒரு பகுதியாக அர்ஜென்டினா, பராகுவே, உருகுவே போன்ற தென் அமெரிக்க நாடுகளில் தொடக்கப் போட்டிகள் நடைபெறவுள்ளன. 

இதுகுறித்து, ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ மூன்று பதிப்புகள், ஐந்து கண்டங்கள், போட்டிகளை பத்து நாடுகள் நடத்துகிறது - இது கால்பந்தை உண்மையில் உலகளாவிய விளையாட்டாக மாற்றுகிறது” என பதிவிட்டு இருந்தார். 

அக்டோபர் முதல் வாரத்தில் உலகக் கோப்பையை நடத்த ஆசியா மற்றும் ஓசியானியா நாடுகளை ஃபிஃபா அழைத்த பிறகு, சவுதி அரேபியா தனது விருப்பத்தை வெளிப்படுத்தியது. சவுதி அரேபியாவைத் தவிர ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா ஆகிய நாடுகள் உலகக் கோப்பை போட்டி நடைபெறும் இடத்திற்கான போட்டியில் இருந்தன. இந்த ஆண்டு மகளிர் உலகக் கோப்பை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்றது.

கடந்த ஆண்டு உலகக் கோப்பை போட்டி சவுதி அரேபியாவின் அண்டை நாடான கத்தாரில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் பிரான்ஸை வீழ்த்தி அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் வென்றது. உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவை வீழ்த்தி கால்பந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது சவுதி அரேபிய அணி. சவுதி ஒன்றுக்கு எதிராக இரண்டு கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மற்ற இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த சவுதி, குரூப் சியில் கடைசி இடமாக கத்தாரில் இருந்து திரும்பியது.

முன்னதாக, 2030 ஆண்கள் உலகக் கோப்பை போட்டியின் முதல் பதிப்பின் 100 ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்காக மூன்று வெவ்வேறு கண்டங்களில் உள்ள ஆறு நாடுகளால் நடத்தப்படும் என்று பிபா அறிவித்திருந்தது. அதன்படி, ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகள் இணைந்து போட்டியை நடத்துகின்றன, அதே நேரத்தில் உருகுவே, பராகுவே மற்றும் அர்ஜென்டினா ஆகியவை முதல் உலகக் கோப்பை அரங்கேறி 100 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் தலா ஒரு தொடக்க ஆட்டத்தை நடத்தும். 1930 போட்டியை உருகுவே நடத்தி வெற்றி பெற்றது.

கடந்த 2022 ம் ஆண்டு கத்தாரின் தோஹாவில் நடந்த இறுதிப் போட்டியில் பிரான்சை பெனால்டியில் வீழ்த்தி கோப்பையை வென்றது. இப்போட்டியில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது இது மூன்றாவது முறையாகும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Power Cut: சென்னை மக்களே! நாளை (27.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Chennai Power Cut: சென்னை மக்களே! நாளை (27.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Delhi Election 2025: காலண்டருக்குள் ரூ.500 வைத்து ஆம் ஆத்மி விநியோகம்.! தேர்தல் ஆணையத்துக்குச் சென்ற பாஜக.!
Delhi Election 2025: காலண்டருக்குள் ரூ.500 வைத்து ஆம் ஆத்மி விநியோகம்.! தேர்தல் ஆணையத்துக்குச் சென்ற பாஜக.!
‘குறைந்தது 3 குழந்தைகளையாவது பெற்றெடுங்கள்’ – இந்துக்களை வலியுறுத்தும் விஸ்வ இந்து பரிஷத்!
‘குறைந்தது 3 குழந்தைகளையாவது பெற்றெடுங்கள்’ – இந்துக்களை வலியுறுத்தும் விஸ்வ இந்து பரிஷத்!
கேள்வி எழும்போது விசாரணை செய்யுங்கள்! - வேங்கை வயல் விவகாரத்தில் விஜய் ஆவேசம்
கேள்வி எழும்போது விசாரணை செய்யுங்கள்! - வேங்கை வயல் விவகாரத்தில் விஜய் ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தனி ரூட்டில் வானதி, நயினார்! அப்செட்டில் அண்ணாமலை! பாஜகவில் வெடிக்கும் சர்ச்சை”திரும்ப விசாரணை நடத்துங்க! குறையே இருக்க கூடாது”வேங்கைவயல்- விஜய் போர்க்கொடிAjithkumar award: அஜித்திற்கு Padma Bhushan.. பின்னணியில்  இருக்கும் அரசியல்! விஜய் தான் காரணமா?TN BJP LEADER : ’அண்ணாமலையை தூக்குங்க’’கண்டிசன் போட்ட EPS..நயினாருக்கு அடித்த JACKPOT

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Power Cut: சென்னை மக்களே! நாளை (27.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Chennai Power Cut: சென்னை மக்களே! நாளை (27.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Delhi Election 2025: காலண்டருக்குள் ரூ.500 வைத்து ஆம் ஆத்மி விநியோகம்.! தேர்தல் ஆணையத்துக்குச் சென்ற பாஜக.!
Delhi Election 2025: காலண்டருக்குள் ரூ.500 வைத்து ஆம் ஆத்மி விநியோகம்.! தேர்தல் ஆணையத்துக்குச் சென்ற பாஜக.!
‘குறைந்தது 3 குழந்தைகளையாவது பெற்றெடுங்கள்’ – இந்துக்களை வலியுறுத்தும் விஸ்வ இந்து பரிஷத்!
‘குறைந்தது 3 குழந்தைகளையாவது பெற்றெடுங்கள்’ – இந்துக்களை வலியுறுத்தும் விஸ்வ இந்து பரிஷத்!
கேள்வி எழும்போது விசாரணை செய்யுங்கள்! - வேங்கை வயல் விவகாரத்தில் விஜய் ஆவேசம்
கேள்வி எழும்போது விசாரணை செய்யுங்கள்! - வேங்கை வயல் விவகாரத்தில் விஜய் ஆவேசம்
Coimbatore PowerCut: கோவை மக்களே.!  நாளை (27.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது.!
Coimbatore PowerCut: கோவை மக்களே.! நாளை (27.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது.!
TRUST Exam: மாணவர்களே.. மீண்டும் தேர்வு ஒத்திவைப்பு; அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ அறிவிப்பு
TRUST Exam: மாணவர்களே.. மீண்டும் தேர்வு ஒத்திவைப்பு; அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ அறிவிப்பு
குடியரசு தின விழா.. கொடியேற்றிய ஆட்சியர்! சிறப்பாக நடந்த விருதுகள் வழங்கும் விழா..
குடியரசு தின விழா.. கொடியேற்றிய ஆட்சியர்! சிறப்பாக நடந்த விருதுகள் வழங்கும் விழா..
NEET 2025 New Pattern: மாணவர்களே மறக்காதீங்க; நீட் தேர்வு வினாத்தாளில் முக்கிய மாற்றம்- என்டிஏ அறிவிப்பு
NEET 2025 New Pattern: மாணவர்களே மறக்காதீங்க; நீட் தேர்வு வினாத்தாளில் முக்கிய மாற்றம்- என்டிஏ அறிவிப்பு
Embed widget